Jun 30, 2010

மாநாட்டு நிகழ்வுகளில் இந்த அளவுக்கு கனிமொழி பிரதானப்படுத்தப்பட்டது சரியா?

               
                                                          

                 '' ராஜ்ய சபா எம்.பி-யான கனிமொழியை''மாநாட்டு நிகழ்வுகளில் இந்த அளவுக்கு கனிமொழி பிரதானப்படுத்தப்பட்டது சரியா?'' என்ற ஆதங்கமான கேள்விகளும் கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.


ஆய்வரங்க நிகழ்வுகளில் கருணாநிதி பற்றி சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள்கூட யாரையும் நெருட வில்லை.



மகள் கனிமொழி பற்றியும் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதில்... தமிழறிஞர்களுக்கு முகச்சுளிப்பு!


                        'கலைஞரின் பேசும் கலை வளர்ப்போம்', 'தொல்காப்பிய பூங்கா', 'கலைஞர் உரைத் திறன்', 'கலைஞரின் சிலப்பதிகாரத்தில் நாடகக் கூறுகள்', 'கருணாநிதி கடிதங்களில் இலக்கிய ஆளுமை', 'கருணாநிதியின் சிலப்பதிகார நாடகம்' போன்ற தலைப்புகளில் சுமார் 20 ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டன.

                       
                       கனிமொழி பற்றி மூன்று தலைப்புகளில்! அந்தக் கட்டுரைகளின் பொருளடக்கமும் சரி... சமர்ப்பித்தவர்களின் விஷயஞானமும் சரி... அந்த அரங்கத்திலேயே காற்று இறங்கிப் போனது இன்னும் சோகம்!
                      
                        'கவிஞர் கனிமொழியின் கவிதைகளில் பெண் மன உணர்வுச் சித்திரிப்பு' என்ற தலைப்பில் வெ.கலைச்செல்வி என்பவர் ஓர் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார்.
                       
                                     'கனிமொழியும் கவிதை மொழியும்' என்ற தலைப்பில் பெ.பகவத்கீதா என்பவர் இன்னொரு கட்டுரையைப் படித்தார். இந்த இரு ஆய்வுகளையும் மையமாக வைத்து, அந்த அரங்கில் நடந்த விவாதங்கள் ..


                            குமாரபாளையம் அரசுக் கல்வியியல் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகஇருக்கும் வெ.கலைச்செல்வி என்பவர், கனிமொழியின் 'கருவறை வாசனை' புத்தகத்தைச் சுட்டிக்காட்டி, 'பெண் அடிமைக்கு எதிராக கனிமொழி குரல் கொடுத்து இருக்கிறார்!' எனச் சொல்ல... அதை வைத்தே விவாதம் விறுவிறுப்பாகத் துவங்கியது. இந்த அரங்கத்துக்குள் அங்கீகரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட கேள்வியாளர்கள் மொத்தமே 10 பேர்தான் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் எழுந்து, 'கனிமொழி எத்தனை கவிதைத் தொகுப்புகள் எழுதி இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?' என முதல் கேள்வியைப் போட்டார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் கொஞ்சம் நேரம் தயங்கி, எதையோ யோசித்த போஸில் நின்றார் கலைச்செல்வி. கேள்வி கேட்டவரே கனிமொழி எழுதிய மூன்று புத்தங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, ''அவர் எழுதிய புத்தகங்களின் பெயர்களைக்கூடத் தெரிந்துகொள்ளாமல் எப்படி ஆய்வுக் கட்டுரை எழுதினீர்கள்?' என்று மடக்கினார். ''நான் 'கருவறை வாசனை' பற்றி மட்டும்தான் ஆய்வு செய்தேன்!' என்று சமாளித்தார் கலைச்செல்வி. இதில் சமாதானம் அடையாத கேள்வியாளர், 'ஆய்வு என்பது சம்பந்தப்பட்டவருடைய எல்லா எழுத்துகளையும் படித்துவிட்டு அவற்றில் இருந்து நீங்கள் அறிந்துகொண்டதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, பொத்தாம் பொதுவான கட்டுரையாக இருக்கக்கூடாது!' எனச் சொல்ல, கலைச்செல்வியின் முகம் இருண்டது.'எங்கள் கல்லூரியின் பாடத் திட்டத்தில் 'கருவறை வாசனை' உள்ளது. அதனால், அதை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டேன்!' என்று  சொன்னார்.
                                   
                           அடுத்து இன்னொரு கேள்வியாளர், 'கனிமொழி மட்டும்தான் பெண் விடுதலைக்குப் பாடுபட்டாரா? பெண் விடுதலைக்குப் பெரியார் ஆற்றிய பங்கு உங்களுக்குத் தெரியாதா? பாரதியாரும் பாரதிதாசனும் பெண்ணுரிமைக்காக எழுதியவர்கள்தானே? அவர்களின் பார்வையையும் கனிமொழியின் பார்வையையும் நீங்கள் ஒப்பிட்டுக் காட்டி இருந்தால் உங்கள் ஆய்வு மெச்சத்தக்கதாக இருந்திருக்குமே... அத்தகைய முயற்சிகள் எதுவும் உங்கள் ஆய்வில் இல்லையே...' என்றார். இந்தக் கேள்விக்கும் கலைச்செல்வியிடம் பதில் இல்லை. ஆனாலும் கேள்விகள் நின்றபாடில்லை!
                                  
                            அடுத்ததாக பூங்கொடி என்கிற பெண் எழுந்து, 'சுயக் கருத்துகளைச் சொல்வது கவிதை மொழி. பெண்மைக்கான விஷயங்களைச் சொல்வது பெண் மொழி. கனிமொழி தன் கவிதையில் சொல்லி இருப்பது பெண் மொழியா... கவிதைமொழியா? இதை எப்படி வேறுபடுத்தி இருக்கிறீர்கள்?' என்றபோது... கலைச்செல்வி  அசந்துபோனார். ''கேள்வியை மீண்டும் ஒரு முறை சொல்ல முடியுமா?'' என்று சுரத்தே இல்லாமல் கேட்டார். மீண்டும் ஒருமுறை அதே கேள்வி கேட்கப்பட்டது. கொஞ்சம் நேரம் எங்கோ வெறித்துப் பார்த்துவிட்டு, ''கனிமொழியின் கவிதை மொழியை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டேன்!'' என்று பதில் சொன்னார் கலைச்செல்வி. உடனே பூங்கொடி முகத்தில் எந்த ரியாக்ஷனையும் காட்டிக்கொள்ளாமல் லேசாக உதட்டைப் பிதுக்கியபடி அரங்கத்தைவிட்டே எழுந்து போனார்!
                                    
                          அடுத்து பெ.பகவத் கீதா 'கனிமொழியும் கவிதைமொழியும்' என்கிற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வைத்தார். இந்த ஆய்வுக்கும் சரமாரி கேள்விகள்! முதலில் எழுந்த ஒரு கேள்வியாளர், 'கருவறையின் வாசத்தை ஆண்கள் உணர்ந்தது இல்லையா? ஆண்களைப்பற்றியும் கனிமொழி எழுதி இருப்பது உங்களுக்குத் தெரியுமா? 'சிகரங்களில் உறைகிறது காலம்' என்ற புத்தகத்தில் தந்தையரைப் பற்றியும் அவர் பாடி இருக்கிறாரே..?' என்று அடுக்கிக்கொண்டே போனார் கேள்விகளை. பகவத்கீதா, 'நான் பெண்மை தொடர்பான விஷயத்தை மட்டுமே எடுத்துக்கொண்டேன். அவ்வளவுதான்!' என்றார். பழனிசாமி என்பவர் எழுந்து, 'உங்கள் ஆய்வுக் கட்டுரை முழுக்கப் பாராட்டு மழையாக அல்லவா இருக்கிறது. நடுநிலையான விமர்சனம் எதுவும் இல்லையே? கனிமொழியின் படைப்புகளில் இருக்கும் முரண்பாடுகள் பற்றி நீங்கள் எதையும் குறிப்பிடவில்லையே... ஏன்?' என ஒன்றுக்குள் ஒன்றாகப் பல கேள்விகளை அடுக்க, ' அதுபற்றி எல்லாம் ஆய்வு செய்யவில்லை!' என்று பகவத்கீதா பதில் சொன்னாரே பார்க்கலாம்.
                                             
                          இதைக் கேட்டு அரங்கமே ஒரு நிமிடம் அமைதி காக்க, 'ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதற்கும் அவையடக் கத்துக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமே புரியவில்லையே?'' என்று இன்னொரு கேள்வியாளர் அரங்கத்தின் அமைதியைக் கலைத்தார். தொடர்ந்து அவரே, ''எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றிய நன்மை - தீமையை அலசி ஆராய்ந்து சொல்வதுதான் ஆய்வுக் கட்டுரை! ஒருவரைப் பாராட்டி எழுதுவது ஆய்வுக் கட்டுரையே இல்லை. அதை வெறும் கட்டுரை என்றுதான் சொல்ல முடியும்!' என்று ஆவேசமாகக் குரல் எழுப்பினார். நல்ல வேளை இந்தக் கேள்விக்கு பகவத்கீதா பதில் சொல்ல அரங்கத் தலைவர் கனல்மைந்தன் அனுமதிக்கவில்லை. காரணம் நேரமின்மைதான்!
                                         
                              அரங்கத்தைவிட்டு வெளியே வந்த சில அறிஞர்கள் , கசப்போடு சில விஷயங்களைப் பேசினார்கள் -'ஆய்வுக் கட்டுரைகளை மாநாட்டில் சமர்ப்பிக்கத் தேர்வாவதே முதலில் எளிதான காரியம் அல்ல. எடுத்துக்கொண்ட தலைப்பை வைத்து, பல புத்தகங்களைப் படித்து ஆராய்ந்து, நடுநிலைமை மாறாமல், தனிமனிதப் பாராட்டுதல் இல்லாமல் உருவாக்கப்படுவதுதான் உண்மையான ஆய்வு. கனிமொழி என்ற தனிநபரைப் பாராட்டி மட்டும் மேம்போக்காக நுனிப் புல் மேய்ந்துவிட்டு இங்கே கட்டுரைகளைச் சமர்ப்பித்து இருப்பது அபத்தம். இந்த மாதிரி கட்டுரையின் மூலம் குறிப்பிட்ட தனிநபரைத் திருப்திப்படுத்தும் நோக்கம் மட்டுமே நிறைவேற முடியும். இப்படிப்பட்ட கட்டுரைகளை ஆய்வுக்குத் தேர்வு செய்வதையே மாநாட்டுக் குழுவினர் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால், ஆய்வரங்கம் வரைக்கும் இதுபோன்ற கட்டுரைகள் வந்திருக்கின்றன என்றால்... இவற்றைத் தேர்வு செய்த குழுவில் இருப்பவர்களும் இந்த புகழ்ச்சியை விரும்பி இருக்கிறார்கள் என்று அர்த்தம்'' என்றார்கள்


                                       கனிமொழிக்கு கலைஞரின் வாரிசு என்பதைத் தவிர, மற்றவர்கள் அதற்காக அடிக்கும் உடுக்கை ஒலியைத்தவிர
ஆற்றிய பங்கு வேறு ஏதேனும் இருப்பதாகத் தெரியவில்லை.. ஏதேனும் பெரிதாக தமிழாராய்ச்சி செய்திருக்கிறாரா.. டி. லிட் செய்திருக்கிறாரா.. ஏதும் இல்லை.. பெரிய தோட்டத்திலே பூத்த பூ என்ற அடையாளத்தோடு வலம் வருகிறார்.. ஆதிக்க சாம்ராஜ்யத்தில் தனக்கொரு பங்கு வேண்டும் என்று வந்து நின்றிருக்கும் பங்காளி.. கஷ்டப்பட்டு மாநாடு நன்றாக நடக்க வேண்டும் என தந்தைக்கு மகளாற்றும் உதவியாக இருந்தார் என்பதைத் தவிர வேறு என்ன செய்தார் நிலைகொள்வது என்பதற்கு என்பதை இந்த தேர்தலுக்கு அப்புறம் பார்க்க வேண்டும்.. திமுக ஜெயித்தால் இருப்பார்.. இல்லாவிடில் சிங்கப்பூர் விசா இருக்கவே இருக்கிறது... 



                    அம்மா கலைச்செல்வி, பகவத் கீதா உங்க ஜால்ரா சத்ததுக்கு அளவே கிடையாதா?  ஜால்ரா சத்தம் உலகம் பூரா எதிரொலிச்சிருக்கு, கொஞ்சம் பாத்து மெதுவா அடியுங்க''''.


Jun 25, 2010

கிளம்பிற்று தமிழ்ச்சிங்கக்கூட்ட ஜால்ராக்கள்

                               செம்மொழி மாநாட்டின்  கவியரங்கம் .

ஜால்ராக்கள் அனைவரும், தமிழ் புகழ் பாடுவதற்கு பதிலாக, கலைஞர் புகழ் பாடுகின்றனர். இதற்காகத்தானே 500 கோடி செலவு செய்தது  இந்த அரசு.     ஐயா கவிஞர்களே கலைஞரை புகழத்தான் ஒரு மாநாடு அப்படின்னு சொன்னத நிருபிசிடிங்க.இது தமிழுக்கு விழாவா தமிழை யாரும் வாழ்த்த வில்லை . கலைஞரை தான் மூச்சுக்கு முன்னுறு தடவை வாழ்த்தரங்க என்னமோ இவர் ஒருத்தர் தான் தமிழன் மாதிரி இந்த ஜனங்களும் ஆட்டு மந்தைகள அங்க போய் குவிதுங்க மொத்தத்தில் 500 கோடி வேஸ்ட்.  10 ரூபா சம்பதிக்கனும்னா எவ்வளவு கஷ்டம்னு மக்களுக்கு தான் தெரியும் அதை எவ்வளவு ஈஸியா செலவு செய்யறாங்க இந்த பாவத்தை நல்ல அனுபவிப்பாங்க.

                                                                                                  


            ஒவ்வொரு கவிஞருக்குமே தனித்தனி தலைப்பு கொடுக்கப் பட்டிருந்தாலும் எல்லாமே ஒரே மாதிரி இருந்தன. குறிப்பாகத் தலைப்பு சம்பந்தமாகவோ, தமிழ் சம்பந்தமாகவோ எதுவும் இல்லை. எல்லாருக்குமே கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென்று தெரிந்திருக்கிறது.

கவிஞர் வைரமுத்து .கவிதை
     
    இயக்கத்தின் தலைவராக இருந்த நீங்கள் மக்கள் இதயத்தில் வீற்று இதயத்தலைவராக இருக்கின்றீர்கள், வீடு தந்தீர்கள், இந்திய அரசியல் படம் போட்ட வீடு , தியாகத்தில் நீ புடம் போட்ட வீடு தந்தீர்கள், அறம் ,பொருள், இன்பம் என 3 தந்தார் வள்ளூவர், ஆனால் நீ இத்துடன் வீடும் ‌கொடுத்து வள்ளூவரை வென்று விட்டீர்கள், , கலைஞருக்கு தமிழ் உலகம் நன்றி சொல்ல வேண்டும், கலைஞர்தான் மறுபடியும் முதல்வராக வேண்டும்

நா.முத்துக்குமார்  கவிதை
               
                               தலை வைத்ததால் தண்டவாளம் கூட தமிழ் பேச கற்றுக்கொண்டது. கலைஞர் கால் வைத்ததால் கோவை மாநகர் செம்மொழி மாநாடு நடக்கும் தகுதி பெற்றது.கலைஞர் திரை உலகை வென்றவர், எல்லோரது பேனாவும் மீன் பிடிக்கும், கலைஞர் பேனா விண்மீன் பிடிக்கும், கலைஞரும், கடிகாரமும் ஓன்று . இவ்வாறு  கவிதை படித்தார்.

நெல்லை கவிஞர் ‌ஜெயந்தா கவிதை
          
                                      அரச மரம் அருகே ஆல மரம் இருக்கும். இதில் விழுதுகள் இருக்கும் ஆனால் நீ அதிசய ஆலமரம் எனவே உனக்கு அருகே விருதுகள் இருக்கிறது. வைகை கூட தன்மானம் உள்ளது இது போல தமிழின் தன்மானம் காக்க கலப்படம் இல்லாத கண்ணீராக இருக்க வேண்டும்.  கண்ணில் கவர்ச்சி, கண்ணத்தில் குழி இருப்பது போல், நாக்கில் மொழி இருக்கட்டும்.  அந்த வள்ளூவன் தமிழ் கிடைத்தபோது அதிகாரங்களை பாடினான். இவர் அதிகாரம் கிடைத்த போதெல்லாம் தமி‌ழை பாடினார். தன்மானம் காத்த தமிழ்தலைவர்கள் பெயர்களை உயிருள்ளவரை நாக்கில் பச்சைக்குத்திக்கொள்வோம்.

 தமிழச்சி தங்கபாண்டியன் கவிதை

                                 இக்காலத்து இளங்கோ நீ, உனது உமிழ்நீர் கூட தமிழ்நீர் தான் உனக்கு, ஏழைகளின் இக்கால குலோத்துங்கன், குடிசைவாசிகளுக்கு கான்கிரீட் வீடு கொடுத்த கரிகாலன், செம்மொழி மாநாட்டிற்கு கோவையை தேர்வு செய்த தமிழ்கால பாண்டியன், பாட்டுடை தலைமகனே, செம்மொழி நாயகனே !  கருணாநிதியை வர்ணித்தார்.

ஈரோடு தமிழன்பன்,கவிதை

                    "கலைஞர் என்பதுதாயின் ஆண்பால் பெயர்.அவர் வேட்டி கட்டுகிறார்,ஆனால், அவர் இதயம் எப்போதும்
கசங்காத புடவையோடு தான்...அவரது கபால களஞ்சியத்தில்ஆண் எண்ணங்களை விட,
ஈரப்பெண் எண்ணங்களே அதிகம்.இல்லாவிட்டால் கோபாலபுரம் வீட்டைகொடையாக தரமுடியுமா?
அந்த அவ்வையார் காலத்தில்இவர் இருந்திருந்தால்,அதியமான் ஏமாந்திருப்பான்.
அவனுடைய சங்கப்பாடலுக்கு எல்லாம்இவர் சபாநாயகர் ஆகியிருப்பார்..

கவிஞர் விவேகா .கவிதை

 எதுகை மோனையில் முதல்வரை புகழ்ந்துபாடிய இவர்..."சென்னைக்கு தெற்கே உள்ளதிருக்குவளையின் தான்,
தமிழுக்கு கிழக்கு பிறந்தது...'எனத் துவங்கி, முதல்வர் கருணாநிதியை ராஜதந்திரி, முந்திரி, பாதிரி, ஒரு மாதிரி என அடுக்கிக்கொண்டே போனார். இவரது பேச்சின் போது, அரங்கில் இருந்தோரில் பலரும் நெளிந்தனர். காரணம், இவருக்கு அளிக்கப்பட்டிருந்த தலைப்பு, "சமத்துவம் பூக்க... கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக்கூட்டம்' என்பது; ஆனால், தலைப்புக்கு பெரும்பாலும் தொடர்பில்லாமலே இறுதிவரை நேரத்தை கரைத்து முடித்தார்.

 பேராசிரியர் கருணாநிதி  கவிதை

. "அய்யா, நீங்கள் நடந்து வரும் போது இருவர் மீது கைவைத்து வருகிறீர்கள். இதற்கு காரணம், அகவையல்ல (வயது); தம்பிகளின் இதயங்களையெல்லாம் உங்கள் இதயத்தில் சுமப்பதினால் பாதம் தாங்காமல், இருவர் தோள் மீது கைவைத்து வருகிறீர்கள்...' என்றார். மேலும், "தமிழர்களே... பொங்கலுக்கு கரும்பை வைத்து கும்பிடுகிறீர்கள் இனிமேல், தலைவர் தலைவைத்து படுத்த இரும்புத் தண்டவாளத்தையும் கும்பிடுங்கள்...' என்றார்.

மரபின் மைந்தன் முத்தையா கவிதை

"எத்தனை வேகமாய் எல்லாம் நடந்தது?மண்ணெடுத்தார் மாலையிலேதார் தெளித்தார் இரவினிலே
காலையில் கண் விழுத்து பார்க்கையிலேகண்ணாடி போல மின்னியது சாலை.சறுக்கிவிட்ட பள்ளங்கள் சமச்சீராய் ஆனதுவழுக்கிவிட்ட சாலையிலே வாகனங்கள் போகிறதுவெறிச்சோடி கிடந்த வீதி சந்துகளும்
குளித்து தலைமுழுகி கலகலப்பாக இருக்கிறது. துணைமுதல்வர் வந்து வந்துதூண்டிவிட்ட காரணத்தால்
இணையில்லா வெளிச்சத்தில்ஜொலிக்கிறது எங்கள் கோவை...' என்றார்.


கலைஞரின் பேத்தி கயல்விழி வெங்கடேஷு கவிதை 


அவர் வாசித்த அழகைப் பார்த்தால் சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் பிறந்து வளர்ந்திருப்பார் என்று தோன்றியது. மா.....................றி விடும், கலைங்கர் அவர்கல் ச்செம்மொழியின் காவழர் என்றெல்லாம் முழங்கியபோது செம்மொழி சீக்கிரம் செத்துவிடும் என்று தோன்றியது.

அடுத்து, "தன்மானம் காக்க...' என்ற தலைப்பில் நெல்லை ஜெயந்தா, "தாய்த்தமிழ் வளர்க்க...' என்ற தலைப்பில் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கவிதை வாசித்தனர். மூன்றரை மணி நேரம் முழங்கியமுழக்கத்தை, முதல்வர், துணைமுதல்வர் உள்ளிட்டோர் ரசித்து கேட்டனர்.

          ஜால்ராக்கள் அனைவரும், தமிழ் புகழ் பாடுவதற்கு பதிலாக, கலைஞர் புகழ் பாடுகின்றனர். இதற்காகத்தானே 500 கோடி செலவு செய்தது  இந்த அரசு.     ஐயா கவிஞர்களே கலைஞரை புகழத்தான் ஒரு மாநாடு அப்படின்னு சொன்னத நிருபிசிடிங்க.இது தமிழுக்கு விழாவா தமிழை யாரும் வாழ்த்த வில்லை . கலைஞரை தான் மூச்சுக்கு முன்னுறு தடவை வாழ்த்தரங்க என்னமோ இவர் ஒருத்தர் தான் தமிழன் மாதிரி இந்த ஜனங்களும் ஆட்டு மந்தைகள அங்க போய் குவிதுங்க மொத்தத்தில் 500 கோடி வேஸ்ட்.  10 ரூபா சம்பதிக்கனும்னா எவ்வளவு கஷ்டம்னு மக்களுக்கு தான் தெரியும் அதை எவ்வளவு ஈஸியா செலவு செய்யறாங்க இந்த பாவத்தை நல்ல அனுபவிப்பாங்க.
                                                                                           
                                                                                              இது மக்களின் சாபம் .

                          

Jun 19, 2010

உண்மை நிலை என்ன

J.JAYALALITHAA


சென்னை, ஜூன் 19,2010 : இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வுக்காக, 18 அம்சத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முகாம்களில் உள்ள தமிழர்கள் மீள்குடியேற்றம் செய்யும் முறை, அவர்களின் விவசாயம், தொழில் முதலியவற்றுக்காக அடித்தளம் அமைத்தல், பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களுக்கு மறுவாழ்வு, குழந்தைகளின் கல்வி உள்ளிட்டவை அவரது 18 அம்ச திட்டங்களில் இடம்பெற்றுள்ளன.
மேலும், தற்போதையச் சூழலில், கோவையில் நடக்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தேவையற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையின் விவரம்: 
"இலங்கையில் போர் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் அங்குள்ள லட்சக் கணக்கான தமிழர்கள் எந்தவித வசதியும் இல்லாமல் அகதிகளாக, அனாதைகளாக, அடிமைகளாக முகாம்களில் கட்டாயமாக அடைக்கப்பட்டு அவல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சென்ற ஆண்டு இலங்கையில் போர் முடிந்தவுடன், கனிமொழி உட்பட தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்ததமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்குச் சென்று இலங்கை அதிபரை சந்தித்து, இலங்கைத் தமிழர் களுக்கு மறு வாழ்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து விட்டு வந்தனர்.
இலங்கை அதிபரும் 2009 ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கைத் தமிழர்கள் முன்பு வாழ்ந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்று அவர் களிடம் உறுதி அளித்தார். ஆனால், இன்னமும் அதே நிலைமை தான் அங்கு நீடிக்கிறது.

அண்மையில் இலங்கை அதிபர் பாரதப் பிரதமரை சந்திக்க இந்தியாவிற்கு வருகை புரிந்துவிட்டுச் சென்றார். இலங்கை அதிபர் வருகிறார் என்ற உடனேயே, இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்ப இலங்கை அதிபரை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என பாரதப் பிரதமருக்கு வழக்கம் போல் கடிதம் எழுதியுள்ளார் கருணாநிதி.
உடனே பாரதப் பிரதமரும், இந்த ஆண்டு இறுதிக்குள் 47 ஆயிரம் தமிழர்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை அதிபர் தன்னிடம் உறுதி அளித்த தாக கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
                   
                      உண்மை நிலை என்ன?

உண்மை நிலையோ தலைகீழாக உள்ளது. வட இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருவதாகவும்; தமிழர்களின் பண் பாடு, சமயம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படு வதாகவும்; தமிழ்ப் பெயரில் இருந்த சாலைகளுக்கு சிங்களப் பெயர்கள் வைக்கப்படுவதாகவும், தமிழ் ஊர்களுக்கு சிங்களப் பெயர்கள் இடப்படுவதாகவும்; இதன் மூலம் அங்குள்ள நிலங்கள் எல்லாம் சிங்கள நிலங்கள் என்று திரித்துக் கூற முயற்சி நடப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
போரின் போது சிதைந்து போன தமிழர்களின் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றை கட்டித்தர நடவடிக்கை எடுக்காமல், புத்த விகாரைகள் புதிது புதிதாக கட்டப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. மொத்தத்தில் தமிழ்ப்பகுதிகள் சிங்கள மயமாக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புவது என்பது எப்படி சாத்தியமாகும் என்று புரியவில்லை. 1,000 கோடி ரூபாய் மதிப்பில் 50,000 வீடுகள் கட்டித் தர இருப்பதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.
ஏற்கெனவே மத்திய அரசின் சார்பில் 500 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டதே? அந்த நிதி இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்விற்காக எந்த அளவிற்கு உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை மத்திய அரசு கேட்டறிந்ததா?

2009 ஆம் ஆண்டு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்கு சென்று தமிழர்களின் மறுவாழ்வு குறித்துக் கேட்ட போது, அந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார் இலங்கை அதிபர். தற்போது, பாரதப் பிரதமரிடம் இந்த ஆண்டு இறுதிக்குள் 47,000 தமிழர்கள் குடியமர்த்தப்படுவதாக உறுதி அளித்து இருக்கிறார்.

இந்த உறுதிமொழியெல்லாம் வாயளவில் தான் இருக்கின்றதே தவிர செயல்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.


                18 அம்ச திட்டங்களாவன..


1. இலங்கை வடபகுதி முகாம்களில் இன்னும் 1 லட்சம் பேர் ஆதரவற்றவர்களாய் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.
2. மறு குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணம் செய்து தரப்பட வேண்டும்.

3. அழிக்கப்பட்ட விவசாய நிலங்கள் சீரமைக்கப்பட வேண்டும்.
4. அழிக்கப்பட்ட நீர் ஆதாரங்கள் சரிசெய்யப்பட வேண்டும்.
5. மக்களுக்கு கல்வி கொடுக்கப்பட வேண்டும்.
6. கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும்.

7. புதிய பள்ளிகள் கட்டப்பட வேண்டும்.
8. பழைய பள்ளிகள் புனர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும்.
9. போரினால் கணவனை இழந்த விதவைகளுக்கு மறு வாழ்வு அளிக்கப்பட வேண்டும்.

10. போரினால் கற்பழிக்கப்பட்ட சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் கவுன்சிலிங் தரப்பட வேண்டும்.
11. கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் புனர் நிர்மாணம் செய்து தரப்பட வேண்டும்.

12. கோயில்கள், தேவாலயங்கள், புத்த மடாலயங்களாக ஆக்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
13. போரில் ஊன முற்றவர்களுக்கு சிகிச்சையும், மறுவாழ்வும் தர வேண்டும்.

14. ஆண்கள் குறைந்துவிட்டதால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மன ரீதியான அழுத்தம் போக்கப்பட வேண்டும்.
15. பெண்களே நடத்தும் தொழிற்கூடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

16. வருகின்ற அனைத்து நிவாரண உதவிகளும் தமிழ்மக்களுக்கு சரியான முறையில் சென்றடைய வேண்டும்.
17. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும்.

18. பத்திரிகையாளர்கள் தமிழர்களை சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும்.


        இவற்றையெல்லாம் நிறைவேற்றிய பின்னர், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசி மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் உலகமே எதிர்பார்க்கின்றது.  சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், தமிழர்கள் எதிர்பார்க்கும் உரிமையும், சுய மரியாதையும் கொண்ட சமூகம் இலங்கையில் அமைக்கப்பட்ட பின்னரே தமிழ்நாட்டில் மாநாடு நடத்தப்பட வேண்டும்," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Jun 16, 2010

இன்ஜினீயரிங் கவுன்சிலிங்

இன்ஜினீயரிங் கவுன்சிலிங்

                                     ன்ஜினீயரிங் கவுன்சிலிங் 
                                                                            


                               ன்ஜினீயரிங் கவுன்சிலிங்! லட்சக் கணக்கான மாணவர்களின் எதிர்காலக் கனவை நனவாக்கும் முதல் புள்ளி. தரமான கல்வி கற்பித்து, சிறந்த வேலைவாய்ப்பி னையும் ஏற்படுத்திக் கொடுக்கும் பொறியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணங்களில் சேர இன்ஜினீயரிங் கவுன்சிலிங்தான் ஒரே வாசல். நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், ப்ளஸ் டூ மதிப்பெண்கள் மட்டுமேதான் கவுன்சிலிங்கில் பரிசீலிக் கப்படும். ஜூன் 25 தொடங்கி, சென்னையில் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நடக்கும் கவுன்சிலிங். ஏற்கெனவே விண்ணப்பித்திருப்பவர்கள்தான் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள முடியும். கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளும் முன் மாணவர்களும் அவர்தம் பெற்றோர்களும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 454 பொறியியல் கல்லூரிகளின் 1,82,000 இடங்கள் அரசால் நிரப்பப்படும். மீதம் உள்ள 74,000 இடங்களை மேனேஜ்மென்ட் கோட்டா அடிப்படையில் கல்லூரி நிர்வாகத்தினர் நிரப்பிக்கொள்வார்கள். அரசால் நிரப்பப் படும் அந்த 1,82,000 இடங்களுக்குத்தான் இந்த கவுன்சிலிங் நடக்கவிருக்கிறது!

கட் ஆஃப் மதிப்பெண்கள்!


ப்ளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் தான் ஒருவரது ரேங்க் நிர்ணயிக்கப்படுகிறது என்பதால்,

அதிக மதிப்பெண் பெற்றவர் களுக்கு கவுன்சிலிங்கின் முதல் நாளில் இருந்து அழைப்பு இருக்கும். ப்ளஸ் டூ தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களைத் தலா 200 மதிப் பெண்களுக்கு எழுதி இருப்பீர்கள். இதில் ஒரு மாணவர் கணிதத்தில் 200-க்கு எடுத்த மதிப்பெண்களை 100-க்குக் கணக்கிடுவார்கள். அதேபோல இயற்பியலில் 200-க்கு எடுத்த மதிப்பெண்களை 50-க்குக் கணக்கிடுவார்கள். வேதியியலுக்கும் இதே நிலை. ஆக, கணிதம் 100, இயற்பியல் மற்றும் வேதியியல் தலா 50 என மொத்தம் 200-க்குக் கணக்கிடப்படும் மதிப்பெண்கள்தான் அவரது கட் ஆஃப் மதிப்பெண்கள்!
 

'ரேண்டம் நம்பர்' என்றால் என்ன?


                  சரிசமமான கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர் களுக்கு ரேங்க் நிர்ணயிப்பதில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதற்குத் தீர்வு காணத்தான் கவுன்சிலிங் விண்ணப்பத்தில் 'ரேண்டம் நம்பர்' (random number) என்ற ஒன்றைக் குறிப்பிட்டு இருப்பார்கள். கிட்டத் தட்ட ஒரு டோக்கன் போலத்தான் இந்த ரேண்டம் எண். இரண்டு மாணவர்கள் கட் ஆஃப் மதிப்பெண்களில் 200-க்கு 190 எடுத்திருக்கும் போது, அவர்கள் இருவருக்கும் ஒரே ரேங்க் தர முடியாது. அப்போது அவர்களில் யார் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்களோ, அவருக்கு அதிகப்பட்ச ரேங்க் வழங்குவார்கள். இருவரும் கணிதத்தில் நூற்றுக்கு நூறோ அல்லது அதிலும் ஒரே மதிப்பெண்கள் எடுத்திருந்தால், இயற்பியலில் யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறாரோ அவருக்கு முன்னுரிமை அளிப்பார்கள். அதிலும் ஒரே மதிப்பெண் சிக்கல் இருந்தால், வேதியியல் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த மூன்று பாடங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அடுத்து அவர்களின் பிறந்த தேதியைக் கணக்கில்கொள்வார்கள். அதில் யார் மூத்தவரோ, அவருக்கு முன்னுரிமை. இருவரும் ஒரே தேதி, ஒரே வருடத்தில் பிறந்திருந்தால், அப்போதுதான் இந்த ரேண்டம் நம்பருக்கு வேலை வரும். இருவருக்கும் வழங்கப்பட்ட ரேண்டம் நம்பரில் எவருடையது குறைந்த மதிப்பு உள்ளதோ, அவருக்கு ரேங்கில் முன்னுரிமை தரப்படும். தவிர்க்கவே முடியாத சூழலில்தான் இந்த ரேண்டம் நம்பர் பயன்பாட்டுக்கு வரும். இதனால், நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது!


கவனத்தில்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்...


                      கவுன்சிலிங்கில் ஒரு முறை கல்லூரியையும், பாடப் பிரிவையும் தேர்வு செய்துவிட்டால், அதுவே இறுதியானது. மாற்ற இயலாது.


தவிர்க்க இயலாத காரணங்களால் கவுன்சிலிங்குக்கு வர முடியாத மாணவர்களுக்குப் பதிலாக, அவர்களின் பெற்றோர் கலந்துகொள்ளலாம். அந்தச் சமயத்தில் பெற்றோர் எடுக்கும் முடிவே இறுதியானது.


கவுன்சிலிங்கில் நீங்கள் ஏதேனும் ஒரு கல்லூரியைத் தேர்வு செய்துவிட்டால், உடனடியாக 5,000 ரூபாய் டெபாசிட்டாகக் கட்ட வேண்டிஇருக்கும். எஸ்.சி., எஸ்.டி பிரிவு மாணவர்களுக்கு இது 1,000 ரூபாய் மட்டுமே!



கவுன்சிலிங்கின்போது தேர்வு செய்த கல்லூரியில் சேராத மாணவர் முதலில் செலுத்திய டெபாசிட் பணத்தைத் திருப்பிக் கேட்கலாம். அப்போது கவுன்சிலிங் சமயத்தில் டெபாசிட் தொகை செலுத்தியதற்கான ரசீதை 31.10.2010-க்குள் ஒப்படைத்தால் 80 சதவிகிதத் தொகை திருப்பி அளிக்கப்படும்!


மறுகூட்டலுக்குப் பிறகு புதிய மதிப்பெண்கள், புதிய ரேங்க் பெற்றிருந்தால், பழைய மதிப்பெண்ணுக்குக் கொடுத்த தேதி மாறி இருந்தாலும் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளலாம்!



கல்லூரிகளைத் தேர்வு செய்யும்போது மாணவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

முறையான அங்கீகாரம்!


காற்றோட்டமான வகுப்பறைகள், நல்ல முறையில் இயங்கும் பரிசோதனைக் கூடங்கள், நூலகங்கள், விடுதி வசதிகள், விளையாட்டு மைதானங்கள் போன்ற அடிப்படைக் கட்டுமானங்கள் நல்ல முறையில் இருக்கின்றனவா எனக் கவனித்தல்.


பேராசிரியர்களின் படிப்பு, அனுபவம் ஆகியவை.
கல்லூரி அமைந்திருக்கும் இடத்தில் போக்குவரத்து வசதிகள், மருத்துவமனைகள் போன்றவை.


படிப்பு முடிந்ததும் சிறந்த ப்ளேஸ்மென்ட் வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றனவா என ஆராய்தல்.


பிடித்த பாடத்தை, பிடித்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். பல சமயங்களில் பிடித்த பாடம் கிடைக்கும். ஆனால், விரும்பிய கல்லூரியாக இருக்காது. இல்லையென்றால், விரும்பிய கல்லூரி கிடைக்கும். ஆனால், பிடித்த பாடத்தில் இடம் கிடைக்காது. இதுபோன்ற சமயத்தில், எது நமக்குக் கிடைக்கிறதோ அதை நாம் விரும்பிப் படிக்க வேண்டும்.



நான்கு ஆண்டுகள் கடினமாக உழைத்துப் படித்தால், 40 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழலாம். ஆகவே, என்ன பாடம், எந்தக் கல்லூரியில் கிடைத்தாலும், அதை விரும்பிப் படியுங்கள். மாணவர்கள் கவனிக்க வேண்டிய ஒரே விஷயம், சிறந்த முறையில் அடிப்படை வசதிகள்கொண்ட கல்லூரியாக இருக்கிறதா என்பதுதான்!


சில கேள்விகள்... சில விளக்கங்கள்!


"கவுன்சிலிங் மூலம் கல்லூரியில் சேர்ந்த பிறகு, அங்கு போதிய வசதிகள், தரமான கல்வி அனுபவங்கள் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?"
"முதல் வருடம் அந்தக் கல்லூரியில் படித்துவிட்டு மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு இரண்டாவது வருடப் படிப்பை வேறு ஒரு கல்லூரியில் தொடரலாம்!"


"ப்ளஸ் டூ தேர்வில் ஃபெயில் ஆகி உடனடிச் சிறப்புத் தேர்வு எழுதியவர்கள், தக்க மதிப்பெண்கள் இருந்தால் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள முடியுமா?"
"முடியும். அவர்களுக்கென்று தனியாக 'சப்ளிமென்ட்டரி கவுன்சிலிங்' நடக்கும். அதைப்பற்றிய விவரங்கள் நாளிதழ்களில் வெளியாகும்!"


"வெளியூர்களில் இருந்து கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள பெற்றோருடன் வரும் மாணவர்களுக்கு அரசு ஏதேனும் பயணப் படிகள் தருகின்றனவா?"
"வெளியூர்களில் இருந்து கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள சென்னை வரும் மாணவர் மற்றும் அவருக்குத் துணையாக வரும் ஒருவருக்கு பேருந்து அல்லது ரயில் கட்டணத்தில் 50 சதவிகிதச் சலுகை அளிக்கப்படும். 


இச்சலுகையைப் பெற கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அழைக்கும் கடிதத்தைப் பேருந்து நடத்துனரிடமோ அல்லது ரயில் டிக்கெட் முன் பதிவின்போதோ காண்பிக்க வேண்டும்!"


"தவிர்க்க முடியாத காரணங்களால் குறிப்பிட்ட தேதியில் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள முடியாதவர்கள் அடுத்து வரும் நாட்களில் கலந்துகொள்ள முடியுமா?"
"கலந்துகொள்ளலாம். ஆனால், அவர்களுக்கு வழங்கப்பட்ட ரேங்க் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட நாளைத் தவறவிட்டதால், அடுத்து வரும் நாளில் எந்தக் கல்லூரியில், என்ன படிப்பு இருக்கிறதோ, அதில் ஏதாவது ஒன்றைத்தான் தேர்வு செய்ய முடியும்!