Jun 10, 2010

பா.ம.க., அந்த பக்கம், இந்தப் பக்கம்




பாம்பின் கால் பாம்பு தானே அறியும்..?  
                                           
                                         

  பா.ம.க., அந்த பக்கம், இந்தப் பக்கம் திரும்ப முடியாமல், "ஆப்பு' வைத்து விட்டார் முதல்வர் கருணாநிதி.ஒவ்வொரு தேர்தலின் போதும், எந்தப்பக்கம் பதவி கிடைக்கும், தொடர்ந்து தன் மகன் மத்திய அமைச்சராக இருக்க வேண்டுமென்ற ஆவலில், கொள்கை, கட்சி, கோட்பாடு எல்லாம் காற்றில் பறக்க விட்டு, பதவி சுகம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, ஜெ.,யிடமும், கருணாநிதியிடமும் மாறி மாறி ஓடினார் ராமதாஸ்.          
          
                           இப்போதும் அதே பாணியை கையாண்டார். ஒன்று, எம்.பி., சீட் கொடுப்பார்; இல்லாவிட்டால், விரட்டுவார் என எதிர்பார்த்தால், கூட்டணியில் சேர்த்துக் கொண்டு, "எம்.பி., பதவி 2013ல்' என, கருணாநிதி குண்டை போட்டு விட்டார்.இனி, ஜெ.,யிடம் இவர் ஓட முடியாது; கருணாநிதியையும் விட முடியாது. ஆகவே, 2013 வரை, பதவி இல்லாமல் ஓய்வு எடுக்கலாம். மக்களாகிய எங்களை ஏமாற்றலாம் காரணம் நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல.., ஆனால் உங்களை விட கடைந்தெடுத்த அரசியல்வா(வியா)தியான மு.க._வை ஏமாற்ற இயலுமா? பாம்பின் கால் பாம்பு தானே அறியும்..?     
                          
                                இப்போதைய நிலையில் உங்கள் மகனுக்கு எம்.பி சீட் வாங்கி தரும் சக்தி குஷ்புவிடம் இருக்கிறது.., வேண்டுமென்றால் அங்கு சென்று முயற்சித்து பாருங்களேன்.., செல்லும் போது தலையில் துண்டு போட்டு கொண்டு செல்லுங்கள் யாருக்கும் தெரியாது.., ஆனால் மஞ்சள் துண்டாய் பார்த்து போட்டு கொள்ளுங்கள்.., அல்லது பெண்சிங்கத்தை பற்றி உங்கள் "பெண்மணி" பத்திரிக்கையில் சிறப்பான விமர்சனம் எழுதுங்கள்.., உங்கள் மக்கள் டி.வி_யில் "மானடா மயிலாட" மறு ஒளிபரப்பு செய்யுங்கள்.., அல்லது மு.க_விற்கு ஒரு விருது அறிவித்து பாரட்டு விழா நடத்துங்கள்.., ஏதாவது முயர்சி செய்து கொண்டே இருங்கள்.., முயற்சி உடையார் இகழ்சி அடையார்.., எனவே முயலுங்கள்.., முயன்று கொண்டே இருங்கள்.., இல்லாவிட்டால்              

               தடாலடியாய் பா.ம.க_வை கலைத்து விட்டு தி.மு.க_வில் சேர்ந்து விடுங்கள்.., மகனுக்கு எம்.பி. பதவி கிடைத்த அடுத்த நொடியில் கட்சியை கலைத்தது நானல்ல என்று சொல்லி மக்களுக்கு அல்வா கொடுத்துவிட்டு மீண்டும் பா.ம.க_வை தொடங்கி விடுங்கள்..,                                                                                     
                                                                                                                                                                                  
                     இப்படி பலவகைகளில் சிந்தியுங்கள்..., எல்லா பாட்டாளிகளுக்கும் ரூம் போட்டு கொடுத்து யோசிக்க சொல்லுங்கள்.., எம்.பி சீட் கிடைக்கும் ஆனா........., கிடைக்காது....,  


தொடர்புடைய இடுகை

ராமதாஸ்....ராஜ தந்திரம் //நரித் தந்திரம்

No comments: