Oct 26, 2010

எந்திரன் திருட்டு கதையில் உருவானது. முழு விவரம்!!


 எனது கதையை திருடி எந்திரன் என்ற பெயரில் படம் எடுத்துள்ளனர் என்று படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது எழுத்தாளர் அமுதா பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை, வேளச்சேரி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் அமுதா தமிழ்நாடன். வாரமிருமுறை வெளிவரும் புலனாய்வு இதழில் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  இவர், நேற்று (25ம்தேதி) சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:



நான் எழுதிய "ஜூகிபா எனும் சிறுகதை, "இனிய உதயம் எனும் பத்திரிகையில் 1996ம் ஆண்டு ஏப்ரலில் வெளிவந்தது. தொடர்ந்து 2007ம் ஆண்டில், சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சார்பில் வெளிவந்த "திக் திக் தீபிகா என்ற புத்தகத்திலும் வெளிவந்தது. சமீபத்தில் திரைக்கு வந்த, "எந்திரன் திரைப்படத்தை பார்த்த என் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் நேரிலும், போனிலும் மற்றும் கடிதம் மூலமும், இந்த படம் என் படைப்பான "ஜூகிபா என்ற சிறுகதையை அப்படியே எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சமீபத்தில் நானும் “”எந்திரன்” திரைப்படத்தை திரையரங்கத்தில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எனது “”ஜூகிபா” கதையை மூலக்கதையாக வைத்து சினிமா சங்கதிகளான பாட்டு, சண்டை, கிராபிக்ஸ் காட்சிகளை சேர்த்து “”எந்திரன்” திரைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர்.


இந்திய பத்திரிகை பதிவாளர் முன்பு பதிவு செய்யப்பட்டு பதிவு எண் 49612/1990 கொண்ட “”இனிய உதயம்” இதழில் வெளியான காப்புரிமை கொண்ட எனது “”ஜூகிபா” கதையை என்னிடமோ, இனிய உதயம் வெளியீட்டாளரிடமோ எந்த முன் அனுமதியும் பெறாமல் மோசடி செய்து லாபம் சம்பாதிக்கும் கெட்ட உள்நோக்கத்துடன் திரைப்பட இயக்குநர் சங்கர் 1997-98-ல் தான் கற்பனை செய்தது என்று பொய்யாகக் கூறி “”எந்திரன்” திரைப்படத்தை உருவாக்கி அவரே அதன் இயக்குநராகவும் செயல்பட்டு, சன் பிக்சர்ஸும் அதன் நிர்வாக இயக்குநர் கலாநிதிமாறன் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு கூட்டு சதி செய்து “”எந்திரன்” திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளிலும் வெளியிட்டு எனது காப்புரிமையை சட்டத்திற்கு விரோதமாக உரிமை மீறல் செய்துள்ளனர்.

 இந்திய காப்புரிமை சட்டம் 1957 பிரிவு 63-ன் படி கிரிமினல் குற்றம் புரிந்துள்ள திரைப்பட இயக்குநர் சங்கர் மற்றும் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று ஆரூர் தமிழ்நாடன் கூறியுள்ளார்.

புகார் அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஆரூர் தமிழ்நாடன்,
ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்தின் மூலக்கதையை “இனிய உதயம்’ பத்திரிகையில் கடந்த 1996ஆம் ஆண்டு நான் எழுதி வெளியான “”ஜூகிபா” என்ற சிறுகதையில் இருந்து எடுத்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை ஆணையர், புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்றார்.



2 comments:

Selva said...

முதல்ல கதையை வெளியிடுங்க பொதுசனம் சொல்லும் உண்மையா இல்லையா என்று

Nagarajan salem said...

//முதல்ல கதையை வெளியிடுங்க பொதுசனம் சொல்லும் உண்மையா இல்லையா என்று//
அந்த கதையின் அசல் காப்பியுடன் உள்ளது.படித்து பார்க்கவும்.அப்போது தெரியும் சங்கரின் உண்மை முகம்.
தளம் முகவரி:
http://ragariz.blogspot.com/2010/10/blog-post_31.html