May 14, 2011

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., அமோக வெற்றி.



தமிழகத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் தமிழக மக்கள் அமைதிப் புரட்சிசெய்து திமுக கூட்டணிக்கு எதிராகத் தீர்ப்பளித்துள்ளனர்

தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நேர்மையான நடவடிக்கைகள் ஜனநாயகத்தைக் காப்பாற்றி உள்ளன.

 திமுக அமைச்சர்களும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள்.

பண பலம், அதிகார பலம், இலவசங்களை வாரி இறைத்தல் ஆகிய எதற்கும் மக்கள் ஏமாறவில்லை.

திமுக கூட்டணி செய்த முறைகேடுகளை முறியடித்துள்ளனர்.
ஈழத் தமிழர் பிரச்னையில் திமுக - காங்கிரஸ் கட்சிகள் செய்த அப்பட்டமான துரோகத்திற்கும்,

தமிழக மீனவர்களை காக்கத் தவறியதற்கும்,
இந்தியாவின் மிகப் பெரிய ஸ்பெக்ட்ரம் ஊழலைச் செய்ததற்கும் 

குடும்ப ஆட்சியை நிலைநிறுத்தச் செய்யப்பட்ட முயற்சிக்கும்
தமிழக மக்கள் சரியான பாடத்தினை மக்கள் கற்பித்திருக்கிறார்கள்.

மொத்தத் தமிழகமும் திமுக,இ.காங்,பா.ம.க. கூட்டணிக்கு எதிராகத் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய தோல்விக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது

ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் செய்த கபட 
நாடகங்கள், போர்க்குற்றவாளி என ராஜபக்சேவை ஐ.நா. குழு அறிவித்த பிறகும் கூட அவரைக் காப்பாற்ற காங்கிரஸ் மேலிடம் துடிப்பது என காங்கிரஸ் கட்சிக்கு எதிரான விஷயங்கள் ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் கவிழ்த்து விட்டுள்ளது.



.

No comments: