Jul 18, 2011

அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு.

இறந்த பின்பும் வாழும் சிறுமி சிந்தாமணி
விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுச்சேரி சிறுமியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.தனியார் ஆம்னி பஸ், கடந்த 15ம் தேதி திருச்சி சமயபுரம் பள்ளிவிடை அருகே நள்ளிரவு ஒரு மணியளவில், சாலையின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதி இடபுறம் சென்றது. 

எதிரே வந்த பஸ் மீது பயங்கரமாக மோதி  இரண்டு பஸ்களும் சாலையில் இருந்து, 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,
 
புதுச்சேரியை சேர்ந்த தனியார் மருந்து தயாரிப்பு நிறுவன ஊழியரான சிங்கார வடிவேலு மகள் சிந்தாமணி (8)  படுகாயமடைந்தார். திருச்சி கே.எம்.சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி சிந்தாமணிக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. 

அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய சிங்கார வடிவேலும், அவரது மனைவி மீனாட்சியும் முன்வந்தனர்.

கே.எம்.சி., மருத்துவமனையில் நேற்று காலை 10.30 மணிக்கு, டாக்டர் வேல் அரவிந்த் தலைமையில், டாக்டர்கள்  சிந்தாமணியின் இரண்டு கண்கள், சிறுநீரகம், இதயம், கணையத்தை அறுவை சிகிச்சை மூலம் உடலிருந்து பிரித்தெடுத்தனர்.

பாதுகாப்பான முறையில் சென்னை, திருச்சி, மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சிறுமி சிந்தாமணி மூளைச்சாவு அடைந்தாலும், உடல் உறுப்பு தானம் மூலம் ஆறு பேரை வாழ வைத்து, 

அவர்கள் மூலம் உயிர் வாழ்ந்து வருகிறார். 
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு.

No comments: