Aug 30, 2011

தூக்கிலிட 8 வாரங்கள் தடை. தூக்கு தண்டனை குறைக்க தமிழக சட்டசபை தீர்மானம்.


ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இப்பொழுது தான் சிறிதாவது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது..

லட்சக்கணக்கான தமிழார்வர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனையிலிருந்து விடுதலை பெற சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி நல்ல காரியம் செய்தார்.

அரசியல் அயோக்கியத்தனம், நாடகம், நீலிகண்ணீர், கொடூர எண்ணம், வஞ்சம் தீர்ப்பது, போன்ற எத்தனை எண்ணற்ற பல துரோக செயல்களை கொடுமைகளை, தமிழ் மக்களுக்கு காங்கிரஸ், மற்றும் மத்திய அமைச்சர்கள், அரங்கேற்றி வருகின்றனர். 

தமிழ் இனத்தை ஒன்றும் தெரியாத மடையர்கள் என நினைத்து.
'வாழ்வதற்குரிய சட்ட ரீதியிலான அடிப்படை உரிமையை" பறித்த கொடுமையிலும் கொடுமை. காங்கிரஸால்  எற்படுத்தப்பட்ட்து. 

இடைக்காலத் தடைக்கு பிறகு இவர்களது தூக்கு தண்டனை முழுவதும் ரத்து செய்து தீர்ப்பு வர வேண்டும்.இதுவே உலக தமிழார்வர்களின் வேண்டுகோள்.

1 comment:

அருள் said...

தூக்குதண்டனை-சட்டமன்ற தீர்மானம்: முதலமைச்சருக்கே அதிகாரம் இருக்கும் போது நடுவண் அரசிடம் கெஞ்சலாமா?

http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_30.html