Aug 26, 2011

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா அமைச்சர் அழகிரி

தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், பொய் வழக்கு போடும் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்'' என, மத்திய அமைச்சர் அழகிரி பேசியுள்ளார்..

அழகிரி அவர்களே, உங்க குடும்பத்துக்கே பைத்தியம் பிடித்துவிட்டதா? திமுக மீண்டும் ஆட்சிக்கா ? நீங்க நல்லா ஜோக் அடிக்கிறீங்க.. முதலில் திமுக ஆட்சிக்கு வரட்டும், பிறகு பார்க்கலாம், தேர்தலுக்கு பிறகு அதிமுக அழிந்துவிடும் என்று சொன்னீர்களே, இப்போ யார் அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று இப்போதாவது புரிகிறதா?

சென்ற தேர்தலில் எதிர் கட்சிக்கு கூட தகுதி இல்லாமல் பொது மக்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.உமக்கும் உன் கூட்டத்தாருக்கும் புரியவில்லையா. மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்பது வெறும் பகல் கனவு.
ஒரு வேளை நீங்கள் சொல்லுவதை போல நடக்கவே இன்னும் நான்கரை ஆண்டுகள் ஆகும், அதற்குள் என்னென்னமோ நடக்கலாம்,

அதாவது கருணாநிதிக்கு 60 வயதாக இருந்திருந்தால்
உங்க  இரண்டு பேருக்கும் சண்டை வந்து கட்சி உடையாமல் இருந்தால்,
கட்சியில் உள்ள அனைவரும் சிறையில் இருந்து வெளியே வந்தால்
காங்கிரஸ் கூட்டணியிலிருந்து நீங்கள் விலகினால் நடக்கும் வாய்ப்பு உள்ளது,

கேள்வி பதில் அறிக்கை விடுவதும், இரட்டை அர்த்தத்தில் கரித்து கொட்டுவதும், மக்களை மடையர்களாக நினைப்பதும், வெங்காய விலையை பெரியாரிடம் போய் கேள் என்று நக்கலாக சொல்லுவதும்,
தமிழர்களை ஏமாற்ற இரண்டு மணி நேரம் காமெடி நாடகஉண்ணாவிரதம் இருந்தால் நீங்கள் அடுத்த தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

அடுத்த தேர்தலுக்குள் திமுக அழியாமல் இருந்தால் நடக்கும் வாய்ப்பு உள்ளது, ஆனால் இதெல்லாம் நடக்க கூடிய சாத்தியமா?  

அத்தைக்கு மீசை முளைத்தால் தானே சித்தப்பா ஆகமுடியும்.... என்ன நான் சொல்லுவது?இன்னும் 5 வருடம் இருக்கு அது வரைக்கும் உங்கள் கட்சி இதை போல் ஒன்னா சேர்ந்து இருக்குமா? முதலில் அதை யோசி அப்புறம் அதிகாரிகளை தண்டிக்கலாம். அத்தைக்கு மீசை முளைத்தபின் சித்தப்பா என கூப்பிடுவதைப்பற்றி யோசிக்கலாம்.

2 comments:

பாரதசாரி said...
This comment has been removed by the author.
பாரதசாரி said...

வெளிப்படையான ஒரு மிரட்டலாகத் தான் இது தோன்றுகிறது.இப்பொழுதும் திருந்தவில்லையென்றால் திருத்தப்படுவார்கள்.