Sep 28, 2011

தமிழக உள்ளாட்சித் தேர்தல் சொல்லப்போகும் சேதிதான் என்ன?


.தி.மு.க-  
அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா நல்ல ஆட்சி கொடுக்க முனைப்பாக இருக்கிறார். நில அபகரிப்பில் நடவடிக்கை எடுத்தது பொது மக்களிடம் நல்ல பெயர் கொடுத்துள்ளது. இதுவரையில் பெரிய தவறுகள் எதுவும் செய்யவில்லை, ஆளும் கட்சி என்பது அவர்களுக்கு ஒரு பிளஸ், ஜெயிப்பது உறுதி

தி.மு.
தன் தவறை இன்னும் உணரவில்லை, திரும்பவும் ஊழலை பெரிதாகவே செய்வார்கள் அவர்கள் பெரிய தோல்வி அடையவேண்டியது அவசியம், அது மற்ற கட்சிகளுக்கு பாடமாக இருக்கும்.

தி மு க-
வைகோ ஈழ தமிழர்களுக்கு  ஆதரவு அளிப்பவர் அதனால் தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை மனச்சாட்சியுடன் வாக்களித்தால் வைகோவின்
தி மு விற்கு வாக்களிக்க வேண்டும் தமிழக மக்கள் செய்வார்களா பார்ப்போம்

தே.மு.தி.க-
சினிமா நடிகர் கட்சி கருணாநிதியை திட்டி திட்டியே எதோ இவர் வந்து பெரிய புரட்சி பண்ணப்போகிறவர் மாதிரி பில்டப் பண்ணி, சினிமா வசனங்களை பேசி எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியை வாங்கி விட்டார்!  சட்டசபைக்கே செல்லாமல் இந்த மகா நடிகர் என்ன கிழித்துக் கொண்டிருக்கிறார் என்று மக்கள் பேசி தலையை சொரிந்துகொண்டிருக்கிறார்கள்!

 காங்கிரஸ்
கூட்டணி என்ற போர்வைக்குள்  இத்தனை நாட்களாக சுகமாக உறங்கிக்கொண்டிருந்தது! இனிமேல் இந்த தேர்தலுக்கு பின்னர் படுப்பதற்கே இடம் இருக்காது!

பா..., வி.சி. புதிய தமிழகம்-
நாங்களும் கச்சேரிக்கு போகிறோம் போன்ற கட்சிகள். ஜாதி கட்சிகள், பிரிவினைவாத கட்சிகள் அழிவது தமிழகத்திற்க்கு நல்லது.பெரிய அளவில் தோல்வி அடையவேண்டியது அவசியம், அது மற்ற கட்சிகளுக்கு பாடமாக இருக்கும்.

No comments: