Dec 18, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு போக போக சோனியாவும் மாட்டுவாரா?.


தொலை தொடர்புத் துறையில் .ராசா மந்திரியாக இருந்தபோது சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தார். ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் பற்றி, அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரமும், ராஜாவும் சேர்ந்து தான் முடிவெடுத்தனர். 

ஏனென்றால், 2003ம் ஆண்டு அமைச்சரவை எடுத்த முடிவுப்படி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் விலை நிர்ணயத்தை நிதி அமைச்சரும், தொலைத்தொடர்பு அமைச்சரும் இணைந்து தான் எடுக்க வேண்டும்.

இது, சிதம்பரத்திற்கு நன்றாகத் தெரியும். இந்த முடிவுகள் பற்றி, பிரதமர் மன்மோகன்சிங், கடந்த பிப்ரவரி மாதம் பார்லிமென்டில் தெரிவித்தார்

நிதி மந்திரிக்கு தெரியாமல் ஸ்பெக்ட்ரம் விற்பனை நடந்திருக்காது. .சிதம்பரம் நினைத்திருந்தால் இந்த ஊழலை தடுத்து நிறுத்தி இருக்க முடியும்

36000 கோடி ரூபாயை சோனியா குடும்பத்தினரும் சம்பந்தப்பட்டவர்களும் வெளி நாட்டிற்கு கடத்தி இருக்கிறார்கள் என்று முன்பே கூறினார் சுவாமி.

இதனை காங்கிரஸும் சோனியாவும் இதுவரை மறுக்கவுமில்லை எதிர்க்கவுமில்லை.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு காரணமாக ஏற்பட்ட ரூ. 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் முழுவதும் செய்தது சோனியா குடும்பம்.

ராஜாவை கருவியாக பயன்படுத்தியுள்ளனர்.

சிதம்பரம் நிதிஅமைச்சராக காங். சோனியாவுக்கு சாதகமாக ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்வதற்கு கையெழுத்து போட்டு இருப்பது சாத்தியமே.

தி.மு.க, சோனியாவுக்கு சாதகமாக செயல்படுவதனால் தான் கலைஞர் டிவிக்கு கை மாறிய ரூபாய் 200 கோடியை மட்டுமே சி பி ஐ பிடித்து கொண்டு தி.மு.க மீது நாடகமாடுகிறார்கள்.

இப்பொழுது சிதம்பரம். அடுத்தது யார்?.
தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் 
மீண்டும் தர்மம் வெல்லும் என்றால்
இன்னும் போக போக சோனியாவும் மாட்டுவாரா?.

No comments: