May 29, 2012

வேறு ஏதாவது காரணம் சொல்லி மக்களை ஏமாற்றுங்கடா.


சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்தால், உள்நாட்டிலும் பெட்ரோல் விலையை குறைத்து, அதன் பயன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.


ஏற்கனவே, கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, பெட்ரோல் விலையை குறைத்துள்ளோம். பெட்ரோல் விலையை லிட்டருக்கு, 1.25 ரூபாய் வரை குறைக்க வாய்ப்புள்ளது' இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் ஆர்.எஸ்.புடோலா.


ஏன் நீங்க விலை ஏற்றினால் சர்வதேச சந்தையே மாறி போகுதோ அதுவும் 3நாளில்எப்படி?. என்னே ஒரு அக்கறை வாடிக்கையாளர் மேல. ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயம். எங்களுக்கு தெரியும் உங்கள் சூது.

 நீங்கள் ஏற்றியது 7.50 ஆனால் குறைப்பது 1.25 ,  ஏற்றும்போது 15% ஆனால் குறைக்கும் போது 1% என்னங்கடா உங்கள் புத்தி இப்படி இருக்கு.. சின்னபிள்ளைங்க விளையாட்டு விளையாடுகிறீர்களா?

இவர்கள் விலையேற்றும் போது கூறும் ஒரே பல்லவி நஷ்டம் நஷ்டம். எப்ப தாண்டா பெட்ரோல் டீசலில் லாபம் வந்தது எப்ப பார்த்தாலும் நட்டம் நட்டம் நட்டமுன்னு தாண்டா சொல்றீங்க?.வேறு ஏதாவது காரணம் சொல்லி மக்களை ஏமாற்றுங்கடா.

புரியாத மக்கள், ஏமாற்றும் கையாலாகத காங்.அரசு, சுரண்டி பிழைக்கும் பணக்காரவர்க்கம். இதையெல்லாம் பார்க்கையில் இந்தியா ஜனநாயக நாடு என்பது தெளிவாகிறது.

2 comments:

rajamelaiyur said...

இது எதையும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் கையாலாகாத மத்திய அரசு ..

rajamelaiyur said...

விலை நிர்ணயத்தை தனியாரிடம் விட்ட அரசு நாளை இந்தியாவை தனியாரிடம் விடாது என்பதற்கு உத்திரவாதம் இல்லை