Dec 12, 2013

ராகுல்காந்தியின் அசிங்கங்கள் - சுப்ரமணியன் சுவாமி.



# லண்டனில் இருக்கும் ரௌலிங் கல்லூரியில் 1995 ஆம் ஆண்டில் ராகுல் காந்தி எம் ஃபில் படித்ததாக இங்கே புளுகிக்கொண்டிருக்கிறார். ஆனால் அந்த கிறித்துவமிஷனரி கல்லூரியில் இவரது பெயரை எங்கும் காணோம். ரோலர் லிஸ்டிலும் தேர்வுப் பட்டியலிலும் எங்குமே காணோம். இவர் அதை இல்லை என்று நிரூபிக்கமுடியுமா..?

# அதற்கும் முன்னால் ஹார்வர்ட் பல்கலையில் படித்ததாகக் கூறி இருக்கிறார். அது உண்மை. ஆனால் அந்தப் பல்கலைக்கழகத்துக்கு இந்துஜாக்கள் அளித்த 11 மில்லியன் டாலர்களின் டொனேஷன் கோட்டாவில் இவருக்கு சீட் கிடைத்தது நிஜம். ஆனால் அங்கே கோட்டாவில் சேர்ந்தாலும் படித்து முன்னேறவில்லை என்றால் வெளியேற்றி விடுவார்கள். இவர் சரியாக மூன்றே மாதத்தில் அங்கே இருந்து வெளியேற்றப்பட்டார். துரதிருஷ்டவசமாக என்னைப்போல ஹார்வர்ட் பல்கலைக் கழக சிறப்புப்பேராசியர் இந்தியாவில் அமைந்ததால் அவர் ஹார்வர்ட் யுனிவர்சிட்டி பற்றி தற்போது வாயைத் திறப்பதில்லை.

# ஏன் இப்படிப் பொய் சொல்லவேண்டும்..? நம் நாட்டில் கல்விக்கு அல்ல நேர்மைக்குத்தான் முதலிடம் கொடுக்கிறோம். பிறகு ஏன் இப்படிப் புளுகவேண்டும்..?

# ராகுல் காந்தி இந்தியரா..? கண்டிப்பாக கிடையாது. இத்தாலிய குடியுரிமைச் சட்டத்தின் படி இத்தாலியத்தாய்க்கு பிறக்கும் குழந்தை எங்கே பிறந்திருந்தாலும் இத்தாலியப் பிரஜைதான். 1970 இல் ராகுல் காந்தி பிறந்த போது சோனியாகாந்தி இத்தாலியப்பிரஜை தான்.. ( இப்போதும் கூடத்தான் ) அப்படி இருக்க ராகுல் காந்தி இத்தாலியப் பிரஜைதான். இந்தியாவில் பிறந்தமைக்காக இந்தியப்பிரஜை என்று உரிமை கொண்டாடலாம். ஆனால் அதற்கு இத்தாலியப் பிரஜைத்தனத்தை விட்டு வெளியேறி இருக்கவேண்டும்.. அப்படித்தான் இந்திய பிரஜா உரிமைச் சட்டம் கூறுகிறது. ராகுல் காந்தி செய்திருக்கிறாரா என்று சான்றுடன் நிரூபிக்கட்டும். ஆக ராகுல் காந்தி இந்தியர் இல்லை.

# இப்போதும் இத்தாலிய பாஸ்போர்ட்டில் ராவுல் வின்சி என்னும் பெயரைப் பயன்படுத்தி இத்தாலியப் பிரஜையாகத்தான் இருக்கிறார். இது என்ன ஃப்ராட் தனம்..? இரட்டை குடியுரிமைத்தனம்..? காங்கிரஸ் அல்லாத ஆட்சியில் காசுக்கு விலைபோகாத அமைச்சர்கள் வந்தால் ராகுல் காந்தியும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டி இருக்கும்.

# ராகுல் காந்தி பாஸ்டன் ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டார். அவரது கையில் 160000 டாலர் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். ( 10 ஆயிரம் டாலருக்குமேல் அமெரிக்கா செல்பவர்கள் கையில் வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. ) அவர் கைது செய்யப்பட்டபோது அவருடன் வெரொனிக் கத்தலி என்னும் அவரது கேர்ள்ப்ஃப்ரெண்ட் இருந்தார். அவர் ஸ்பெயினைச் சேர்ந்தவர். ட்ரக் மாஃபியாவின் மகள். அமெரிக்க எஃப் பி ஐ கைது செய்து இந்திய தூதரகத்துக்குத் தகவல் தெரிவித்தது. இது நடந்த தேதி 27 செப்டம்பர் 2001.

# ராகுலுக்குக் காவலாய் இருந்த எஸ்பிஜி கமேண்டோக்கள் ராகுல் காந்தி அரசாங்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறியும் அமெரிக்க எஃப் பி ஐ விடவில்லை. 9 மணிநேரம் அவர் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்திய அரசாங்கம் தலையிட்டு இந்தோ - யு எஸ் நல்லுறவை அடிப்படையாகக் காட்டி ராகுலை கேஸ் பதிவு செய்துகொண்டு விடுவித்தது. இதுகுறித்தான வழக்கைப் பற்றி நான் ஆர் டி ஐ மூலம் கேட்டதற்கு அமெரிக்க எஃப் பி ஐ தொடர்புடையவர் ( ராகுல் காந்தி ) சம்மதக்கடிதம் இல்லாமல் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டது. இது குறித்து ராகுல் காந்திக்கு அனுமதிக்கடிதம் கேட்டு எழுதினேன். அவர் பதில் தரவே இல்லை.

# ராகுல் காந்திக்குத் திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்று தெரிந்துகொள்ள இந்தியர்களுக்கு உரிமை உள்ளதா இல்லையா..? டெல்லியில் துக்ளக் ரோடில் இருக்கும் ராகுல் காந்தியின் இல்லத்தில் வெரொனிக் கத்தலிக் என்னும் வெளிநாட்டுப் பெண் ராகுலுடன் வசிக்கிறார். அவருடன் திருமணம் ஆகி இருக்கிறதா இல்லையா என்பதை அறிவிக்க ராகுல் கடமைப்பட்டிருக்கிறாரா இல்லையா..? ஏன் அறிவிக்கவில்லை..? ஒரு ட்ரக் மாஃபியாவின் மகளை வீட்டில் திருமணம் செய்துகொள்ளாமல் வைத்திருக்கும் ராகுல் அடுத்த பிரதமராக வரவேண்டுமா..? சிந்தியுங்கள்.

# சோனியா காந்தி இந்தியாவில் ஆட்சிக்கு வந்தபிறகில் இருந்து இந்தியாவில் இந்துமத விழுமியங்கள் தாழ்ந்துகொண்டிருக்கின்றன. சங்கராச்சாரியாரின் கைது ஒரு உதாரணம். அதுவும் மிகச்சரியாக தீபாவளி தினத்தன்று கைது செய்யப்பட்டார். ஓரிரு நாட்கள் பொறுத்திருந்திருக்கலாம். அவர்மேல் புகார் இருப்பின் ஆசிரமத்தில் காவல் வைத்திருக்கலாம். ஆனால் ஒரு மதத்தலைவரை ஒரு கிரிமினலைப் போல சிறையில் அடைத்தனர். சோனியாவின் அழுத்தத்தினால் ஜெயலலிதா செய்த வேலை இது. வேறு ஒரு மதத்தலைவர்களை இதுபோல் சிறையில் அடைக்க முன்வருவார்களா..?

இத்தனைக்கும் பிறகும் சோனியாவின் ராகுலின் இந்த காங்கிரஸ் ஆட்சியில் இருக்கத்தான் வேண்டுமா..?
நன்றி: தமிழாக்கம் : கலைவேந்தன்.

Feb 24, 2013

கருணாநிதிஈழத்தமிழர்பற்றிப்பேசுவது ‘சாத்தான்வேதம்ஓதுவது’



சாத்தான் வேதம் ஓதுவதுஎன்ற பழமொழியை இனி தமிழில் இருந்து நீக்கிவிடலாம். ஏனெனில் அதற்கு பதிலாக புதுமொழி ஒன்று கிடைத்துள்ளது. அது இது தான்:‘கருணாநிதி ஈழத் தமிழர் பற்றிப் பேசுவது

துள்ளத் துடிக்க ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது... கூட்டம் கூட்டமாக காடுகளுக்கு, ஆறுகளுக்குள் அவர்கள் சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக அலைந்தபோது... தமிழ்நாட்டுக்குத் தெற்கே மரண ஓலம் உரக்கக் கேட்டபோது...டான்ஸ் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த இந்த கருணாநிதி...

இன்று, ஒவ்வொரு நாளும் தன் கைப்பட ஈழத் தமிழர்களுக்காக கதறுவதையும், அறிக்கை விடுவதையும் பார்க்கும்போது உலகத்திலே உள்ள அத்தனை பச்சை துரோகங்களையும் தேடி எடுத்து திரட்டி ஓர் உருவம் செய்தால் அதுகூட கருணாநிதிக்கு ஈடாக முடியாது என்று தோன்றுகிறது.

கேவலம்... வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மீண்டும் ஈழத் தமிழர் பிரச்னையை கையிலெடுத்து தனக்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது, அதனிடம் நாம் இதுபற்றி பேசிக் கொண்டே இருக்கலாம் என்று நினைத்து கருணாநிதி உளறிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டுத் தமிழனுக்கே பற்றிக்கொண்டு வருகிறதே, ஈழத் தமிழனுக்கு எப்படி இருக்கும்?

இன்று தமிழ் ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிஞ்சு மகன் பாலச்சந்திரனை சிங்கள ராணுவம் கொலை செய்த படத்தைப் பார்த்துவிட்டு பதறுகிறார் கருணாநிதி. வெளிச்சத்துக்கு வந்திருக்கும் போக்குற்றங்கள் என்று முரசொலியில் பிடில் வாசித்துக்கொண்டிருக்கிறார்.
பூனை கண்ணை மூடிக்கொண்டிருந்தால் உலகம் இருட்டாகிவிடும் என்று நினைத்துக் கொள்ளுமாம். அதுபோல ஆட்சியில் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்திருந்தபோது ஈழத் தமிழர் ரத்தம் சொட்டச் சொட்ட கூட்டம் கூட்டமாக ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ தமிழகம் முழுக்க விநியோகிக்கப்பட்டதே...

அப்போது கருணாநிதிக்கு எல்லாமுமாக இருந்த உளவுத்துறையின் தலைவர் ஜாபர் சேட் அதையெல்லாம் கருணாநிதியிடம் காட்டவில்லையா?
அவர் காட்டினாலும் காட்டாவிட்டாலும் கருணாநிதி அன்று பார்த்ததெல்லாம்... மானாட மயிலாட வீடியோக்களைத்தானே!‘நமீதா இந்த உடை உடுத்தினால் இன்னும் கவர்ச்சியாக இருக்கும்... நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ப்ரீத்தி போனவாரம் போட்ட உடை மாதிரி இருக்கிறதே?’ என்பது மாதிரி நுணுக்கான கலைத் திருத்தங்களை செய்துகொண்ருந்த கருணாநிதிக்கு ஈழத்து போர் வீடியோக்களைப் பார்க எப்படி நேரம் கிடைத்திருக்கும்?

இப்போது, வெளிச்சத்துக்கு வந்திருக்கிறதாம் போர்க்குற்றங்கள். அட... என்ன ஒரு கிழ நரித்தனம். புலவர் புலமைப்பித்தன் சொல்லுவார் ஒரு கட்டுரையில், ‘கருணாநிதியின் மூளையில் விஷப் புழுக்கள் புழுத்து நெளிந்துகொண்டிருக்கின்றனஎன்று.அந்த விஷப் புழுக்கள்தான் ஒவ்வொரு நாளும் வரிவடிவம் எடுத்து முரசொலியில்அறிக்கைகளாகவும், வார்த்தை வடிவம் எடுத்து  அவர் வாயில் வார்த்தைகளாகவும் வெளிவருகின்றன.

ஈழத்துத் தாய் பார்வதி அம்மாள் சென்னைக்கு வரும்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிக்கு அது தெரியாதாம். பார்வதியம்மாளை வர முடியாமல் செய்தவரை வைகோ மறந்துவிட்டாரா என்று இரு தினங்களுக்கு முன்பு முரசொலியில் முழங்கி இருந்தார் கருணாநிதி.

அன்று மலேசியாவிலிருந்து சென்னைக்கு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பார்வதியம்மாள் வருவதை தெரிந்துக் கொள்ள முடியாத நிலையில், தமிழ்நாட்டின் முதல்வராக, அதுவும் ஐந்து முறை முதல்வராக இருந்தவருக்கு தெரியவில்லையாம்.கோபாலபுரம் இல்லத்தில் ஒருவேளை குஷ்புவோடு, கட்சியின் வளர்ச்சி குறித்து பேசிக் கொண்டிருந்ததால் கருணாநிதிக்குத் தெரியாமல் போயிருக்கலாம்!

இப்போது என்ன சொல்கிறார்? ஜெயலலிதா 2003-லேயே மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில்தான் பார்வதி அம்மாவை தமிழகத்துக்கு அனுமதிக்கவில்லையாம். ஏன் நீங்கள் முதல்வராக இருந்த ஐந்து வருடங்களில்... நீங்கள் மத்திய அரசோடு ஒட்டி உறவாடிக்கொண்டிருந்த  எட்டு வருடங்களில்... விமானம் பிடித்து டெல்லி போய் இலாகா பிடித்து வாங்கத் தெரியும்... அதில் ஆயிரம் கோடி லட்சம் கோடி என்று ஊழல் பண்ணத் தெரியும்! ஆனால், பார்வதி அம்மாளை தமிழகத்துக்குள் அனுமதிக்க வழிகள் என்ன என்று தெரியாதா உங்களுக்கு?

உலகத் தமிழர்களுக்கு எல்லாம் நீ மட்டும் தான் தலைவன் என்று நம்பச் செய்தாயே...நீ என்ன செய்தாய்?பார்வதியம்மாள் யாருக்காவது பயந்து, குடும்பத்துடன் சுகபோகமாக வாழவா அவர் ஆசைப்பட்டார். அவரது சிகிச்சைக்காகவே தமிழகம் ஓடிவந்தார். அதுவும் இலங்கையில் அவருக்காக ஒரு குடும்பச் சொந்தம் கூட அவரை வைத்து சிகிச்சை செய்ய முடியாத நிலையில், அவர் இங்கே வந்தார்.

அவர் வந்து, சென்னை விமான நிலையத்தில் ஸ்டெச்சரில் படுத்தபடியாக இருந்தார். அவரை விமான நிலையத்தை விட்டுக் கூட வெளியே வர முடியாத படி வைக்க உத்தரவிட்டிருந்தால் என்ன?

ஒரு உயிருக்காக, எங்கோ செல்ல வேண்டிய பயணியை, விசா இல்லாமல், சென்னை விமான நிலையத்தில் இறக்கி, அவருக்கு அப்பல்லோவில் சிகிச்சை அளித்த செய்தியை நீங்கள் படிக்கவில்லையா?

அது போலவாவது, பார்வதியம்மாளுக்கு சிகிச்சை அளிக்க, முதல்வர் என்ற முறையில் சிறப்பு அதிகாரத்தை செயல்படுத்த முடிந்ததா உங்களால்?
அவரை அப்படியே மலேசியாவுக்கு அனுப்பி வைத்துவிட்டு, அவர் அங்கிருந்து இலங்கைக்கு சென்ற பிறகு, ஓர் கபட நாடகத்தை அரங்கேற்றினீர்களே...
இது வரை உலகத்தில் எந்த அரசியல் தலைவனும் செய்யாத செய்ய முடியாத செயல் அல்லவா அது?

நடந்த சம்பவத்துக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பார்வதியம்மாள் கைப்பட கடிதம் எழுதி, இப்படிக்கு உங்கள் உடன்பிறப்பு என்ற கடிதத்தை வெளியிட்டு மகிழ்ந்தீர்களே?
பார்வதியம்மாள் என்ன தி.நகர் தி.மு.க. கிளையின் செயலாளரா என்று வைகோ கூட கேட்டாரே ஞாபகம் வருகிறதா?

அதற்கு என்ன பதில் சொல்ல முடிந்தது உங்களால்?
தமிழர்கள் எல்லாரும் மூளையை கழற்றி கடலில் வீசிவிட்ட தறுதலைகள் என்று நினைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் அறிக்கைகளும், பேட்டிகளும் கொடுக்கிறீர்களே... உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா?

2008 செப்டம்பரிலிருந்து ஈழத் தமிழர்கள் மீதான போர் உச்சம் பெற்று 2009 மே மாதம் எல்லாம் முடிந்துபோகும் வரையில் இப்போது  மாதிரி வீர வசனங்கள் பேசினீர்களா?
ராஜபக்சே கோபப்படாமல் பேசவேண்டும் என்று புத்தி சொன்ன சிங்களன்தானே நீங்கள்?
பிரபாகரன் பிடிபட்டால் அவரை போரஸ் புருஷோத்தமன் மாதிரி நடத்தவேண்டும் என்று சொன்ன டெல்லிக்காரன்தானே நீங்கள்...

இப்போது  ஒப்பாரி வைக்கிறீர்களே... பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படங்களைப் பார்த்து! இது எப்போது நடந்தது?

கட்டிய மனைவியையும், துணைக்கு வந்த துணைவியையும் கூட்டிக் கொண்டு அண்ணா நினைவிடத்தை உண்ணாவிரதம் என்ற பேராலே அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தீர்களே... ‘மழை விட்டாலும் தூவானம் விடாதே  என்று போரையும் மழையையும் ஒப்பிட்டு அருவெறுக்கத்தக்க வசனம் பேசிக் கொண்டிருந்தீர்களே... அப்போதுதானே அந்த பச்சிளம் பாலகன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

எல்லார் கண் முன்பாகவும் சோனியாவோடு சேர்ந்து, பிரணாப்பின் கை பிடித்து, ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு...

இப்போது போர்க்குற்றம், டெசோ மீட்டிங், தூதர்கள் சந்திப்பு, அறிக்கை, பேட்டி என்று  நாடகம் நடத்தும்... மஞ்சள் துண்டு போர்த்தியிருக்கும் துரோக மலையே....
கோபாலபுரம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கண்ணாடி எதிரே நின்று கறுப்புக் கண்ணாடியைக் கழற்றிவிட்டுப் பாருங்கள்!

அந்த கண்ணாடி காரித்துப்பியிருக்கும் யாருக்கும் தெரியாமலேயே..!
பார்வதியம்மாளின் புதைகுழி கூட கைக்கொட்டி சிரித்துக் கொண்டிருக்கிறது- இப்படி ஒரு மனிதன் தமிழன் என்று இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறானே என்று!
நன்றி: தமிழ்லீடர்.

Jan 31, 2013

இந்துக்களும் உங்களுடன் இணைந்து போராட தயாராகவே இருக்கிறோம்.



விஸ்வரூபம் படத்திற்கான முஸ்லீம் சகோதரர்களின் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
ஒரு விமர்சனத்துக்கோ அல்லது கண்டனத்துக்கு குறிப்பிட்ட வரம்பு உள்ளது.
அந்த வரம்புக்குள் தன் எதிரியை அல்லது சம்பந்தப்பட்டவரை விமர்சிக்க வேண்டுமே தவிர அதை விடுத்து மிக கொடிய வார்த்தைகளால் விமர்சிப்பது எதிரிக்கு பதில் சொல்ல தெரியாதவனின் கையாலாகத்தனம்.

சென்னை மண்ணடியில் நடந்த கூட்டத்தில் "விஸ்வரூபம் அடுத்து என்ன"எனும்
தலைப்பில் பேசிய பி.ஜைனுல் ஆபிதீன் நீ உன் குடும்பத்தை வைத்து விபச்சாரம் செய்கிறாயா?என பாரதிராஜாவையும், நீ உன் அப்பனுடன் படுக்க ஆசைபடுகிறாயா ? என்று ஸ்ருதிஹாசனையும் கேட்கிறார். ஒரு பழுத்த அரசியல்வாதியும் முஸ்லிம்களுக்கு எல்லாம் முன்மாதிரியாகவும் இருக்க வேண்டிய ஒருவரின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளா இவை. 

நபிகள் நாயகத்தின் போதனைகளை படித்தவர்  இப்படி பேசலாமா? இதற்கு பதிலடி கொடுப்பது போல் சம்பந்தப்பட்ட தரப்பினர் பதில் பேசினால் என்னவாகும் என யோசித்து பார்த்தாரா? அவர் கேட்ட அதே வார்த்தையை கமலஹாசனோ அல்லது அவரது பெண்ணோ பேசியிருந்தால் இந்துக்களும் , முஸ்லிம்களும் அடித்து கொண்டிருப்பார்கள். நீ உன் வீட்டில் பதுங்கி கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பாய். அப்பாவி இந்துக்களும் ,முஸ்லிம்களும் பாதிக்க பட்டிருப்பார்கள். நீ சிலரின் முன் ஹீரோவாக அப்பாவி மக்களை பலியாக்காதே.

விஸ்வரூபம் படம் இன்னும் தமிழ்நாட்டில் வெளியாகவில்லை.ஆனால் முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள கேரளாவில் வெளியாகிவிட்டது.படத்தை பார்த்த முஸ்லிம் நண்பர் ஒருவர் பேஸ்புக் வலைத்தளத்தில் அப்படி தவறான கருத்து எதுவும் இல்லை என கூறியிருக்கிறார்.ஆப்கான் தீவிரவாதத்தையும்,அங்கு நடக்கும் அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளை பற்றியுமே படம் நகர்கிறது.கதைப்படி தீவிரவாதிகளின் தலைவன் கமலிடம் தமிழில் பேசுகிறார். நீங்கள் எப்படி தமிழ் பேசுகிறீர்கள் என  கேட்கும் போது அவன் தமிழ் நாட்டில் கோவை மதுரை போன்ற இடங்களில் சில காலம் பதுங்கியிருந்தேன் என கூறுகிறாரன். அவ்வளவுதான்.இதில் ஒட்டு மொத்த தமிழ் நாட்டின் முஸ்லிம்களையே தவறாக கூறியது போல் நீங்கள் ஏன் கொந்தளிக்கிறீர்கள்.இதைவிட கொடுமை இதை சொன்ன முஸ்லிம் நண்பரை நீ இஸ்லாமியனே அல்ல என தூற்றுகின்றனர்.

அடுத்து கமல் என்ன படம் எடுத்தாலும் வெளியாகும் சமயத்தில் அதற்க்கு
தொந்தரவு செய்தால் நாமும் பிரபலம் ஆகிவிடலாம் எனும் போக்கு
தற்போது அதிகரித்து வருகிறது. விருமாண்டி படத்திற்கு முதலில் "சண்டியர்"
என பெயர் வைத்து இருந்தார் அதை மாற்ற வேண்டும் என போராட்டம் நடத்தினர். படம் வந்ததும் தான் தெரிந்தது அது மரணதண்டனை வேண்டாம் என கருத்து சொல்ல பட்ட அருமையான திரைப்படம். 

அடுத்து வசூல்ராஜா MBBS.மருத்துவர்களை தவறாக சித்தரிக்கிறார் என மருத்துவர்கள் போராட்டம் செய்தனர். மறுபடியும் கமலஹாசன் அவர்களின் முகத்தில் கரியை பூசினார்.மருத்துவர்கள் நோயாளிகளிடம் எப்படி பழக வேண்டும் என மருத்துவர்களுக்கே பாடம் நடத்தினார்.  விஜயகாந்தின் "ரமணா" வில் மருத்துவத்துறையின் மறுமுகத்தை கிழித்து எறிந்தார்களே அப்போது எந்த போராட்டமும் இல்லை.அதே போல்தான் இதுவும் விஸ்வரூபம் படம் தமிழ் நாட்டில் வெளியாகாமல் போகாது. அதை பார்த்து விட்டு எந்த முஸ்லிம் தோழனும் வருத்த பட்டால் அனைத்து இந்துக்களும் உங்களுடன் இணைந்து போராட தயாராகவே இருக்கிறோம்.