Feb 3, 2012

2ஜி வழக்கு; திகார்ஜெயிலில்1 வருடத்தை பூர்த்தி செய்த ராசா

முன்னாள் மத்தியஅமைச்சர் ஆ.ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி கைது செய்யப்பட்டார். நேற்றுடன்  ஒரு ஆண்டு பூர்த்தி ஆகிறது. 

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அவருடன் தனிசெயலாளர் ஆர்.கே. சந்தோலியா, தொலைதொடர்த்துறை செயலாளர் சித்தார்த் பெகுரா உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஆ.ராசா, சித்தார்த் பெகுராவை தவிர அனைவரும் ஜாமீனில் விடுதலையாகிவிட்டார்கள். இவர்கள் மட்டும் திகார் ஜெயிலில் இருக்கிறார்கள்.

தினமும் பாட்டியாலா கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆவதும் விசாரணை முடிந்தது மாலையில் ஜெயிலுக்கு திரும்புவதுமாக உள்ளார். நேற்றுடன் அவர் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுஆகிறது. இதுவரை ஆ.ராசா ஒருமுறை கூட ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை.

No comments: