May 29, 2012

வேறு ஏதாவது காரணம் சொல்லி மக்களை ஏமாற்றுங்கடா.


சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்தால், உள்நாட்டிலும் பெட்ரோல் விலையை குறைத்து, அதன் பயன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.


ஏற்கனவே, கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, பெட்ரோல் விலையை குறைத்துள்ளோம். பெட்ரோல் விலையை லிட்டருக்கு, 1.25 ரூபாய் வரை குறைக்க வாய்ப்புள்ளது' இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் ஆர்.எஸ்.புடோலா.


ஏன் நீங்க விலை ஏற்றினால் சர்வதேச சந்தையே மாறி போகுதோ அதுவும் 3நாளில்எப்படி?. என்னே ஒரு அக்கறை வாடிக்கையாளர் மேல. ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயம். எங்களுக்கு தெரியும் உங்கள் சூது.

 நீங்கள் ஏற்றியது 7.50 ஆனால் குறைப்பது 1.25 ,  ஏற்றும்போது 15% ஆனால் குறைக்கும் போது 1% என்னங்கடா உங்கள் புத்தி இப்படி இருக்கு.. சின்னபிள்ளைங்க விளையாட்டு விளையாடுகிறீர்களா?

இவர்கள் விலையேற்றும் போது கூறும் ஒரே பல்லவி நஷ்டம் நஷ்டம். எப்ப தாண்டா பெட்ரோல் டீசலில் லாபம் வந்தது எப்ப பார்த்தாலும் நட்டம் நட்டம் நட்டமுன்னு தாண்டா சொல்றீங்க?.வேறு ஏதாவது காரணம் சொல்லி மக்களை ஏமாற்றுங்கடா.

புரியாத மக்கள், ஏமாற்றும் கையாலாகத காங்.அரசு, சுரண்டி பிழைக்கும் பணக்காரவர்க்கம். இதையெல்லாம் பார்க்கையில் இந்தியா ஜனநாயக நாடு என்பது தெளிவாகிறது.

May 22, 2012

திருக்குவளை மனிதரின் திருக்கல்யாண குணங்கள்.

 KARUNA_2011-A_1
ஈழப்போரில் ஈழ தேசமே இடுகாடாக, சுடுகாடாக மாறிப்போன பின்னரும்...
தெற்கே இருந்து வரும் தென்றலில் பிணவாடை வீசிவருகிற நேரத்திலும்...
அந்தத் துன்பமும் துயரமும் உண்மையான தமிழர்களின் உள்ளத்தை விட்டு நீங்காத நிலையில்...

இந்த நாக்குமாறி மனிதர், வாக்குமாறி மனிதர் அன்று அவர்களுக்காக இரண்டு சொட்டு கண்ணீர் வடிக்காமல் இருந்துவிட்டு...
இன்று தமிழ் ஈழம் பற்றிப் பேசுகிறார்!

இது... அன்று நடந்த கோரக் கொலையை விடக்கொடூரமானது!
வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்கிறார். மத்திய அரசு இதற்கு துணை நிற்கவேண்டும் என்கிறார். இவரது மூளையில் விஷப் புழுக்கள் ஊறிக் கொண்டிருக்கின்றன.

என்ன வாக்கெடுப்பு நடத்துவது?
எந்த மக்களை வைத்து வாக்கெடுப்பு நடத்துவது?

லட்சக் கணக்கில் இறந்தவர்களை எழுந்துவந்து வாக்குப் போடச் சொல்வதா?
உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் புலம்பெயர்ந்து போய்; நலம் இழந்துபோய்; அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார்களே... அவர்களை எல்லாம் ஈழத்துக்கு அழைத்துவந்து வாக்கெடுப்பில் கலந்துகொள்ளச் சொல்வதா?

என்ன வாக்கெடுப்பு நடத்துவது?

'தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு' - இப்போது கண்டுபிடித்திருக்கிறார் இந்த அரசியல் மேதை; தமிழறிஞர்; தமிழர்களின் காவல் தெய்வம்!

முன்னர் எப்போதாவது தமிழ் ஈழம்தான் தீர்வு என்று பேசியிருக்கிறாரா?
பத்திரிகையாளர்கள் பலமுறை கேட்டிருக்கிறார்கள்...

'தமிழ் ஈழத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?' என்று!
இவர் பதில் சொல்லியிருக்கிறார்.
'தமிழ் ஈழம் கிடைத்தால் சந்தோஷப்படுவேன்'

இந்த குழப்பவாதிக்கு - குறுக்குப் புத்தி கொண்ட மனிதனுக்கு ஒன்று ஆதரிக்கிறேன்... ஆதரிக்க மாட்டேன் என்று ஏன் சொல்லத் தெரியவில்லை?
ஏன் சொல்லவில்லை?

இவர் எந்தக் கொள்கையும் இல்லாதவர்!

ஈழத்தில் தமிழ் ஈழ விடுதலைக்காக வாக்கெடுப்பு நடந்ததில்லையா?
1977-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் ஈழ விடுதலை என்கிற தீர்மானத்தை, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தனது தேர்தல் அறிக்கையில் முன் வைத்து தேர்தலில் போட்டியிட்டது.

தமிழ் ஈழ விடுதலையை தேர்தல் அறிக்கையில் முன்வைத்து போட்டியிட்ட அந்த கட்சி போட்டியிட்ட எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றது! ஈழத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஒரே அணியில் நின்று, சிந்தாமல் சிதறாமல், தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்கிற வரலாறு...

தமிழர்களின் வரலாற்றுப் பிழையாக வந்த இந்த மனிதருக்கு எப்படித் தெரியாமல் போனது? தனித் தமிழ் ஈழத் தீர்மானத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த வெற்றியைப் பெற்று இலங்கை நாடாளுமன்றத்துக்கு, இவர் மிகவும் நேசித்ததாகச் சொல்கிறாரே, அந்த அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்றவர்கள் உறுப்பினர்களாக வந்தார்கள்.

அந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் ஒரு சிங்கள வெறியன், தமிழ் ஈழ விடுதலை கோரி உள்ளே வந்திருக்கிற அமிர்தலிங்கத்தை என்ன செய்யவெண்டும் என்று பேசினான் தெரியுமா?

''தமிழ் ஈழ விடுதலை பற்றிப் பேசுகிற அர்மிதலிங்கத்தை இரண்டு உறுதியான நீண்ட மூங்கிலில் இரண்டு கால்களையும் கட்டித் தலைகீழாகத் தொங்கவிடவேண்டும்

தொங்கவிட்ட பின்னாலே இணைத்துக் கட்டப்பட்டிருக்கிற இரண்டு மூங்கில்களின் கட்டுக்களை அறுத்துவிடவேண்டும்! அப்படி அறுத்துவிட்டு அமிர்தலிங்கத்தை இரண்டு கூறுகளாக பிளக்கவேண்டும்''
-என்று கூச்சலிட்டான்!

ஒட்டு மொத்தத் தமிழ் ஈழ விடுதலைக்கான ஆதரவை மக்களின் வாக்குரிமைச் சீட்டில் பெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எதை
அங்கே சாதிக்க முடிந்தது?

இன்று வாக்கெடுப்பு நடத்தி எதை சாதிக்க வேண்டும் என்கிறார் கருணாநிதி?
வாக்கெடுப்பு நடத்திவிட்டால் தமிழ் ஈழ விடுதலை பெற்றுவிட முடியும் என்று இவரது செத்துப்போன மனசாட்சி புத்துயிர் பெற்று வந்து போதனை செய்திருக்கிறதா?

வாக்கெடுப்பு நடத்துவதற்கு இவர் தாங்கிப் பிடித்திருக்கும் மன்மோகன் என்னும் எந்திர மனிதன் ஆட்சி செய்யும் மத்திய அரசு முன்வருமா? மத்திய அரசை ஒப்புக் கொள்ளச் செய்யும் உறுதி, வலிமை இவருக்கு இருக்கிறதா?

எது நடக்காதோ... அதை தேர்ந்தெடுத்துப் பேசுவது, குதர்க்கம் செய்வது, குறுக்குச் சால் ஓட்டுவது, அடுத்துக் கெடுப்பது...

எல்லாமே இந்த திருக்குவளை மனிதரின் திருக்கல்யாண குணங்கள்..
நன்றி: புலமைப்பித்தன்

May 20, 2012

கண்டி புத்தனின் பல்லிலும் ரத்தக் கறை.


இங்கே அரியணையில் 
இருக்கும்இவர்களும் 
அங்கே அரியணையில் 
இருக்கும் அவர்களும்
அரசியல் தீர்வு - என்று
ஒரே சமயத்தில்
வாய் திறக்கிறார்கள்...
 

குப்பென்று அடிக்கிறது
பிணநாற்றம்.

உயிரோடு மனிதரைப்
புதைத்த இடத்தில்
நாற்காலி போட்டு
அமர வேண்டுமாம்!
பறப்பதற்கு எதற்கு
பறவைக்கு இருக்கை?
அதற்காகத் தானே
இருக்கிறது இறக்கை!


மனித நீதிகளை மறுதலித்துவிட்டு
5000 கிலோமீட்டருக்கு
ஏவுகணை அனுப்பி
அங்கேயாவது இருக்கிறதா
காந்தியம் என்று
தேடிக்கொண்டிருக்கிறது
பாழாய்ப்போன பாரதம்.


ஒன்றரை லட்சத்தைக்
கொன்று குவித்த மண்ணில்
ஐம்பதாயிரத்துக்கு
வீடு கட்டித் தருவார்களாம்
கேடுகெட்டவர்கள்.
எல்லா வீடுகளிலும்
பிராத்தல் ஹவுஸ் - என்று
போர்டு மாட்டி,
புத்தபிக்குகளை மட்டுமே
அனுமதித்தாலென்ன

 

இரு நாடுகளுக்கு இடையே
நடந்தால்தான் போர்

என்றுபோதிக்கிறது
ஒருபாதிக் கிறுக்கு.
 

அண்ணனும் தம்பியும்
அடித்துக்கொண்டதை
பாரதப் போர் - என்கிறது
அதேசாதிக் கிறுக்கு.


மலேஷியாவில் அடிக்கிறார்களாம்..
இலங்கையில் அடிக்கிறார்களாம்..
இனி அடிவாங்கக் கூடாதாம்..
திருப்பி அடிக்க வேண்டுமாம்..
ஆறாம் அறிவு
நமக்கில்லை என்கிற
மூல ரகசியத்தைப் 

புரிந்துகொண்டு,
வசனங்கள் மூலம்
வசூல் புரட்சி செய்ய
முயற்சிக்கின்றன
சில முகமூடிகள்.
 

வசனங்கள் பேசாமல்
30 ஆண்டுகள் முன்
திருப்பி அடித்தவன்
ஹீரோ எனில்,
30 ஆண்டு கழித்து
வசனம் பேசுகிற நீ யார்? என்று
கேள்வி கேட்க வக்கில்லாமலேயே
வண்டி ஓட்டுகிறோம் நாம்.


மைல் கணக்குகளை
இந்தியா மறந்துவிடக் கூடாது.
ஜாலியன் வாலாபாக்
எங்களுக்கு 2000 மைல்.
முள்ளிவாய்க்கால்
எங்களுக்கு
இருபத்தாறு மைல்.
 

அங்கே
ஆயிரத்து சொச்சம்..
இங்கே ஒன்றரை லட்சம்.
மனக்கணக்கு மட்டுமில்லை...
இது பிணக்கணக்கு!
எதற்காக
அழவேண்டும் நாங்கள்?
இதற்காகவா.. அதற்காகவா?

ஜாலியன் வாலாபாக்குக்கு
நியாயம் வழங்க
22 ஆண்டானது
உத்தம்சிங்குக்கு.
முள்ளிவாய்க்கால் தீர்ப்பை
நாங்களே எழுத நேர்ந்தால்
அத்தனை ஆண்டுகள்
தேவைப்படாது.


தீர்ப்புகள் திருத்தி எழுதப்பட்டபின்
முள்ளிவாய்க்கால் திசை நோக்கி
யாத்திரைகள் தொடங்கும்.
அதைத் தவிர
வேறு எது
எங்களுக்கு
புனித மண்?

சிகப்புத் தோழர்கள்அங்கே யாரும்
கேட்கவில்லையாம்
ஈழம்....
 

பட்டுப்புடவையோடு
சுற்றுலா சென்றுவிட்டு
மகிந்தனுடன் விருந்துண்ட
குந்திதேவிகள்
இங்கே வந்து 
ஏப்பம் விடுகிறார்கள்.
 

சிவப்புத் துண்டு
மிருகத்தைத் தவிர
வேறெவரையாவது
தனிமையில் சந்திக்க
முயன்றதா
தாய்க்குலம்!
 

பூசா முகாமில் வதைக்கப்படும்
வீர மங்கைகளைப்
பார்த்தாரா இந்த பாரதமாதா?
சீரழிக்கப்பட்ட
சிறுமிகளையாவது சந்தித்தாரா?
யாரும் கேட்கவில்லை - என்று
யாரைக் கேட்டு அறிவிக்கிறாய் தாயே!

நேற்று ஒரு மாதிரியும்
இன்று ஒரு மாதிரியும்
பேசுவதில்லை.
 

சிங்கள ஓநாய்களுடன்
சேர்ந்து வாழவே
விருப்பமாம் தமிழருக்கு...
அங்கே யாரும்
ஈழத்துக்காகச் சாகவில்லையாம்..
சாதிக்கிறது சிகப்பு.
வேறெதற்காகச் செத்தார்களாம் -
10 சீட், 12 சீட்டுக்காகவா?
 

கோபாலபுரத்து ஆண்டைகளிடமும்
போயஸ் தோட்ட ஆண்டைகளிடமும்
10 சீட்டுக்காக பல்லிளித்துச் சாகும்
நந்திக்கிராமத்து சிகப்பு கிங்கரர்களின்
ஈறுகளிலெல்லாம் ரத்தக் கறை!

எங்கள் சொந்தங்கள்
போரிட்டுச் சிந்திய ரத்தத்தின் கறை!
 

இவர்கள் போதாதென்று
இருக்கவே இருக்கிறார்கள்
எப்போதும் போல் எம் கூடவே இருந்து
கழுத்தறுக்கும் அதிபயங்கரவாதிகள்.
ஈழம் காணாமல் சாகவேமாட்டார்களாம்..
இப்படியெல்லாம் பேசி பயமுறுத்துகிறார்கள்.
 

உருகி உருகி
அவர்கள் ஊளையிடத் தொடங்க,
வாய்க்குள்ளிருந்து வழிகிறது
எங்கள் சொந்தங்களின்
ரத்தம்.


சந்தடிசாக்கில்,
அப்பாவித் தமிழர் ஒருவர்கூட
ரத்தம் சிந்தவில்லை - என்று
சலங்கை கட்டி ஆடுகிறது இலங்கை.
பொறுப்புடன் நடத்தினார்களாம்
போ'ரை'...
 

'ரை' சொல்ல வாய்பிளக்கும்
மகிந்தனின் பற்களில் ரத்தக் க'றை'.


இருக்கிற சந்தேகம்
வலுக்கிறது எனக்கு...
கண்டிப்பாக ஒருநடை
கண்டிக்குப் போய்ப்
பார்த்தாக வேண்டும்...
புத்தனின் பல்லிலும்
இருக்கலாம்
ரத்தக் க'றை'


புகழேந்தி தங்கராஜ்

May 12, 2012

கோபாலபுரம்-ராஜபக்‌ஷேவும் கொழும்பு-கருணாநிதியும்.

இன்றைய  அரசியல் சூழ்நிலையில் தனது ஆசை விருப்பம் அனைத்துமே தனி தமிழ் ஈழமே என தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி பேசியும்,எழுதியும் வருகிறார். ஆனால் அதற்கானவாய்ப்பும்,சூழலும்,சந்தர்ப்பமும் அமைந்த நேரமான 2009 மே மாதத்தில் தமிழக ஆட்சிக்கட்டிலில் இருந்த இவர் செய்த அப்பட்டமான தமிழின துரோகத்தை தனது தம்பி-நான்-புரட்சித்தலைவர் தொடரில் புலவர் புலமைப்பித்தன் அவருக்கே உரிய ஆவேசத்தோடும்,ஆதங்கத்தோடும் கருணாநிதியின் போலிவேடத்தை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறார்


தியாகம் செய்பவனுக்கு இருக்கும் துணிச்சலைக் காட்டிலும்; துரோகம்
செய்தவனுக்குத்தான் துணிச்சல் அதிகம்.
தியாகம் செய்பவனது துணிச்சல், அந்த கண நேரம் வருகிற துணிச்சல்.
ஆனால், துரோகம் செய்கிறவனுக்கு உள்ள துணிச்சல் காலமெல்லாம் இருக்கும் துணிச்சல். மானமுள்ள தமிழ் மக்களுக்கு உயிராயுதம் வழங்கிவிட்டுப் போனானே;அந்த, மரணத்தை வென்ற மாவீரன் தம்பி முத்துக்குமார். அவனுக்கு இருந்ததுணிச்சல் தன் உடல் மீது தீவைத்துக் கொள்ளும் வரை இருந்த துணிச்சல்.
ஆனால், கருணாநிதிக்கு இருக்கும் துணிச்சல், காலத்தை வென்று நிற்கும் துணிச்சல்.எந்த துரோகத்தையும் அஞ்சாது செய்கின்ற அந்த துணிச்சல் கருணாநிதிக்குமட்டுமே வாய்த்த தனிப்பெரும் துணிச்சல்.
உலகம் எவ்வளவுதான் ஏசினாலும் பேசினாலும் துடைத்துப் போட்டுவிட்டுப்போகிற துணிச்சல், உலகத்தில் எத்தனை பேருக்கு வந்துவிடும்?ஒன்றரை லட்சம் நம் தமிழ் உறவுகளை ஈவிரக்கம் இல்லாமல் ஈனர்கள்கொன்றொழித்தபோது அந்த கயவாளி மக்களுக்கு துணை நின்று, காட்டிக்கொடுத்து, ஒற்றை நாற்காலியை பாதுகாத்துக் கொண்ட ஒருவன்;ஈழதேசமே ரத்தத்தில் குளித்த ஈர தேசமாய் போனதைப் பார்த்து ரசித்த;பிறக்கும்போதே மனசாட்சி இல்லாமல் பிறந்த இந்த மனிதர், தமிழ் ஈழம்தான்தீர்வு என்று பேசுவதற்கு எத்தனை தைரியம், எத்தனை துணிச்சல்இருக்கவேண்டும்!


சிவப்பு விளக்குப் பகுதியில் உள்ள சிங்காரிகளின் தலைவி ஒருத்தி
சிலப்பதிகார மாநாடு கூட்டியதைப் போல... இந்த மனிதர் எப்படி வெட்கம்இல்லாமல் ஈழம் என்று பேச வருகிறார்! எப்படி பேச முடிகிறது!


மானமுள்ள மனிதனுக்கு ஒரு நாக்கு, ஒரு வாக்குத்தான் அடையாளம். ஆயிரம்நாக்கு, ஆயிரம் வாக்கு என்று இருக்கிற ஒருவரை மனித சாதியிலே சேர்த்துக்கொள்ள முடியாது. உலகத்தில் இருக்கும் எல்லாவற்றிலும் போலிகள் இருக்கின்றன.தமிழில் எழுத்துப் போலி கூட இருக்கிறது. அப்படி அப்படி ஒரு மனிதப் போலிதான் நண்பர் கருணாநிதி.


மனிதர்களிலும் போலிகள் இருக்கிறார்கள்.தலை, முகம், கண், காது, வாய், மூக்கு, கழுத்து, உடல், கை, காலென்று எல்லாமனிதர்களுக்கும் இருப்பதைப் போல மனிதர்களாக இல்லாத சில பேருக்கும்இருக்கும். ஆனால் அவர்கள் மனிதர்கள் அல்ல என்கிறார் வள்ளுவர். அப்படி ஒரு மனிதப் போலிதான் நண்பர் கருணாநிதி.


மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாம் கண்டதில்’ -என்கிறார் வள்ளுவர்.


இந்த மனிதர்கள் மணிக்கு மணி நொடிக்கு நொடி நாக்கையும் வாக்கையும்மாற்றிக் கொள்வார்கள். அஞ்சுவதற்கு அஞ்சும் அச்சம் இவர்களிடம் ஒரு நொடியும் இருக்காது. மானம், வெட்கம் பார்க்கமாட்டார்கள்.
தங்களுக்காக, தங்கள் நலத்துக்காகஓர் இனத்தையே அழிப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.அவர்களின் பிணங்களைக் கூட விற்பார்கள். இவர்கள் மனிதர்கள் அல்ல; மனிதப் போலிகள்! அப்படி ஒரு மனிதப் போலிதான் நண்பர் கருணாநிதி.


ஆம். கருணாநிதி மனிதரல்ல, மனிதப் போலி!இவர் உண்மையில் ஒரு மனிதராக இருந்திருந்தால்...
ஒன்றரை லட்சம் பேர்துள்ளத் துடிக்க கொன்றொழிக்கப்பட்டபோது; கொத்துக் கொத்தாக குண்டுமழை பொழிந்து நம் தமிழினம் செத்துச் செத்து விழுந்தபோது;


 தமிழ் ஈழ தேசத்தில் ரத்த ஆறு பாய்ந்தபோது;நம் தமிழ்க் குலப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுகொன்றொழிக்கப்பட்டபோது; 62 ஆயிரம் இளம் தமிழச்சிகள் தாலி
பறிக்கப்பட்டு தனி மரங்களாய் நிற்க நேர்ந்தபோது,


தன் ஒரு மகளை சிறைக்கு அனுப்பிவிட்டு சித்தம் துடித்த கருணாநிதி , சிதையிலே விழுந்து தமிழர்கள் பிணங்களாக வெடித்துச் சிதறியபோது ஏன் கவலைப்படவில்லை? கண்ணீர் விடவில்லை?


நான் இப்போதும் சொல்கிறேன், இவர் நினைத்திருந்தால் ஒரு மணி நேரத்தில்போர் நின்று போயிருக்கும். இலங்கையில் நடந்த யுத்தத்தைத் தத்தெடுத்துக்கொண்ட இந்தியாவின் மத்திய அரசை கவிழாமல் தாங்கிப் பிடித்துக் கொண்ட மனிதர் இந்தமனிதர்தானே?
  
இந்த மனிதருக்கு மனசாட்சி இருந்திருந்தால் இப்போது தமிழ் ஈழம் என்றுவஞ்சக வசனம் பேசுகிற இவருக்கு கொஞ்சமேனும் தமிழ் இனமானம்இருந்திருந்தால்... மத்திய அரசுக்குத் தந்த ஆதரவைத் திரும்பப்பெற்றிருந்தால் மத்திய அரசும் கவிழ்ந்து போயிருக்கும். யுத்தமும் நின்றுபோயிருக்கும்.
  
அதை ஏன் செய்யவில்லை என்பதை மக்கள் மன்றத்தைக் கூட்டி பகிரங்கமாக இவர்தெரிவிக்கட்டும். அதை விட்டுவிட்டு இப்போது தமிழ் ஈழம் என்று சொல்லி முடிச்சவிழ்க்கிற வேலையிலே எதற்காக ஈடுபடுகிறார்? 
என்னுடைய பார்வையில்... கோபாலபுரம் வேறல்ல, கொழும்பு வேறல்ல. இரண்டுமே ஒன்றுதான்... தமிழர்களுக்கு இரண்டுமே பலி பீடங்கள்தான்.

May 3, 2012

மீண்டும் தமிழீழம் மலரும்' என்று கூறுவதற்கு கருணாநிதிக்குக் கூச்சமாக இல்லையா


இலங்கையில் தமிழீழம் தனித்ததொரு நாடாக அமைய மத்திய அரசு ஆதரவு தர வேண்டும் என்று திடீரென்று இன உணர்வு பீறிட்டுக் கிளம்பப் பெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்!

குதிரை ஓடிவிட்ட பிறகு லாயத்தைப் பூட்டுவதற்குப் பூட்டைத் தேடுகிறார் கருணாநிதி!
மூன்றாண்டுகளுக்கு முன்வரை போராடுவதற்கு ஒரு வலுவான போராளிகள் கூட்டம் இருந்தது. அப்போது பேசியிருக்க வேண்டும் இதை! அப்போது சகோதர யுத்தம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்; தமிழீழம் சாத்தியமில்லை என்று பேசிக் கொண்டிருந்தவர்; இப்போது "ஈழம் எங்கள் தாகம்' என்று புறப்பட்டு விட்டார்!

அதை ஐ.நா.வுக்குக் கொண்டு செல்ல மத்திய அரசுக்கு விண்ணப்பம் போடுகிறார் கருணாநிதி! ஈழத்தை இந்த அளவுக்குச் சின்னாபின்னப்படுத்தியதே தானும் மத்திய அரசும்தான் என்பதை மூன்றாண்டுகளில் மக்கள் மறந்திருப்பார்கள் என்று கருதிக் கொண்டு!

யாருடைய தயவும் இல்லாமல் ஈழம் பல ஆண்டுகள் ஓர் "அறிவிக்கப்படாத' சுதந்திர நாடாகவே இருந்தது. வரி வசூல் நடந்தது; காவல் நிலையங்கள் செயல்பட்டன; நீதிமன்றங்கள் இயங்கின; சாலைகள் போடப்பட்டன!

ஐ.நா. அவையில் அது ஓர் உறுப்பு நாடாக இல்லை என்பதைத் தவிர வேறு எந்த நிலையிலும் அது குறைவுடையதாக இல்லை.

சிங்கள தேசியம் வாலைச் சுருட்டிக் கொண்டிருந்தது! பெரும்பான்மையான மக்களைச் சிறுபான்மை மக்கள் ஒரு கோட்டுக்கு இந்தப்புறம் வராதவாறு நிறுத்தி வைத்திருந்த வியப்பு உலக வரலாற்றில் முதன் முதலாக அரங்கேறியது! இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள இனவாதம் ஒரு நேரத்திற்காகக் காத்திருந்தது.

ஒரு பெரிய வரலாற்று வேடிக்கை என்னவென்றால், கருணாநிதி அரசும் மன்மோகன் அரசும் சிறுபான்மை அரசுகள்; ஒன்றை ஒன்று முட்டுக் கொடுத்துக் கொண்டு வாழ வேண்டிய நிலையில் இருந்தவை!

காங்கிரஸ் எப்போதுமே பெரிய அண்ணன்தான்! கருணாநிதி எப்போதுமே வாலைக் காலுக்குள் வைத்துக் கொண்டு தில்லி பீடத்திற்குப் பவ்வியமாக வாழ்ந்து பழக்கப்பட்டவர்தான்!

தமிழ் ரத்தத்தை மண்ணில் தெறிக்கச் செய்கிற மன்மோகன் அரசின் கூட்டணியில் தி.மு.க. இருக்காது என்று கருணாநிதி எகிறி இருந்தால், மத்திய அரசு கவிழும் நிலையும், அதன் எதிர்விளைவாகக் கருணாநிதி அரசு தமிழ்நாட்டில் கவிழும் நிலையும் ஏற்பட்டிருக்கும்! ஆனால் ஈழத்தில் போர் நின்றிருக்கும்!

ஈழம் "அறிவிக்கப்படாத' சுதந்திர நாடாகவே நீடித்திருக்கும்!

சுதந்திர நாடாக இருந்த ஈழத்தைச் சுடுகாடாக்கிவிட்டு, "மீண்டும் தமிழீழம் மலரும்' என்று எழுதுவதற்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும்?

இனி எதிலிருந்து தமிழீழத்தை மலரச் செய்வது? சாம்பலிலிருந்தா? சொல்லிப் பார்ப்பதற்குக் கூடக் கருணாநிதிக்குக் கூச்சமாக இல்லையா?

எந்த விடுதலை இயக்கமும் தன் இலக்கை இன்றோ, என்றோ அடையாமல் முற்றுப் பெறுவதென்பதே இல்லை! ஆனால் அதைச் சொல்லுகின்ற தகுதி அதை அழிப்பதற்குத் துணை போனவர்க்கு உண்டா என்பதே கேள்வி!
பழ.கருப்பையா.

May 1, 2012

இலங்கை தமிழ் மக்களுக்கு கருணாநிதி செய்த துரோகம்

2009-ம் ஆண்டு இலங்கையில் உச்சகட்ட போர் நடைபெற்றபோது ஒன்றும் செய்யாமல் இருந்ததாக என்னை விமர்சிப்பவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை' என்று கருணாநிதி சொல்லியிருப்பதை விட அதற்காக மன்னிப்பு கேட்டிருந்தால் சற்று உயர்வாக மதிப்பிட முடியும்

ஆனால் 2009 ஆம் ஆண்டில் தமிழ் ஈழத்தில் இனவெறி சிங்கள படைகள் கொத்து கொத்தாக ஈழ தமிழ் மக்களை கொன்று குவித்து கொண்டிருந்தபோது தமிழ் நாட்டில் உண்ணாவிரத கபடநாடகம் ஆடிய அப்போதைய முதல்வர் கருணாநிதியை  மன்னிக்க முடியாது.  

நீங்கள் செய்த தமிழ் இன துரோகத்தை விட இந்த உலகில் இலங்கை தமிழ் மக்களுக்கு துரோகம் செய்த ஒரு தலைவர் உண்டா உங்களை தவிர?. 

தன் மகன்கள் அடித்துக்கொள்வதை தவிர்க்கவும்,திசை திருப்பவும்  மு.க. தற்போது கையில் எடுத்து உள்ள ஆயுதம் தான் டெசோ எனும் ஈழதமிழர் பிரச்சனை

 எப்படியோ அடுத்த நான்கரை ஆண்டுக்காலம் அரசியல் பிழைப்பு நடத்த, நல்ல அரசியல் வியாபாரம் செய்ய காரணம் கிடைத்து விட்டது .