Apr 27, 2012

தி.மு.க.அமைச்சரவை ‘டிஸ்மிஸ்’ ஆகப் போகிறது கவிஞர்கண்ணதாசன்


தலைவர் காமராஜர் இறந்து இருபத்தி இரண்டு நாட்களுக்குப் பிறகு மலேஷியாவிலிருந்து திரும்பி, தலைவர் காமராஜர் சமாதிக்கு வந்து விட்டு இங்கே வந்தபோது, இங்கே நிலைமைகள் தலைகீழாக இருந்தன.

இந்திராவோடு சேரவேண்டும்என்று சிலரும், ‘சேரக் கூடாதுஎன்று சிலரும் காமராஜரின் பழைய காங்கிரஸில் வாதாடிக் கொண்டிருந்தார்கள். சேர வேண்டும்என்ற கூட்டத்திற்கு ஆதரவாக நான் பல இடங்களுக்கும் போவதென்று முடிவு கட்டினேன்.

சேரக் கூடாதுஎன்ற கூட்டத்திற்கு ஆதரவாக கருணாநிதி போலீஸ், ஆட்கள், லாரி இவ்வளவையும் சப்ளைசெய்து கொண்டிருந்தார்.

ஆகவே என்னுடைய எதிர்ப்பு சேரக் கூடாதுஎன்கின்ற காங்கிரஸ்காரர்களோடு அல்ல; சேரவிடாமல் தடுக்கின்ற கருணாநிதியோடு என்று ஆயிற்று.

நான் அவரைக் கடுமையாக எதிர்த்தேன். சில கூட்டங்களில் கூட, "Your, days are counted, Our
steps are measured - உனது நாட்கள் எண்ணப்படுகின்றன; எங்கள் நடவடிக்கைகள் அளந்து செய்யப்படுகின்றனஎன்று நான் பேசியிருக்கிறேன். அப்படிப் பேசி அவரைப் பயமுறுத்தியும் பார்த்திருக்கிறேன்.

பிறகு டெல்லியோடு நான் தொடர்பு கொண்டு, “திராவிட முன்னேற்றக் கழக அரசைடிஸ்மிஸ்செய்யாமல் காரியம் நடக்காதுஎன்று சொன்னபோது, ‘அதை எப்படிச் செய்வதுஎன்றுதான் அங்கிருப்பவர்கள் கேட்டார்கள்.

ஆனால் எவ்வளவு கெட்டிக்காரத்தனமாக அவர்கள் நடந்து கொண்டார்கள் என்பதை எண்ணும் பொழுது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அந்தக் கெட்டிக்காரத்தனம்தான், இன்றைக்கு வரைக்கும் இந்திராகாந்தியைக் காப்பாற்றி வருகிறது.

டிஸ்மிஸ் செய்யவே முடியாதுஎன்று காங்கிரஸ் காரர்கள் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சரியான நேரம் பார்த்து டிஸ்மிஸ்செய்தார்கள்.

இரு காங்கிரஸ் இணைப்பை எதிர்த்த பா. ராமச்சந்திரன் போன்ற காங்கிரஸ்காரர்களுக்கு கருணாநிதியின் ஆதரவு உச்சத்திற்குப் போய்விட்ட நேரம்.
எந்தக் கூட்டத்திற்குப் போனாலும் ஏராளமான திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கல் காங்கிரஸ் காரர்கள் வேஷத்தில் கலவரம் செய்து கொண்டிருந்த நேரம். என்ன செய்வது என்று புரியாமல் நம்முடைய நண்பர்களே திகைத்துக் கொண்டிருந்த நேரம்.

ஸ்வாகத்ஹோட்டலில் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சிலரும், பழைய காங்கிரஸ்காரர்கள் சிலரும் சேர்ந்து, உள்ளே நுழைந்து காங்கிரஸ்காரர்களைத் தாக்குகின்ற அளவிற்கு அது முற்றிவிட்ட நிலை.

இந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் நான் வீட்டில் இரவில் உட்கார்ந்திருக்கும் போது, எனக்கு டில்லியிலிருந்து ஒரு டெலிபோன் வந்தது.

விஷயம் தெரியுமா?’ என்று கேட்டார்கள். என்ன?’ என்று நான் கேட்டேன். "D.M.K. Ministry dismiss ஆகப் போகிறதுஎன்றார்கள்.

எப்பொழுது?’ என்று கேட்டேன்.

நாளைக்கே இருக்கலாம்என்று அவர்கள் சொன்னார்கள்.

உறுதியாகச் சொல்லுங்கள்என்றேன்.

உறுதியாக நாளைக்கே; யாரிடமும் சொல்லி விடாதீர்கள்என்றார்கள்.

சொன்னவர் அப்போது மிகப் பெரிய பொறுப்பில் இருந்தவர். என் பேரைச் சொல்லிவிடாதீர்கள்என்றார்.

நான் அதிகாலையில் நவசக்திபத்திரிகை காரியாலயத்திற்கு எழுந்து சென்று அங்கே உட்கார்ந்து நாளையப் பொழுது நன்றாக விடியும்என்று தலைப்புப் போட்டு இன்று திராவிட முன்னேற்றக் கழகம் அமைச்சரவை டிஸ்மிஸ்ஆகப் போகிறது என்று சொல்லாமல், ‘இன்று அந்தப் பொழுது முடியப் போகிறதுஎன்பது போல அதை எழுதினேன்.

நாளையப் பொழுது நன்றாக விடியும்என்ற தலைப்பு அதற்குப் பொருத்தமாக அமைந்தது. அந்தத் தலைப்பை நான் அதில் போட்ட பிற்பாடு அந்தப் பத்திரிகையைப் பார்த்துதான் கருணாநிதியே சந்தேகப்பட்டார்.

அப்போது அவர் கோபாலபுரத்தில் ஒரு பள்ளிக் கூடத்தில் பேசிவிட்டு வீட்டுக்குத் திரும்பினார். வீட்டுக்குத் திரும்பியவர் அந்தப் பத்திரிகையைப் பார்த்துஎன்ன இந்தத் தலைப்புப் போட்டிருக்கிறானேஎன்று டெலிபோன் செய்தார், சுமார் ஒன்றரை மணிக்கு.

அப்போதும்கூட டெல்லியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகக்காரர்கள் - பெயரைச் சொல்வதானால் ராஜாராம், முரசொலி மாறன், மாரிசாமி போன்ற நண்பர்கள் -அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. நீங்கள் ஒன்றும் பயப்படத் தேவையில்லைஎன்று தான் அவருக்குச் சொன்னார்களாம்.

ஆனால் சரியாக 3 மணிக்கு டெலிபிரிண்டரில்செய்தி வந்தது. D.M.K. Ministry dismissed - ‘தி.மு.க. மந்திரி சபை கலைப்புஎன்று. இந்தச் செய்திடெலிபிரிண்டரில் அடிக்கப் பட்டவுடனேயே நண்பர் கருணாநிதி முதல் டெலிபோன் செய்தது என்னுடைய அண்ணன் ஏ.எல்.எஸ். அவர்களுக்கு. டெலிபோன் செய்து அவரை வரவழைத்தார்.

ஏ.எல்.எஸ்., கருணாநிதினுடைய வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே அடுத்த டெலிபோன் செய்வதற்கு அவர் டெலிபோனை எடுத்தார். ஆனால் டெலிபோன் கட்டாகி விட்டது.

மிக முன் ஜாக்கிரதையாகவே எல்லாக் காரியங்களையும் டெல்லி செய்து வைத்திருந்தது.

திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவை டிஸ்மிஸ்ஆகப் போகிறது என்ற செய்தி எனக்கு எப்படித் தெரிந்தது என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

No comments: