Aug 30, 2011

தூக்கிலிட 8 வாரங்கள் தடை. தூக்கு தண்டனை குறைக்க தமிழக சட்டசபை தீர்மானம்.


ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இப்பொழுது தான் சிறிதாவது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது..

லட்சக்கணக்கான தமிழார்வர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனையிலிருந்து விடுதலை பெற சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி நல்ல காரியம் செய்தார்.

அரசியல் அயோக்கியத்தனம், நாடகம், நீலிகண்ணீர், கொடூர எண்ணம், வஞ்சம் தீர்ப்பது, போன்ற எத்தனை எண்ணற்ற பல துரோக செயல்களை கொடுமைகளை, தமிழ் மக்களுக்கு காங்கிரஸ், மற்றும் மத்திய அமைச்சர்கள், அரங்கேற்றி வருகின்றனர். 

தமிழ் இனத்தை ஒன்றும் தெரியாத மடையர்கள் என நினைத்து.
'வாழ்வதற்குரிய சட்ட ரீதியிலான அடிப்படை உரிமையை" பறித்த கொடுமையிலும் கொடுமை. காங்கிரஸால்  எற்படுத்தப்பட்ட்து. 

இடைக்காலத் தடைக்கு பிறகு இவர்களது தூக்கு தண்டனை முழுவதும் ரத்து செய்து தீர்ப்பு வர வேண்டும்.இதுவே உலக தமிழார்வர்களின் வேண்டுகோள்.

Aug 28, 2011

ராஜீவ் காந்திகொலை வழக்கு தீர்ப்பின் முரண்பாடுகள்.

ராஜீவ் காந்தி படுகொலை  வழக்கில் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்

இந்திய தண்டனை சட்டம் 302 A தெளிவாக சொல்கிறது. 
கொலை குற்றவாளிக்கும், மற்றும் இன்னொரு பிரிவு கற்பழிப்பு ஆகியவற்றுக்கு மட்டுமே தூக்கு தண்டனை கொடுக்கிறது.

எந்த இடத்திலும் கொலைக்கு உடந்தையாக இருப்போருக்கு தூக்கு தண்டனை விதிக்க இந்திய தண்டனைச் சட்டம்  இடமளிக்கவில்லை.

இராஜீவ் கொலை குற்றம் சுமத்தப்பட்டது முதல் குற்றவாளி பிரபாகரன் .இரண்டாம் குற்றவாளி பொட்டு அம்மான். மூன்றாம் குற்றவாளி தாணு, சிவராசன் மற்றும் சிலர்.இதில் 18,19,நிலையில் உள்ளவர்கள் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர்.

இதில் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி உட்பட 129 பேருக்கு தொடர்பு இருப்பதாக குற்றப்பத்திரிக்கை சொல்கிறது.

26 பேர் (இந்த மூவர் உட்பட) உடந்தை  என்றும் சொல்கிறது.  தூக்கு தண்டனை விதிக்கப்பட்டோர் யாருக்கும் இராஜீவை கொல்லபோகிறார்கள் என்கிற உண்மை தெரியாது என்றும் அதே குற்றப்பத்திரிக்கை தான் கூறுகிறது.

வழக்கும் குற்றப்பத்திரிக்கையும் இப்படி இருக்க இருபது ஆண்டுகள் நீடிக்கும் இவ்வழக்கில் இவர்கள் மூவரை தூக்கிலிட எந்த சட்டம் அனுமதி கொடுக்கிறது! இது சட்டத்தை கொச்சை படுத்தும் செயல்.

இவ்வழக்கு ஒரு கொலைகுற்றத்துக்கான வழக்காக நடைபெறாமல், ஏதோ ஒரு இன அழிப்பு குற்றத்துக்காக நடைபெறுவது போல் உள்ளது.
இவர்கள் மூவரும் தூக்கிலிடப்பட்டால் சீனாவையும் விட மிஞ்சும் கொடுமையான அடக்குமுறை அரசாட்சி என்று உலகம் இந்தியாவை தூற்றாதா?.

கடுமையான தண்டனை விதிக்கும் அரபுநாடான் சவுதியில் கூட கடந்த மாதம் ஜூலை 31 தேதி இலங்கையை சேர்ந்த ஒரு கொலை குற்றவாளி மன்னித்து விடுதலை செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.

இவர்களை விட ஒரு மடங்கு மேன்மையாக அல்லவா இந்தியா இருக்க வேண்டும். கீழ்த்தரமான செயல்களை செய்து இந்திய நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவேண்டாம்.

எனவே மத்திய அரசும்,தமிழக அரசும் தூக்குதண்டனையை தடுத்து நிறுத்தி தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்.

Aug 26, 2011

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா அமைச்சர் அழகிரி

தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், பொய் வழக்கு போடும் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்'' என, மத்திய அமைச்சர் அழகிரி பேசியுள்ளார்..

அழகிரி அவர்களே, உங்க குடும்பத்துக்கே பைத்தியம் பிடித்துவிட்டதா? திமுக மீண்டும் ஆட்சிக்கா ? நீங்க நல்லா ஜோக் அடிக்கிறீங்க.. முதலில் திமுக ஆட்சிக்கு வரட்டும், பிறகு பார்க்கலாம், தேர்தலுக்கு பிறகு அதிமுக அழிந்துவிடும் என்று சொன்னீர்களே, இப்போ யார் அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று இப்போதாவது புரிகிறதா?

சென்ற தேர்தலில் எதிர் கட்சிக்கு கூட தகுதி இல்லாமல் பொது மக்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.உமக்கும் உன் கூட்டத்தாருக்கும் புரியவில்லையா. மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்பது வெறும் பகல் கனவு.
ஒரு வேளை நீங்கள் சொல்லுவதை போல நடக்கவே இன்னும் நான்கரை ஆண்டுகள் ஆகும், அதற்குள் என்னென்னமோ நடக்கலாம்,

அதாவது கருணாநிதிக்கு 60 வயதாக இருந்திருந்தால்
உங்க  இரண்டு பேருக்கும் சண்டை வந்து கட்சி உடையாமல் இருந்தால்,
கட்சியில் உள்ள அனைவரும் சிறையில் இருந்து வெளியே வந்தால்
காங்கிரஸ் கூட்டணியிலிருந்து நீங்கள் விலகினால் நடக்கும் வாய்ப்பு உள்ளது,

கேள்வி பதில் அறிக்கை விடுவதும், இரட்டை அர்த்தத்தில் கரித்து கொட்டுவதும், மக்களை மடையர்களாக நினைப்பதும், வெங்காய விலையை பெரியாரிடம் போய் கேள் என்று நக்கலாக சொல்லுவதும்,
தமிழர்களை ஏமாற்ற இரண்டு மணி நேரம் காமெடி நாடகஉண்ணாவிரதம் இருந்தால் நீங்கள் அடுத்த தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

அடுத்த தேர்தலுக்குள் திமுக அழியாமல் இருந்தால் நடக்கும் வாய்ப்பு உள்ளது, ஆனால் இதெல்லாம் நடக்க கூடிய சாத்தியமா?  

அத்தைக்கு மீசை முளைத்தால் தானே சித்தப்பா ஆகமுடியும்.... என்ன நான் சொல்லுவது?இன்னும் 5 வருடம் இருக்கு அது வரைக்கும் உங்கள் கட்சி இதை போல் ஒன்னா சேர்ந்து இருக்குமா? முதலில் அதை யோசி அப்புறம் அதிகாரிகளை தண்டிக்கலாம். அத்தைக்கு மீசை முளைத்தபின் சித்தப்பா என கூப்பிடுவதைப்பற்றி யோசிக்கலாம்.

Aug 25, 2011

ராஜீவ் காந்திகொலை.அதிரவைக்கும் உண்மைகள்.தொடர்ச்சி.3 பழ. நெடுமாறன் பதில்.

'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மரண தண்டனைக் கைதிகள் மூவருக்குநீதி வழங்க வேண்டும்என்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், பேரணி, பொதுக் கூட்டங்கள் என வரிசையாக உரிமை முழக்கங்கள் ஓங்கி ஒலிக்கிறது. ஏற்கனவே, ராஜீவ்கொலை வழக்கில், பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்க...அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் வரை சென்று 19 பேரை உயிருடன்மீட்டது, '26 தமிழர் உயிர் காப்புக் குழு.’ அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட பழ. நெடுமாறனிடம் சில கேள்விகளைமுன்வைத்தோம்!

''இந்த விவகாரத்தில் நடந்தது, நடப்பது என்ன?''

''இந்த வழக்கை தடா நீதிமன்றத்தில் விசாரித்த முறையே அடிப்படையில் தவறானது. மகாத்மா காந்தி, இந்திரா காந்தி கொலைவழக்குகளில்கூட, ரகசியமாக அல்ல, பகிரங்கமாகத்தான் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், இந்த வழக்கின் விசாரணை மூடுமந்திரத்தைப் போல பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. விசாரணையில் பத்திரிக்கையாளர், பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை . 26 தமிழர்களுக்காக வாதாட முன்வந்த வழக்கறிஞர்களும் மிரட்டப்பட்டனர்.

தடா நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுகளாக வழக்கை விசாரித்த நீதிபதி சித்திக்திடீரென மாற்றப்பட்டு, நவநீதம் நியமிக்கப்பட்டார். நான்கு ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட சாட்சியங்கள், குறுக்கு விசாரைணைகள் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் ஓர் ஆண்டு காலத்திலேயே படித்தறிந்து, 26 பேருக்கு அவர் தூக்குத் தண்டனையை விதித்தார்.

இது மனித முயற்சிகளுக்குஅப்பாற்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் இதை விசாரித்து, 19பேரை விடுதலை செய்தனர். மூன்று நபர்களின் தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாகவும் குறைக்கப்பட்டது. சிறந்த வழக்கறிஞர் என்.நடராஜன்மூலம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தோம். அப்படிச் செய்திருக்காவிட்டால், 26 தமிழர்களின் உயிர்களும் பறிக்கப்பட்டு இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

'ராஜீவ் கொலை வழக்கில், தடா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டியது செல்லாது’என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துவிட்டது. ஆனால், அதே தடாசட்டத்தின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்பைடயில், நான்கு பேரின்மரண தண்டைன உறுதி செய்யப்பட்டது முரண்பாடானது அல்லவா? உச்சநீதிமன்றத்தால் நான்கு பேரின் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்ட பிறகு,தமிழக ஆளுநருக்கு மனு அனுப்பப்பட்டு, அது தள்ளுபடி செய்யப்பட்டது.

உடனே, 'தமிழர் உயிர்காப்புக் குழுவின் சார்பில், சென்னை உயர்
நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததீர்ப்பைப் பெற்றோம். 'தமிழக அமைச்சரைவயின் ஆலோசனையின்படிஆளுநர் முடிவெடுக்க முடியுமே தவிர, தன்னிச்சையாக முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லைஎன உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

எதிர்காலத்தில் இந்தியாவில் எந்த மாநிலத்தின் ஆளுநேரா அல்லது குடியரசுத் தலைவரோ, கருணை மனுக்கள் மீது தன்னிச்சையாக முடிவெடுப்பதை இதன் மூலம் தடுத்து நிறுத்தினோம். எனவே, நான்கு பேரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்கும் அதிகாரத்தைமுன்னாள் முதல்வர் கருணாநிதிக்குப் பெற்றுத்தந்தோம். ஆனால், அதை வைத்து அவர் எதுவுமே செய்யவில்லை.

'ராஜீவ் கொலை வழக்கில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் உள்ளனஎன்று ஜெயின் கமிஷன் கூறியுள்ளது. அதைத் தொடர்ந்து, பல்வேறு உளவு நிறுவனங்களின் அதிகாரிகளை உள்ளடக்கிய பல்நோக்கு கண்காணிப்புக் குழு என்ற அமைப்ப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு இன்னும் தன் விசாரணையை முடித்து அரசுக்கு அறிக்கை அளிக்கவில்லை என்பது முக்கியமானது. இப்போது, (நளினியின் தண்டனைஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுவிட்டது).

 மூன்று பேரின் மரண தண்டனை ஒருவேளை நிறைவேற்றப்படுமானால், அதன் பிறகு இந்தக் கண்காணிப்புக் குழு தரும் அறிக்கையில், வேறு சிலர்தான் உண்மைக் குற்றவாளிகள் என சுட்டிக்காட்டப்படுவார்கள். அப்போது, இழந்துபோன உயிர்களை மீட்க முடியுமா? அப்படி ஒரு நிலையை மனிதாபிமானம் உள்ள யாராலும் நினைத்துப் பார்க்க முடியுமா?

எனவே,பல்நோக்குக் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரை மூன்று தமிழர்களின் மரண தண்டனையைநிறுத்திவைக்க வேண்டும்.''

''நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். சி.பி.. ரகோத்தமனோ, கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டதற்கு வேறு காரணம் என்கிறாரே?''

''எதற்காக அந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது? 'இந்தக் கொலையில் வேறு பலருக்கும் தொடர்பு உண்டு; அவர்களைப் பற்றிய உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டும்என்பதற்காகத்தானே இந்தக் கண்காணிப்புக்குழுவை அமைத்தார்கள்.அதை மறைத்தும் மழுப்பியும் பேசுகிறார் இந்த அதிகாரி!''

''மூவரின் உயிரைக் காக்க, சட்டரீதியான முயற்சிகள் என்ன? உங்கள் அடுத்தகட்டத் திட்டம்எது?'’

''மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனைநடத்தி வருகிறோம். சட்ட முயற்சிகள்பற்றி இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை. இந்த முயற்சிகள் ஒரு பக்கம் இருக்க... மரண தண்டனையை  முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதற்கான மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவோம்!''
நன்றி:ஜீ.வி.

Aug 23, 2011

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு.தமிழக அரசு அறிவிப்பு

                                ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் 
                                தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் 
                                என்றும், தை முதல் தேதி தமிழ் புத்தாண்டு 
                                என்பது  ரத்து செய்யப்படுவதாகவும் 
                                தமிழக அரசு அறிவித்துள்ளது.

Aug 22, 2011

ராஜீவ் காந்திகொலை.அதிரவைக்கும் உண்மைகள்.தொடர்ச்சி.2


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட
பேரறிவாளன், சாந்தன்,முருகன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களும் தள்ளுபடிசெய்யப்பட்ட நிலையில்...மூவரும் எப்போது வேண்டுமானாலும் தூக்குமேடையில் நிறுத்தப்படலாம்!

'மரண தண்டைனையை பல்வேறுநாடுகள் ஒழித்துவிட்ட பிறகு, இந்தியா அதைனப் பின்பற்ற வேண்டுமா?’ என்று மனித
உரிமையாளர்கள் ஒரு பக்கம் கேட்கிறார்கள். '

மூன்று தமிழர்கள் உயிரை பறிக்கலாமா?’ என்று தமிழின உணர்வாளர்கள் இன்னொருபக்கம் கேட்கிறார்கள். இதற்கு மத்தியில் ஒரு குரல் வித்தியாசமாக ஒலிக்கிறது.''ராஜீவ் கொலையின் உண்மைக் குற்றவாளிகள் வெளியில் இருக்கிறார்கள். அவர்களைவிட்டுவிட்டு, கொலைச் சதியில் சம்பந்தம் இல்லாதவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவது
நியாயமா?’ என்பதுதான் அதிர்ச்சிக்குரிய முக்கியக் குரல்! 

இவர்கள் அத்தனை பேரும் அடையாளம் சுட்டிச் சொல்வது சந்திராசாமி என்ற மனிதரை!

நேமி சந்த் ஜெயின் என்று அழைக்கப்படும் இவரை சந்திராசாமி என்றால்தான்அனைவருக்கும் தெரியும். முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு மிக நெருக்கமானநண்பராகவும், ராஜீவ் கொலை நடந்த காலத்தில் இந்திய பிரதமராக இருந்த சந்திரேசகருக்கு நெருங்கிய சகாவாகவும் இருந்தார்.  

உலகத்தின் மிக முக்கியமானஆயுத வியாபாரியாகச் சொல்லப்படும் கேசாக்கிக்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.  

அரசியல் தலைவர்கைள சதி வேலைகள் செய்து கவிழ்ப்பதில்
கைதேர்ந்தவர் இவர் என்பது வி.பி.சிங் விஷயத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.

காங்கிரஸில் இருந்து வெளியேறி ஆட்சியைப் பிடித்த வி.பி.சிங்கை எப்படிக்கவிழ்ப்பது என்று சிலர் திட்டமிட்டேபாது, செயின் கீட்ஸ் தீவில் வி.பி.சிங்மகனுக்குச் சொத்துகள் இருப்பதாக ஆவணங்களைத் தயாரித்துத் தந்தது இந்த சந்திராசாமிதான். அந்த ஆவணங்கள் போலியானவை என்று நிரூபணம் ஆனபோது, சந்திராசாமி பெயர் டெல்லி மீடியாக்களில் அதிகம் அடிபட்டது.இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய காரியங்களுக்கு சொந்தக்காரர் இந்த சந்திராசாமி!

இவர் மீது, அன்னியச் செலாவணியை மீறிய 12 குற்றச்சாட்டுகள் இருந்தன. அதில் மூன்றில் விடுதலை ஆகிவிட்டார். மீதி 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன.எனவே, அவர் எப்போது வெளிநாடு சென்றாலும் டெல்லி நீதிமன்றத்தின் அனுமதி பெற்றேசெல்ல முடியும்

'சந்திராசாமியை வெளிநாடு செல்ல அனுமதித்தால், அவர் திரும்பி வர மாட்டார்!’ என்று பொருளாதாரக் குற்றப் பிரிவு போலிஸார் பதில்மனுத் தாக்கல் செய்வார்கள். குறிப்பிட்ட தொகையைய டெபாஸிட்டாகக் கட்டிவிட்டு அவர் செல்லலாம் என்று நீதிமன்றமும் அனுமதிக்கும். இது கடந்த 20 ஆண்டுகளாக நடக்கும் வழக்கம்.

கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி, 'எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டும்!’ என்று அனுமதி கேட்டேபாது, அமலாக்கத் துறை அதிர்ச்சிக்குரிய காரணத்தை சொன்னது.சந்திராசாமி வெளிநாடு போனால், திரும்ப மாட்டார்.பல ஆதாரங்களை அழித்துவிடுவார்.  

மேலும் அவர் மீது சி.பி.. வழக்கும் உள்ளது!’ என்றது. 'சி.பி.. வழக்குத் தொடருமா?’ என்று நீதிபதிகள் கேட்க, தொடரும்...’ என்று பதில் தந்தார்கள்.  

ராஜீவ் கொலைச் சதியை விசாரித்த பல்நோக்குக் கண்காணிப்புப் புலனாய்வுப் பிரிவும் அப்போது மனுத் தாக்கல் செய்தது.  

அதில், 'ராஜீவ் கொலை வழக்கில் சந்திராசாமி சம்பந்தப்பட்டு உள்ளார்.எனவே அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி தரக் கூடாதுஎன்று உறுதியாகச் சொன்னது

'இதற்கு முன்னர் வெளிநாடு சென்றுவிட்டு அவர் திரும்பிவிட்டதாகச் சொல்கிறார். ஆனால், இம்முறை திரும்ப வருவாரா என
நீதிமன்றத்துக்கு சந்தேகம் இருக்கிறது. உடல்நிலையைக் காரணமாகக் காட்டுவதால், அனுமதி அளிக்கலாம். 90லட்சம் ரூபாயை டெபாஸிட்டாகச் செலுத்திவிட்டு, அவர் செல்லலாம்என்று நீதிமன்றம் சொல்ல... 'என்னிடம அவ்வளவு பணம் இல்லை. ஆனால், என் சீடர்களிடம் வாங்கிச்செலுத்தி விடுவேன்!’ என்று சொன்னார் சந்திராசாமி.

பணத்தைஉடனடியாகக் கட்டிவிட்டு, வெளிநாடு சென்றார். சந்திராசாமி
இதுவரை அமலாக்கத் துறைக்கு 65 கோடி வரை கட்டவேண்டிய பாக்கி உள்ளதாக அத்துறையின் வக்கீல் நீதிமன்றத்தில் கூறினார்.  

அப்படிப்பட்ட சந்திராசாமியை வளைக்காமல் இருக்கிறார்களே என்பதுதான் தமிழ்உணர்வாளர்களின் முக்கியக் கேள்வியாக இருக்கிறது!ராஜீவ் 

கொலைவழக்கை சி.பி.. விசாரித்தது. பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இதன் விசாரணை நடந்து, கைதான 26பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதில் 19பேரின் தண்டனைன விலக்கப்பட்டு, அவர்கள் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்கள்.

 மூன்று பேருக்கு ஆயுள் தண்டைனயாகக் குறைக்கப்பட்டது.மற்ற நான்கு பேரின் தூக்குத் தண்டணை உறுதி செய்யப்பட்டது. இதில் நளினியின் கருணை மனு ஏற்கப்பட்டு,அவர் ஆயுள் தண்டைனக் கைதியாக புழல் சிறையில் இருக்கிறார். 

நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ராஜீவுக்குத் தரப்பட்ட பாதுகாப்பில் ஏதாவது குளறுபடிகள் நடந்ததா, அதற்கு யார் குற்றவாளி என்பதை அந்த கமிஷன் விசாரித்தது.

 இதில் பல அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.மூன்றாவதாக அமைக்கப்பட்டது நீதிபதி ஜெயின் கமிஷன். ராஜீவ் படுகொலை செய்யப்பட்டதற்கான பின்னணிகள், அதில் சம்பந்தப்பட்டுள்ள நபர்கள் பற்றி இது விசாரித்தது.  

இந்த கமிஷனில் தான் பல்வேறு சர்ச்சைக்குரிய மனிதர்கள் தங்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்தார்கள்.
பல்வேறு வர்த்தகங்களில் சம்பந்தப்பட்ட பப்லு ஸ்ரீவத்சவா என்பவர் ஜெயின் கமிஷனிடம் அளித்த வாக்குமூலத்தில், ''ராஜீவ் கொலைச் செய்தி கேட்டதும் சந்திராசாமி மகிழ்ச்சியில் கூத்தாடினார்

'நரசிம்மராவைப் பிரதமராக்கப் போறேன்...’ என்று சொல்லிக்கொண்டே, ராவ் வீட்டுக்கு போன் செய்து அரை மணி நேரத்துக்கு மேல் பேசிக்கொண்டு இருந்தார்...'' என்று வாக்குமூலம் கொடுத்தார்.  

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பி.ஜே.பி. பிரமுகர் ரமேஷ் தலால், 'சந்திராசாமிக்கு இந்த சதியில் பங்கு இருக்கிறதுஎன்று சொன்னதாகவும், அதைத் தொடர்ந்து தன்னை சந்திராசாமி மிரட்டியதாகவும் 1995-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பேட்டி கொடுத்துள்ளார்.

சந்திராசாமியின் சந்தேகத்துக்கு உரிய நடவடிக்கைகள் தொடர்பாக, மகந்த் சேவா தாஸ் சிங் என்பவர் ஒரு வாக்குமூலம்கொடுத்தார். அவர், ஷாஹித் பெருமன் சிரோமணி அகாலிதள் அமைப்பின் தலைவர். இவை அனைத்தையுமே பதிவு செய்துள்ளது ஜெயின் கமிஷன்.

ஆனால், சந்திராசாமிக்கு எதிரான பல்வேறு ஆவணங்கள் திடீரென்று காணாமல் போன தகவல்களும் 97-ம்ஆண்டு அம்பலம் ஆனது

89-ம் ஆண்டு முதல் ராஜீவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய அதிகாரிகளது அறிக்கையுடன் சந்திராசாமியின் தொலைபேசி உரையாடல்களை மறித்துக் கேட்கப்பட்ட செய்திகளின் ஆவணத்தொகுப்பும் காணாமல்போனது.

இவை அனைத்துக்கும் மேலாக பெங்களூருவைச் சேர்ந்த ரங்கநாத் என்பவரது வாக்குமூலமும் சந்திராசாமியைநேரடியாகக் குற்றம் சாட்டி இருந்தது. ''பெங்களூருவில் இருந்து எங்களை சந்திராசாமி தப்ப வைத்து விடுவார்.நேபாளத்துக்கு அழைத்துச் சென்றுவிடுவதாகவும் சொல்லி இருக்கிறார்என்று சிவராசன் தன்னிடம்சொன்னதாக ரங்கநாத், தனது வாக்குமூலத்தில் சொல்லி இருக்கிறார். சிவராசன் பெங்களூருவில் தங்குவதற்கு வீடு கொடுத்த ரங்கநாத், ராஜீவ் வழக்கில் 26-வது குற்றவாளியாக இருந்து தூக்குத் தண்டனை பெற்றவர். உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்.

சென்னையில் இருந்த பத்திரிக்கையாளர் எஸ்.எம்.கார்மேகம், ஈழத்துக்குச் சென்று வந்துவிட்டு தனது அனுபவங்களை 'ஈழப் புலிகளுடன் ஒரு வாரம்என்ற தலைப்பில் தினமணியில் தொடராக எழுதினார். அவர் இலங்கை சென்றிருந்தபோது, நடிகை பமீலா அங்கு இருந்தது குறித்த தகவலைச் சொல்கிறார். கே.என்.சிங் என்ற பெயரில் பமீலா, ஈழப் பகுதிக்குள் சென்றிருந்தாராம். கொழும்பு சென்ற அவரை விமானப்படை விமானத்தில் சிங்கள அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இந்திய அழகு ராணிப் போட்டியில் வென்ற இந்த பஞ்சாபிப் பெண் பிரிட்டனில் குடியிருந்தவர். ஆயுதத் தரகர் என்று டெல்லி மீடியாக்களால்
அடையாளப்படுத்தப்படும் கேஸாகியுடன் நெருக்கமாக இருந்தவர். அவரைப்பற்றி கொழும்பு பத்திரிக்கைகள்அப்போது என்ன எழுதியது என்று கார்மேகம் சொல்கிறார்....

'பிரபாகனை எப்படியும் தேடிப் பிடித்துத் தருவேன் என்று சந்திராசாமி, இந்திய அரசிடம் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாராம். எந்த வழியைக் கையாண்டாவது அதனை செய்து முடிப்பதாக அவர் சபதம்
ஏற்றிருக்கிறாராம். அந்த சபதத்தை  நிறைவேற்றத் தான், அவர் பமீலாவை இலங்கைக்கு அனுப்பி இருக்கிறார் என்று கொழும்பு நாளேட்டில் செய்தி வந்தது.  

பமீலா இப்போதும் சந்திராசாமியின் மக்கள் தொடர்பாளர்களில்
ஒருவராக இருப்பதாகத் தெரிகிறது. பிரபாகரனை சந்திக்க ஈழப் புலிகள் அனுமதிக்கவில்லை!’ என்று அன்று கொழும்புவில் பரவிய தகவல்களை எழுதுகிறார் 

ஜெயின் கமிஷன் வாக்குமூலங்கள் முதல் கொழும்பு பத்திரிகைகள் வரைக்கும் சந்திராசாமியை நோக்கியே நீளும் நிலையில், அவரை விசாரிக்காமல் ராஜீவ் வழக்கின் விசாரணைமுடிந்துவிட்டதாக எப்படிச் சொல்லமுடியும்?
 நன்றி:ஜூ.வி.