Mar 21, 2011

காங்கிரஸுக்கு சாவுமணி அடிக்கவேண்டும்.




காங்கிரசின் அழிவில் தான் இந்தியாவின் விடிவு காலம் உள்ளது. பீகாரில் ஆரம்பித்ததை, தமிழ்நாட்டிலும் உறுதி செய்தால், இந்தியாவிற்கும் நல்ல காலம். தமிழர்களுக்கும் நல்ல காலம். காங்கிரசை பூண்டோடு அழிக்க நல்லதொரு சந்தர்ப்பம். மீண்டும் கிடைக்க வாய்ப்பேயில்லை.எனவே இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி காங்கிரஸ்கார பயல்களை ஓட ஓட விரட்டி காங்கிரஸுக்கு சாவுமணி அடிக்கவேண்டும் இது இப்போது காலத்தின் கட்டாயம். ராகுல், சிதம்பரம் போன்ற "அதிபுத்திசாலிகள்" பேச்சைக் கேட்டால் காங்கிரஸின் கதி என்ன ஆகும் என்பதை இந்த முறை தமிழக தேர்தல்கள் நிரூபித்துக் காட்டும். அழிந்து கொண்டிருக்கும் காங்கிரஸுக்கு சோனியா தன்னுடைய மகனின் தவறான அறிவுரைகளால் காங்கிரஸை புதை குழிக்கு அனுப்ப இருக்கிறார். எந்தக் காங்கிரஸை தமிழகத்தில் வேரறுக்க வேண்டும் என்று பெரியார் ஆசைப்பட்டாரோ, பேரறிஞர் அண்ணா ஆசைப்பட்டாரோ, அவர்களுடைய ஆசையை காங்கிரஸின் சோனியா ராகுல், சிதம்பரம் ஆகியோர்நிறைவேற்றியிருக்கிறார்கள்.
 
தமிழகமீனவர்,ஈழதமிழர்,ஆகியோர்இழப்பிற்கும்,
கொடுமைக்கும்,பரிகாரமாக இந்த தேர்தலில்
 
காங்கிரஸுக்கு 
 
சாவுமணி
 
அடிக்கவேண்டும்.



 தமிழர்களின் இரத்தம் குடிக்கும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்கு  

வேண்டாம்... வேண்டாம் ... வேண்டவே... வேண்டாம்....


மேலதிக விபரங்களுக்கு..
 காங்கிரசை துரத்துவோம்....!#DefeatCongress...மருதுபாண்டி.

காங்கிரஸைத் தோற்கடிக்க வாருங்கள்........கே.ஆர்.பி.செந்தில்.

1 comment:

பொன் மாலை பொழுது said...

ஆனால் அவர்களின் கால்களை பிடித்து விட்டு அவர்களை வளர்த்து விட திராவிட கட்சிகள் எல்லாமே எப்போதும் தயாராகவே உள்ளன. இதற்க்கு என்ன செய்வதாம்?