Nov 16, 2011

பெட்ரோல் விலை குறைப்பு காங்.அரசின் கயமைத்தனம்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.22 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 3ம் தேதி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 1.82 ரூபாய் அதிகரிக்கப்பட்டது.இந்த ஏற்றப்பட்ட விலை தான், தற்போது குறைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஏற்றப்பட்ட விலையை, எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தது இல்லை கடந்த 33 மாதங்களில் தற்போது தான், ஏற்றப்பட்ட பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதாலும், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ஸ்திரத் தன்மையடைந்துள்ளதாலும், பெட்ரோல் விலைகுறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன.

ஆனால் இது ஓர் அப்பட்டமான பொய். பெட்ரோல் விலையை குறைக்க கூறி பல அமைப்புகள், நுகர்வோர் அமைப்புகள், பொதுமக்கள்,எதிர்கட்சிகள் என பலரும் கேட்டபோது செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்த மத்திய காங்.அரசு இப்போ திடீரென குறைத்துள்ளது. இது மட்டுமா முந்தாநாள் பிரதமர் மன்மோகன் சிங், விமானத்தில் கொடுத்த பேட்டியில் கூட பெட்ரோல் விலையை குறைக்கமுடியாது என்று உறுதியாய் கூறினார்.ஆனால் அடுத்த நாளே பெட்ரோல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.           

காரணம்.1

பெட்ரோல் விலையை குறைக்கவில்லை எனில் தங்கள் ஆதரவு வாபஸ் என  மம்தாவின் திரிணமுல் போன்ற கூட்டணிக் கட்சிகள் காங்.அரசுக்கு கொடுத்த நெருக்கடியால் எங்கே பெட்ரோல் விலையை குறைக்கவில்லை எனில் தங்கள் ஆட்சியின் டவுசர் டர்ர்ர் ஆகிவிடுமோ என்ற பயமே இதற்கு காரணம்

காரணம்.2

சமீபத்தில் கேரளா ஹைகோர்ட் ஆயில் நிறுவனங்களின் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ய சொன்னதும் எண்ணெய் நிறுவனங்களின் டிக்கியில் நெருப்பை வைத்தது போல அலற ஆரம்பித்தன. இதுவரை எண்ணெய் நிறுவனங்களும், ரிலையன்ஸ் நிறுவனங்களும் மக்களிடம் விலையை ஏற்றி அடித்த பகல் கொள்ளை உறுதியாகி விட்டதால் இவ்வளவு நாள் அடித்த கொள்ளை  எங்கே போனது, யாருக்கு போனது. இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய இக்கட்டில் எண்ணெய் நிறுவனங்கள் மாட்டிகொண்டுள்ளன.

இத்தனைக்கும் பிறகுதான் மீசையில் மண் ஒட்டவில்லை என சில பொய்யானான சில காரணங்களை கூறி நாடகம் போடுகிறது மத்திய காங்.அரசு.

No comments: