Aug 5, 2010

காமராஜ் ஆட்சி கக்கன் ஆட்சி என்று பேசுவது வெட்ககேடு.

முன்னாள் அமைச்சர் கக்கன்


எளிமை, நேர்மைக்கு உதாரணமாக திகழ்ந்த முன்னாள் அமைச்சர் கக்கன் நூற்றாண்டு விழா மதுரையில் ஜூலை 31ல் நடந்தது .  இந்த விழா ஏற்பாடுகளை  மாநிலகமிட்டிசார்பில்விழா நடப்பதாக அறிவித்தாலும்  மத்தியஅமைச்சர் சிதம்பரம் கோஷ்டியினரே முன்னின்று நடத்தினர்.பேசிய பல தலைவர்கள் காமராஜர்ஆட்சி அமைப்போம்  என அறைகூவல்  விடுத்தனர்.
நடந்தநிகழ்வுகள்கோஷ்டிபூசலைதோலுரித்துக்காட்டுவதாகஅமைந்ததுஉண்மை காமராஜர்ஆட்சிஅமைப்போம்எனஅறைகூவல்விடுத்காங்கிரசாரின்கோஷ்டிப்பூசல் கக்கன் விழாவில் வெளியானது ..

ஆரூண் எம்.பி., பேசுகையில், தலைவர்கள் ஒற்றுமையாக செயல்படும்படி குறிப்பிட்டார்.காங்., வலுவாக இருக்கிறது. தற்போதைய கூட்டணியும் வலுவாக இருக்கிறது, என குறிப்பிட, கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது. தற்போதைய கூட்டணிக்கு இது எதிர்ப்போ? என தொண்டர்கள் மத்தியில் பேச்சும் எழுந்தது . அதை முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேச்சு பிரதிபலித்தது. அவர் பேசியதாவது:தொண்டர்களாகிய நாங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம். தலைவர்கள் நீங்கள் மேலிடத்தில் தெரிவிக்க வேண்டும். மேலிடம் எந்தப் பக்கம் போக சொன்னாலும், அந்தப்பக்கம் போவோம்{இவர்களுக்கு சுய அறிவே கிடையாது}  நாங்கள் உங்களுடன் இருப்பதால் தவறை சுட்டி காட்டுகிறோம் என்றார்.

காங்கிரஸ் கட்சி காரர்களால்ஒரு மேடையில் கூட ஒற்றுமை காட்ட முடியலை. காமராஜ் ஆட்சி கக்கன் ஆட்சி என்று இவர்கள்  பேசுவது வெட்ககேடு. அகில இந்திய அளவில் ஒரே குடும்பம் காங்கிரஸ் கட்சியை கையில் பல தலை முறைகளாக கைபற்றி வைத்துள்ளது. அந்தோ பரிதாபம், தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் பல குடும்பத்தினரின் கையில் சிக்கி சின்னா   பின்னமாகி   கந்தலாகி கிடக்கிறது . சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் பணம் பதவி  என ஆசை காட்டி தன்  அல்லக்கைகளை  வைத்து  ஒரு புறமும்.,  தங்கபாலு  இவர்  ஒருவரே போதும் மரியாதை இன்றி கூட்டணி கட்சி தி.மு.க .க்கு  ஜால்ரா போட்டும்,  காங்கிரஸ் கட்சி கோஷ்டிகளை  சிண்டு  முடிய என மறு புறமும்., இளங்கோவன் கேட்கவே  வேணாம் அவர் வாய் சும்மாவே இருக்காது  பேசி பேசியே வீணாப்போன ஜென்மங்களில் ஒருவர்தான் இந்த இளங்கோவன்அவர்  பங்குக்கு  ஒரு புறமும்., வாசன் தான் ஒருவரே  காங்கிரஸ் கட்சி என்றும்,  தன்  கோஷ்டி  தான்   காங்கிரஸ் கட்சி என்றும்,   அவர்  பங்குக்கு  ஒரு புறமும்.,   அன்பரசு, மணிசங்கர் ஐயர்,.  பிரபு,.  பீட்டர் அல்போன்ஸ் போன்ற  ஜோக்கர்கள்  எந்த கோஷ்டி கை ஓங்குதோ அங்கே ஜிங்குசா போட்டு  காங்கிரஸ் கட்சியை கேவல படுத்தும் கும்பல் ஒரு புறமும் காங்கிரஸ் கட்சியை அழித்து திராவிட கட்சிகளிடம் அடகு வைக்காமல் விடமாட்டார்கள்.
 

தமிழ் நாட்டில் நடக்கும் அரசியல் கேலிக்கூத்துகள் ,  வாசனுக்கும்  சிதம்பரத்துக்கும் இருக்கும் கருத்து வேறுபாடுகள் காங்கிரஸ் கட்சியை சந்தி சிரிக்க வைக்குமே  தவிர , சீட்டுகள் பெற்றுத்தராது .. இறுதியில், இந்த இருவருமே கிடைத்த அப்பத்தை குரங்கின் கையில் கொடுத்து என்ற கதையாக  நிற்க போகின்றனர்.. என்னே இந்த கொடுமை ?தனியாக   நின்று தேர்தலை சந்தித்தால் இவர்களோட வண்டவாளம் ,  திறமை தெரிந்து விடும். காங்கிரஸ் தலைவர்கள் 
அனைவரும் திண்ணை பேச்சு வீரர்கள். வீராப்பு பேசுற கார்த்திக் சிதம்பரம் தனியா போட்டி போட முடியுமா? . வாசன், தைரியம்   இருந்தால்  நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியிருக்க வேண்டும். ஆனால் அவர் என்ன செய்தார்  கொல்லைப்புற  ராஜ்ய சபா MP ஆகிவிட்டார்.இல்லையெனில் தங்கபாலு,இளங்கோவன்,மணிசங்கரய்யர் இவர்கள்  வரிசையில் இருந்துருப்பார். தொகுதிக்கு 10 வோட்டு வைத்திருக்கும் காங்கிரஸ், இவர்கள் பேசும் பேச்சுக்கு ஒன்றும் குறையில்லை.இவர்கள் பேச்சை குறைத்தாலே போதும் இந்தியா  முன்னேறிவிடு நாடும் நல்லா  இருக்கும்.இது எல்லோருக்கும் தெரியும்.
 
   தமிழகத்தில் காமராஜர், மூப்பனார், ஆகியோரால் முடியாததை,
தொண்டர்கள் இல்லாத { ஏன் என்றால்  எல்லோருமே தலைவர்கள் } இந்த வேட்டி கிழிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் வெங்காயங்கள்  தமிழகத்தில் காமராஜர் ஆட்சிய  கொண்டு வர போகுதாம்.  மத்தியில் இன்னும் மெஜாரிட்டி இல்லை . இதெல்லாம்  பேசுற  பேச்சா இது?, வெட்கமாக  இல்லையா? ADMK  DMK போடுற பிச்சைகளை வாங்கிட்டு மரியாதைக்கு ஒரு ஓரமா கதரை கட்டிக்கிட்டு  இருக்கவேண்டிய  காங்கிரஸ், தமிழகத்தில் காமராஜர் ஆட்சிய  கொண்டு வர போகுதாம்.  காங்கிரஸ்  சென்ற முறை கொடுத்த தொகுதிகளில்  ஜெயிக்க துப்பு இல்லாத காங்கிரஸ்காரன், திராவிட கட்சிகளை விட்டு விலகி  தனியே தேர்தல்களை சந்தித்தால்  அப்போது தெரியும் இவர்கள் வண்டவாளம் தமிழகத்தில் காங்கிரஸ் முழுவதுமாக செத்து விடும். இவர்கள்  பேசுற காமடி தாங்கமுடியவில்லை .
 

தமிழகத்தில் 1967ம் ஆண்டே காங்கிரஸ் முக்கால்வாசி செத்து விட்டது. இந்த சாதனையினை நிகழ்த்தியதில் எம்.ஜி.ஆரின் பங்கு மிகவும் அதிகம். இன்னும் சொல்லப் போனால் அவர் செய்த சாதனைகளிலேயே மிக மிக  சிறந்தது காங்கிரசுக்கு சாவு மணி அடித்தது தான். ஏதோ திராவிட கட்சிகளின் புண்ணியத்திலும் மத்தியில் தங்களுடைய ஆட்சி அதிகாரத்தினை கொண்டும் கொஞ்சம்  உயிர் எஞ்சியுள்ளது.  

மெகாஊழலை குண்டு ஊசியில் ஆரம்பித்து காமன்வெல்த் போட்டி  வரை ஊழல்களில் திளைத்து நாட்டின்பொருளாதாரத்தினை பெருமளவில் சுரண்டிய, சுரண்டி கொண்டிருக்கின்ற,  காங்கிரஸ் கட்சி நம் மாநிலத்தில் வீழ்ந்தது தமிழக மக்களின் அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்...

1 comment:

Thamizhan said...

காந்தியார் சொன்னபோதேக் காங்கிரசைக் கலைத்திருக்க வேண்டும்.ஊழலின் ஆரம்பமே காங்கிரசின் பாடந்தான்.முதலில் ஊழலுக்காகப் பதவி விலகியவர் சாட்சாத் கிருஷ்ணமாச்சாரிதான்.தமிழர்களின் முதல் எதிரி காங்கிரசு தான்.காமராசர் காப்பாற்றிய காங்கிரசில் சர்வாதிகாரி இந்திரா பெரோசு ...(காந்தி, காந்தியார் அந்தத் திருமணத்திற்காகக் கொடுத்த ஓசிப் பெயர்)காமராசரை எப்படி அவமானப் படுத்தினார். அனைத்துத் த்மிழின உணர்வாளர்களும் ஒன்று சேர்ந்து செய்யும் ஒரே நல்ல செயல் காங்கிரசிற்குக் கல்லறை சே! அது கூடத் தேவையில்லை, புதைப்பதுதான்.