Sep 19, 2010

ஒவ்வொரு தமிழன் தலைக்கும் ரூ.10000 .00

பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போடப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு, தடுப்பூசி இலவசம்' என, தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
 மருத்துவ சேவை என்பது அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக செய்ய வேண்டும்.என்பதே அனைவரின் எண்ணம் . தமிழ் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு ஆனால் வருமான வரம்பு உயிர் காக்கும் மருத்துக்கு!(150 ரூபாய்க்கு)
 பல தலைமுறைப் பணக்காரர்களாக, பட்டதாரிகளாக இருந்திருந்தாலும் இட ஒதுக்கீடு, வருமான வரம்பின்றி!
ஆனால் வருமான வரம்பு உயிர் காக்கும் மருத்துக்கு!(150 ரூபாய்க்கு)
  வருமான வரம்பில்லாமல் எல்லோருக்கும் இலவச டிவி!
ஆனால் வருமான வரம்பு உயிர் காக்கும் மருத்துக்கு!(150 ரூபாய்க்கு)
சினிமா துறை கலைஞர்களுக்கு 98 ஏக்கரில் வீடு கட்டி தருவது முழுவதும் இலவசம் !
ஆனால் வருமான வரம்பு உயிர் காக்கும் மருத்துக்கு!(150 ரூபாய்க்கு)
தமிழக மக்களுக்கு இலவச காப்பீடு 2000 கோடியில்  இலவசம் !
ஆனால் வருமான வரம்பு உயிர் காக்கும் மருத்துக்கு!(150 ரூபாய்க்கு)
3000 மதிப்பு உள்ள TV ய இலவசமா கொடுக்குற ர் ஆனால்  150 ரூபாய்க்கு பன்றிக் காய்ச்சலுக்கு
இலவசமா மருந்து கொடுக்க முடியாதா?
 இந்த இலவச ஊசியும் அந்த அம்மா  ஜெ.வின் கடுமையான கண்டன அறிக்கைக்கு பின்பே!
ஏழைக்கு மட்டும்  இலவசம்னு அறிக்கை விடுகிறார். பன்றிக் காய்ச்சல் ஏழை, பணக்காரன்னு பாத்துட்டு வராது.
   அனைவருக்கும் இலவசம் என கூற வேண்டியது தானே
யாரோ சொனார்கள் , குறை சொல்கிறார்கள் என்கிறார் . ஆனால் இவர் குறை சொன்ன  ஜெ- ன்
 வார்த்தைகளை  அல்லவா  உண்மை ஆக்கியிருக்கிறார் .
இது வரை இலவசமாய் ஊசி போடவில்லை என்பதே ஜெ - ன் குற்றசாட்டு .
அதை முதல்வர் மறுக்கவில்லை ; மறைக்க பார்க்கிறார் .
அதோடு , போன ஆட்சியில் என புள்ளிவிவரம் சொல்கிறார் .
  மகாபாரதத்தில் வரும் காந்தாரி, குழவிக் கல்லை எடுத்து வயிற்றிலே குத்திக் கொண்டதைப் போல சிலர், "தமிழகத்தில் சுகாதாரத் துறையே சரியில்லை' என அறிக்கை விடுத்துள்ளன என,கருணாநிதி கூறியுள்ளார்.
 அந்த காந்தாரியாவது குழவிக் கல்லை  எடுத்து தன் வயிற்றில் குத்திக்கொண்டாள், ஆனால் தாங்கள்(முக) குழவிக் கல்லை  எடுத்து தமிழ் நாட்டு மக்களின் வயிற்றில் அல்லவா அடித்துக்கொண்டிருக்கிறார்.
 இந்த DMK அரசு உலக வங்கியிலிருந்து இதுவரை வாங்கிய கடன் 1 லட்சம் கோடியை   தாண்டி விட்டது.
ஒவ்வொரு தமிழன் தலைக்கும்  ரூ.10000  கடன்காரன் ஆக்கி விட்டார்  இலவசத்தின் சிகரம் கருணாநிதி .
இதுக்கு பேர்தான் குழவிக் கல்லை எடுத்து தமிழ் நாட்டு மக்களின் வயிற்றில் சரியாய் குத்துவது என்பதா?.
எது அவசியம் எது அனாவசியம் எனக்கூட வரையறை செய்யத்தெரியாத தமிழக அரசு,அதன் தலைமை மு.க.

2 comments:

●பொம்மலாட்டம்ღ said...

அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம் ..... உங்கள் மனசிடம் இந்த செய்தியை சொல்லுங்கள்... அது உங்களுக்கு பதில் சொல்லும்.....அருமை தோழரே ...!!!!

Unknown said...

அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம்