Apr 5, 2011

தமிழனை முட்டாள் ஆக்கும் ஸ்டாலின் தந்திரம்..

அம்மா தாயே காப்பாத்து.
"நாம் சாதனையை சொல்லி ஓட்டு கேட்கிறோம். பயன்பெற்ற மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். இதனால் ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது,'' துணைமுதல்வர் ஸ்டாலின் பேச்சு.

எது சாதனை? 

மின்சாரமென்றால் என்னவென்று கேட்கும் அளவிற்கு மக்களை அலையவிட்டதா சாதனை?.

ஈழத்தில் தமிழினமே அழிய காரணமான கொலைக்கார சோனியா காந்தியுடன் கூட்டு வைத்துக்கொண்டது சாதனையா?. 

தன் குடும்பம் மட்டுமே அரசு என தன் மகன்கள், மகள், வாரிசுகளை மட்டுமே பதவிகளை கொடுத்து தமிழ் நாட்டையே குட்டி சுவராக செய்தது  சாதனையா?.  

இலவசம் இலவசம் என சொல்லி ஓட்டு கேட்பதா சாதனை?

கலர் டிவி கொடுத்து அரசின் கடனை அதிகரித்தா சாதனை? 

காங்.சுக்கு 63 சீட்டு தர முடியாது என சொல்லி விட்டு பின்பு சோனியா கால்களில் மண்டி இட்டதா சாதனை? 

தன் சாதனையான மாபெரும் ரெண்டு லட்சம் கோடி ஊழல்(ஸ்பெக்ட்ரம் ஊழல்) செய்து தமிழனை அவமான படுத்தியது சாதனையா?  

மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்து இந்தியாவையே உலகின் முன் தலை குனிய வைத்தது  சாதனையா?. 

அதுவும்   இலவசம் இலவசம் என மக்களுக்கு பிச்சை போட்டதைப்போன்று  கூவி கூவி கூறி தற்பெருமை பட்டு கொள்ளும் இந்த ஊழல் மன்னனை என்னவென்று சொல்வது. 

தோல்வி பயம் யார் முகத்தில் தெரியுதுன்னு உங்க மூஞ்சிகளை பார்த்தாலே நல்லாவே தெரியுது. அப்பன் இப்பவே என்னடானா தோத்தாலும் உங்களை மறக்க மாட்டேன்னு மக்கள்  காலை பிடிச்சு கெஞ்சுறாரு. மூஞ்சிய சோகமா வச்சுகிட்டு ஓட்டுக்கு உருகிறாரு, தன் வினை தன்னை இப்போது தான் சுடுகிறது என்பதுபோல பாவம் அழுவாத குறையாய் மக்களின் முன்னே கபட நாடகம் நடிக்கிறாரு.

இது வரை நான் தோற்றுவிட்டால் உங்களை மறக்க மாட்டேன் என்று ஜெயலலிதா பேசவே இல்லையே? இது நாள் வரை உங்களுடையே தேர்தல் அறிக்கையை அவர் விமர்சிக்கவே இல்லையே?

நீங்க தானே அப்பனும்,மகனும்,மற்ற கூட்டணி தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தினமும்,அதிமுக தேர்தல் அறிக்கையை விமர்சிக்கிறீர்கள்? 

ஜெயலலிதா  ஸ்ரீரங்கத்திற்கு ஒரே ஒரு முறை பிரசாரம் செய்துவிட்டு, தமிழ்நாடு முழுவதும் பிரசார சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்,

நீங்கள் ஏன் இரண்டு நாளைக்கு ஒரு முறை கொளத்தூருக்கு விசிட் அடிக்கிறீர்கள் என்று  சொல்ல முடியுமா? 

அனைத்து பத்திரிக்கைக் கருத்து கணிப்புகளும் அதிமுக  கூட்டணிபெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளது, ஒரே ஒரு பத்திரிக்கை கூட திமுக வெற்றி பெரும் என்று குறிப்பிடவில்லையே? 

நீங்க தான் அது பொய்,இது பொய், யாரும் நம்பாதீர்கள் என்றுவாய்கிழிய கூப்பாடு போட்டீர்கள்.

இது வரையில் ஜெயலலிதா பிரசாரத்தில் ஒரு வாய்ப்பு கொடுங்கள்  எனக்கு என்று கெஞ்சவில்லையே?

நீங்கள் தானே கெஞ்சுகிறீர்கள்.திமுக,விற்குத் தான் உள்ளுக்குள் பயம் தாண்டவமாடுகிறதே தவிர 

அதிமுக.விற்கோ,ஜெயலலிதாவுக்கோ இல்லை.
 

5 comments:

ராஜேஷ், திருச்சி said...

HA HA HA HA HA HA HA HA HA ... vavutherichal

ராஜேஷ், திருச்சி said...

அம்மா கொடநாடு ரெஸ்ட் எடுக்க ஓடி போய்டுவா

Unknown said...

சபாஷ்...... சரியான சவுக்கடி...

ராஜ நடராஜன் said...

//ஒரே ஒரு பத்திரிக்கை கூட திமுக வெற்றி பெரும் என்று குறிப்பிடவில்லையே? //நக்கீரன்!

ramalingam said...

சுப்பரப்பு. இப்படித்தான் இந்தியா ஒளிர்கிறது என்று சொல்லியே அந்த தேர்தலில் தோற்றார்கள் பாரதீய ஜனதா.