Oct 23, 2011

அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா.விஜயகாந்த் அறிக்கை.

தேர்தலுக்கு முன்னாடி தேமுதிக விஜயகாந்த் பேசிய பேச்சு என்ன? விட்டசவால் என்ன?
மக்கள் முன் நடித்த நாடகம் என்ன?
உள்ளாட்சி தேர்தலில் எனக்கு ஒருமுறைஆட்சிஅமைக்க வாய்ப்புதாங்க என உளறிய பைத்தியகாரதனமான பேச்சு என்ன?  
நாங்க தான் டாப்பு. நாங்க தான் கீப்பு அப்படின்னு உளறினது என்ன?.
இப்ப அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், இப்படி சொல்றாரு.


இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை.

"தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். நான் சென்ற ஒவ்வொரு இடத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து எனது கருத்துக்களை எடுத்துச்சொல்லும் வாய்ப்பினை பெற்றேன்.

நீங்க சொன்னீங்க ஆனா மக்கள் கேட்டுக்கொண்டார்களா? என்பதுதான் கேள்வி. அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா.


இதன் மூலம் தமிழ்நாட்டில் தேமுதிக ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்து வருகிறது என்பதும், அதனுடைய சின்னமான முரசு சின்னம் தமிழ் நாட்டில் மூலை, முடுக்குகளில் எல்லாம் ஒலிக்க ஆரம்பித்து விட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

உள்ளாட்சியில் முரசு எங்கேயும் ஒலிக்கவில்லையே? உங்களுக்கு மட்டும் கேட்குதோ.

இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஓயாது உழைத்த கழகக் கண்மணிகளுக்கும், ஆதரவாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது இதயமார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஓய்வு எடுத்து கொண்டவர்களுக்கும் ஓட்டமெடுத்தவர்களுக்கும்.ஓட்டுபோடாத பொதுமக்களுக்கும் நன்றியா?

பொதுவாக ஆளும் கட்சி உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவது வாடிக்கை. அரசின் நலத் திட்டங்களுக்கும், உள்ளாட்சி மன்றங்களுக்கு அளிக்கின்ற நிதியுதவியும் அப்பொழுது தான் வந்து சேரும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் உண்டு. அதுவும் இந்த ஆட்சிப் பொறுப்பேற்று 5 மாதங்கள் கூட ஆக வில்லை.

மக்களாக மனமுவந்து அளித்த தீர்ப்பு இது தெரியுதில்லை.
அப்பால ஏன்யா இப்படி ஆர்ப்பாட்டம்.

இந்தச் சூழ்நிலையில் இந்த ஆட்சியின் மீது உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் நம்பிக்கை வைப்பதும், அரசின் நலத்திட்டங்கள் தங்களுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்ப்பதும் இயற்கைதான்.

வாக்காளர்களின் எதிர்பார்ப்பு தெரிந்தும் அப்புறம் ஏன் எனக்கு வாய்ப்பு தாங்க என அலம்பல் விட்டிங்க

ஆகவே, இந்தத் தேர்தல் முடிவுகளில் எந்த வியப்பும் இல்லை. தமிழ்நாட்டு அரசியலில் தேமுதிக தனக்கென ஒரு அரசியல் பாதையை வகுத்துக் கொண்டுள்ளது என்பதும், தேமுதிக துவங்கப்பட்ட நாளில் இருந்து கடந்த சட்டமன்றத் தேர்தல்களைத் தவிர, பல தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டே பழக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

தனிபாதை அல்ல தடுமாறுகின்றபாதை. தனித்து நின்று தற்கொலை செய்த்து தான் சாதனையா?

தமிழ்நாட்டு மக்களிடையே அங்கீகாரம் பெற்ற அரசியல் சக்தியாக வளர்ந்து வருகிறது என்பதும், இன்றைய இளைஞர்களின் மாபெரும் இயக்கமாக மலர்ந்து வருகிறது என்பதும் வரலாறாகும்.

அரசியல் அங்கிகாரம் ஜெ.ஜெ.வால் கிடைத்தது. ஏங்க பண்ருட்டியாரே நீங்களாவது சொல்லக்கூடாதுங்களா.

விவசாயி தனது விளை நிலத்தில் பயிரிடுகிறபொழுது ஒரு மகசூல் பொய்த்துப் போகிறது என்பதாலேயே, விளைநிலமும் கெட்டு விடுவதில்லை. விவசாயியும் நம்பிக்கையை இழந்து விடுவதில்லை. அடுத்த மகசூலுக்கு அவர் தயாராவது இயற்கையே.

அடுத்த கட்சியின் மகசூலை அள்ளிகொண்டு போனவர், தனது கட்சியான வரண்ட பூமியில் அடுத்த மகசூலை எதிர்பார்கிறாராம். எவ்வளவு முயன்றாலும் பலன் பூஜ்ஜியமே.

அதுபோல் தேமுதிக தமிழ்நாட்டு மக்களுக்காக, அதுவும் குறிப்பாக ஏழை, நடுத்தர மக்களுக்காக தொடர்ந்து தொண்டாற்ற தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதான் நீயும் வேணாம் உங்க கட்சியும் வேணாம்னு மக்கள் நெத்தியடி அடித்து விட்ட பின்னாடியும் புலம்பறீங்க.வடிவேலு காமெடி போல,


பண பலம், படை பலம், ஆசாபாசங்களுக்கு ஆட்படுதல் போன்றவற்றையெல்லாம் மீறி, தேமுதிக அணியினருக்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு எனது இதய மார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

இவருக்கு ஓட்டு போட்டால் மக்கள் அறிவாளிகள். இவரை ஓட, ஓட விரட்டி அடித்தால் மக்கள் பண பலம், படை பலம், ஆசாபாசங்களுக்கு மயங்கியவர்களா?என்ன புத்தி தடுமாற்றமா?

No comments: