Showing posts with label சோனியா. Show all posts
Showing posts with label சோனியா. Show all posts

Aug 16, 2010

சோனியா ஏன் தொகுதி நிதியை செலவு செய்யவில்லை .



இந்திய திரு நாட்டின் உயர்ந்த அமைப்பான பார்லிமெண்டின் மேன்மை மிகு எம் .பி. கள் 540 பேர்களில் சுமார் 130 பேர் தங்களது தொகுதி வளர்ச்சி நிதியில் ஒரு ரூபாய் கூட தாங்கள்  தேர்வு பெற்ற தொகுதிக்கு செலவு செய்யவில்லை.
ஒரு எம் பி. இக்கு, ஆண்டுக்கு 2 கோடி வழங்கப்படுகிறது. அதில் இவர்கள் பொறுப்பு ஏற்றதில் இருந்து தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்த வில்லை என்பதை படித்த உடன் மனம் மிக  மிகவும் சங்கட பட்டது. ஏன் அந்த 130 தொகுதிகளும் அனைத்து வித வசதிகளும் பெற்று விட்டதா?. தொகுதி முழுவதும் தன்னிறைவு பெற்று இந்தியாவின் முன்மாதிரி  எம். பி. தொகுதி ஆகிவிட்டதா?.இதில் கொடுமையான விஷயம் இந்த 130 பேரில், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா ,B J P தலைவர் L K  அத்வானி, லாலு பிரசாத் யாதவ்  போன்ற முக்கியமானவர்களும்,  தங்கள் தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்த வில்லை என்பது  அதிர்ச்சி தரும் தகவல்.
அத்வானிக்கு தான் பிரதமர் ஆக  முடியவில்லை எனும் வருத்தம்.அதனால் செலவு செய்யவில்லையா?.
பீகார் முதல்வர் ஆக முடியவில்லை என வருத்த பட்டு லாலு பிரசாத் யாதவ் செலவு செய்யவில்லை .
சரி ஆனால் திருமதி சோனியா ஏன் தொகுதி நிதியை செலவு செய்யவில்லை .
இவருக்கு பதவி,அதிகாரம், ஆட்சி என சகல வசதிகளும் இருந்தும் மக்களுக்கான உதவி செய்ய வேண்டும் என அவர்எண்ணவில்லையே?.தன்னை போலவே தான் தொகுதி மக்களும் சகல வசதி வாய்ப்புகளுடன் சுகமான வாழ்க்கை வசதி பெற்று வாழ்கிறார்கள் என்ற நினைப்பு காரணமா?. அல்லது காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போட்  பாவத்திக்கான தண்டனையா?
சரி இவர்கள் தவிர மற்றவர்கள் ஏன் இப்படி?. இந்தியாவின் தலைவிதி, இவர்கள் எல்லாம்  இந்திய நாட்டின் மக்கள் பிரதிநிதிகள். கடவுள் தான் இந்த நாட்டின் மக்களை காப்பாற்ற வேண்டும்.