May 1, 2012

இலங்கை தமிழ் மக்களுக்கு கருணாநிதி செய்த துரோகம்

2009-ம் ஆண்டு இலங்கையில் உச்சகட்ட போர் நடைபெற்றபோது ஒன்றும் செய்யாமல் இருந்ததாக என்னை விமர்சிப்பவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை' என்று கருணாநிதி சொல்லியிருப்பதை விட அதற்காக மன்னிப்பு கேட்டிருந்தால் சற்று உயர்வாக மதிப்பிட முடியும்

ஆனால் 2009 ஆம் ஆண்டில் தமிழ் ஈழத்தில் இனவெறி சிங்கள படைகள் கொத்து கொத்தாக ஈழ தமிழ் மக்களை கொன்று குவித்து கொண்டிருந்தபோது தமிழ் நாட்டில் உண்ணாவிரத கபடநாடகம் ஆடிய அப்போதைய முதல்வர் கருணாநிதியை  மன்னிக்க முடியாது.  

நீங்கள் செய்த தமிழ் இன துரோகத்தை விட இந்த உலகில் இலங்கை தமிழ் மக்களுக்கு துரோகம் செய்த ஒரு தலைவர் உண்டா உங்களை தவிர?. 

தன் மகன்கள் அடித்துக்கொள்வதை தவிர்க்கவும்,திசை திருப்பவும்  மு.க. தற்போது கையில் எடுத்து உள்ள ஆயுதம் தான் டெசோ எனும் ஈழதமிழர் பிரச்சனை

 எப்படியோ அடுத்த நான்கரை ஆண்டுக்காலம் அரசியல் பிழைப்பு நடத்த, நல்ல அரசியல் வியாபாரம் செய்ய காரணம் கிடைத்து விட்டது .

No comments: