Oct 22, 2010

தமிழக ஆட்சியை பிடிக்க திட்டம் போடுகிறது இ.காங்.



மதசார்பு முத்திரை குத்தப்பட்ட BJP ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க  வேண்டும் என்ற வெறியில் தேவகவுடா அணியும்,சோனியா அணியும் வரிந்துகட்டிகொண்டு வேலை பார்க்கிறது.இவர்களின் இந்த செயல் அரசியல்களத்தை சாக்கடை நாற்றமெடுக்க செய்துள்ளது.


ஆறுஆண்டுகள் தேர்தலில் நிற்க்கூடாது,உடனே பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டும் என்பது அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு. உடனே பதவி விலகாத இந்திரா, எனது இ.காங்.பெரிய தேசிய கட்சி அடுத்த பிரதமரை தேர்வு செய்ய எனக்கு 15 நாள் அவகாசம் என நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி அதை தவறாக பயன்படுத்தி உடனே அவசர நிலையை பிரகனபடுத்தினார்.


புதுச்சேரியில் பதினொன்றை விட பத்து என்ற எண்ணிக்கை பெரியது எனும் புது இலக்கணம் மூலம் ஆட்சியை காப்பாற்றி புதிய ஜனநாயக இலக்கணம் படைத்தார் இ.காங்.கவர்னர்.காமிரெட்டி.


ஆந்திராவில் என்.டி.ராமாராவ் அவர்களை முதல்வர் பதவியில் இருந்து கவிழ்க்க பாஸகர் ராவ் எனும் புல்லுருவி மூலம் இ.காங்.ஆட்சி.


தமிழகத்தில் எம்ஜிஆர்,கருணாநிதி என இருவரையும் படாதபாடு படுத்தி ஆட்சியை கவிழ்த்து இ.காங்.


கடந்த 40 ஆண்டுகளாகவே எதிர் கட்சி ஆட்சியை கலைப்பது, கவிழ்த்து விடுவது என செயல்படுவதே இ.காங்.க்கு கை வந்த கலையாக உள்ளது. இப்போது இந்த ஈனதனமான திருவிளையாடலை மறுபடியும் கர்நாடகத்தில் விளையாடி பார்க்க துடிக்கிறது இ.காங்., தேவகவுடா எனும் ஈனபிறவியுடன்.


தேவகவுடா,சந்திரசேகர்,சரண்சிங்,குஜ்ரால் தலைமையிலான மத்திய அரசுகளை கவிழ்க்கபட்டதும், நம்பவைத்து கழுத்தை அறுத்த்தும் இதே காங்.கட்சி தான்.சூடுசுரணையற்ற தேவகவுடா இப்போது இ.காங்.உடன் கைகோர்த்து கொண்டு கர்நாடகத்தில் ஜனநாயக படுகொலை செய்கிறார்.


ஜனநாயகத்தை காப்பேன் என்று பதவி ஏற்றுக்கொண்டு அந்த உறுதிமொழியை காலில் போட்டுமிதித்து ஜனநாயகத்தை படுகொலை செய்யும் இடத்தில் இ.காங். இருப்பதே அவர்களின் அரசியல்சித்துவிளையாடல்களுக்கு முக்கிய காரணம். ஆட்சி கவிழ்ப்பு கலையில் கைதேர்ந்த இ.காங்.இப்போது தமிழகத்திலேயும் வரும் சட்டமன்ற தேர்தல் மூலம் தமிழக ஆட்சியை பிடிக்க திட்டம் போடுகிறது என்பதனையே திருச்சி பொதுகூட்டபேச்சுக்கள் மூலம்தெளிவாகிறது.

3 comments:

G.V. Sharma said...

இவர்களுக்கு எல்லாம் சூடு சுரணையே கிடையாது . என்ன ஜென்மங்களோ.

Nagarajan salem said...

காங்.கட்சியின் கேப்மாரி தனமான செயல்பாடுகளுக்கு மக்கள் வரும் சட்டமன்ற தேர்தல் மூலம் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

erodethangadurai said...

வலைபூவிலும் அரசியலா ?