Jun 30, 2011

ஐயோ! கொல்றாங்களே,கொல்றாங்களே.


புதிய தலைமைச் செயலக கட்டுமானம் குறித்து விசாரிக்க, தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்துள்ளதை கடுமையாக விமர்சித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

ஒரு ஊழலை விசாரிக்க விசாரணை கமிசன் அமைத்ததற்கே இப்படின்னா இன்னும் நிறைய ஒன்றன் பின் ஒன்றாக வருமே ! தவறு நடந்திருப்பதால் தீர்ப்பு எப்படி வரும்னு முன் கூட்டியே அனுமானித்து அறிக்கை விட்டிருக்கிறார்.

நிச்சயம் அந்த தண்ணீர் டாங்க் சட்டமன்றம் இருநூறு கோடி ரூபாய் தான் இருக்கும், மீதம் உள்ள 1000 கோடி ரூபாயை ஸ்வாகா செய்துள்ளார்கள், அதனால் கருணாநிதி பதட்டமாக உள்ளார். இது மட்டுமா, விசாரணை கமிஷன் அமைத்தால், இன்னும் தோண்ட தோண்ட ஊழல்கள் வெளிவந்துகொண்டே இருக்கும். விசாரணை கமிஷன் என்றவுடன் பயம், நடுக்கம் வந்துவிட்டது போலும். அதனால் நிச்சயம் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது இவரின் பயத்திலிருந்து நிச்சயமாக நிரூபணம் ஆகிறது

யார் விசாரித்தால் என்ன..? உமது வசதிக்கெல்லாம் "வாங்கப்பட்ட" நீதி மான்களை கொண்டு விசாரிக்க சொல்ல முடியாது..! 450 கோடி பட்ஜெட்டில் உருவான கட்டிடம் என்றாலே யாரும் நம்ப தயாரில்லை என்கிறபோது..1200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த மயான கட்டிடத்தை பற்றி விசாரித்தால் யார் இதனை கட்டி தருகின்றார்கள் என்கிற உண்மை தெரியும்..! எதற்காக இவர்கள் இவ்வளவு பணத்தை போட்டு கட்டி தர காரணம் என்ன என்கிற "ரகசியம்" ஊருக்கு தெரிய வேண்டாமா.?மடியில் கனம் உள்ளதால் தான் இந்த புலம்பல். 

குற்றமுள்ள நெஞ்சு நீதியைப் பார்த்து குறுகுறுக்கிறது. இப்போதே அலறல் துவங்கிவிட்டது.? கொல்றாங்களே கொல்றாங்களே இரண்டாம் பாகம் வரும்னு பயம்.

1 comment:

Yoga.s.FR said...

ஐயோ,கொல்லுறீங்களே! கொல்லுறீங்களே!