Mar 2, 2012

சோனியா காந்தியின் தீடீர் மனமாற்றம் ஏன்.

தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல் பிரசாரங்களில், சோனியா தீவிரமாக ஈடுபட்டாலும், அரசியலில் இருந்து மெதுவாக அவர் ஒதுங்குகிறாரோ என்ற சந்தேகம், டில்லி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

 ராஜிவ் காந்தி பவுண்டேஷன், இந்திரா காந்தி டிரஸ்ட், தீன்மூர்த்திபவன் மெமோரியல் என பல அமைப்புகள், சோனியா குடும்பத்தினர் வசம் உள்ளது.

இந்த அமைப்புகளில் பிரியங்கா உறுப்பினராக உள்ளார். கோடிக்கணக்கான பணம் புரளும் இந்த அமைப்புகள், பிரியங்காவின் மேற்பார்வையில் இருக்க வேண்டும் என்பது சோனியாவின் விருப்பம்.

அதே சமயம் மகன் ராகுல், மேலும் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு பலவித பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்கிறார் சோனியா காந்தி.

தான் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று சோனியா விரும்புவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

No comments: