Mar 23, 2012

இந்தியாவின், சோனியாவின், காங்கிரஸின் பச்சைதுரோகம்.


எப்படி தமிழனுக்கு ஆதரவு தர சோனியாவின் காங்கிரஸ் அரசு சம்மதம் தெரிவித்தது என்று ஆச்சரிய பட்டனர் தமிழ்நாட்டு மக்கள்.  இப்போது புரிகின்றது எட்டு கோடி தமிழர்களை மடையனாக்கி விட்டது இந்த காங்கிரஸ் அரசு.

காங்கிரஸ் தனது குள்ள நரி வேலையை பார்த்து விட்டது. உலக நாடுகள் எந்த விசாரணைகள் செய்யபட்டலும் அது சிறிலங்காவின் அனுமதியுடன் தான் செய்ய வேண்டும் என்ற ஒரு வரியை அதில் இணைத்து விட்டு அமரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்து விட்டது.

இதனால் எந்த சுயாதீனமான விசாரணைகளுக்கும் அங்கு இடமில்லை. ஸ்ரீலங்கா விரும்பாமல் எந்த துரும்பையும் நகர்த்த முடியாது. இதில் இந்தியா மீண்டும் ஸ்ரீலங்கா நண்பன் என்பதனை நிருபித்தும், தனது ஈழதமிழர்களின் விரோதி,எதிரி என்பதை நிருபித்துமீண்டும் தமிழர்களுக்கு பச்சை துரோகம் செய்து விட்டது.

தமிழர்கள் இன்னும் சாகத்தான் வேண்டுமா? தமிழர்களுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை ராஜபக்ஷவுக்கு சாதகமாக்கிய  இந்தியாவின், சோனியாவின், காங்கிரஸின் பச்சைதுரோகம்.சதியே இது. வெண்ணை திரண்டு வரும் பொது சட்டியை உடைத்ததுவிட்டது காங்கிரஸின் இந்திய அரசு.





2 comments:

Robin said...

எல்லாரையும் எதிர்த்து எதிரிகளாக்குபவன் தன் இலட்சியத்தில் வெற்றி பெறமுடியாது.

விஜய் said...

//எல்லாரையும் எதிர்த்து எதிரிகளாக்குபவன் தன் இலட்சியத்தில் வெற்றி பெறமுடியாது. //

நம் நாட்டு மக்களை (மீனவர்களை) சுட்டுக்கொல்லும்போதும் பல்லிளித்துக்கொண்டு இருப்பதால் வெற்றி பெற்று விட முடியுமா?