Showing posts with label எந்திரன். Show all posts
Showing posts with label எந்திரன். Show all posts

Oct 26, 2010

எந்திரன் திருட்டு கதையில் உருவானது. முழு விவரம்!!


 எனது கதையை திருடி எந்திரன் என்ற பெயரில் படம் எடுத்துள்ளனர் என்று படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது எழுத்தாளர் அமுதா பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை, வேளச்சேரி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் அமுதா தமிழ்நாடன். வாரமிருமுறை வெளிவரும் புலனாய்வு இதழில் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  இவர், நேற்று (25ம்தேதி) சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:



நான் எழுதிய "ஜூகிபா எனும் சிறுகதை, "இனிய உதயம் எனும் பத்திரிகையில் 1996ம் ஆண்டு ஏப்ரலில் வெளிவந்தது. தொடர்ந்து 2007ம் ஆண்டில், சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சார்பில் வெளிவந்த "திக் திக் தீபிகா என்ற புத்தகத்திலும் வெளிவந்தது. சமீபத்தில் திரைக்கு வந்த, "எந்திரன் திரைப்படத்தை பார்த்த என் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் நேரிலும், போனிலும் மற்றும் கடிதம் மூலமும், இந்த படம் என் படைப்பான "ஜூகிபா என்ற சிறுகதையை அப்படியே எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சமீபத்தில் நானும் “”எந்திரன்” திரைப்படத்தை திரையரங்கத்தில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எனது “”ஜூகிபா” கதையை மூலக்கதையாக வைத்து சினிமா சங்கதிகளான பாட்டு, சண்டை, கிராபிக்ஸ் காட்சிகளை சேர்த்து “”எந்திரன்” திரைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர்.


இந்திய பத்திரிகை பதிவாளர் முன்பு பதிவு செய்யப்பட்டு பதிவு எண் 49612/1990 கொண்ட “”இனிய உதயம்” இதழில் வெளியான காப்புரிமை கொண்ட எனது “”ஜூகிபா” கதையை என்னிடமோ, இனிய உதயம் வெளியீட்டாளரிடமோ எந்த முன் அனுமதியும் பெறாமல் மோசடி செய்து லாபம் சம்பாதிக்கும் கெட்ட உள்நோக்கத்துடன் திரைப்பட இயக்குநர் சங்கர் 1997-98-ல் தான் கற்பனை செய்தது என்று பொய்யாகக் கூறி “”எந்திரன்” திரைப்படத்தை உருவாக்கி அவரே அதன் இயக்குநராகவும் செயல்பட்டு, சன் பிக்சர்ஸும் அதன் நிர்வாக இயக்குநர் கலாநிதிமாறன் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு கூட்டு சதி செய்து “”எந்திரன்” திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளிலும் வெளியிட்டு எனது காப்புரிமையை சட்டத்திற்கு விரோதமாக உரிமை மீறல் செய்துள்ளனர்.

 இந்திய காப்புரிமை சட்டம் 1957 பிரிவு 63-ன் படி கிரிமினல் குற்றம் புரிந்துள்ள திரைப்பட இயக்குநர் சங்கர் மற்றும் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று ஆரூர் தமிழ்நாடன் கூறியுள்ளார்.

புகார் அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஆரூர் தமிழ்நாடன்,
ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்தின் மூலக்கதையை “இனிய உதயம்’ பத்திரிகையில் கடந்த 1996ஆம் ஆண்டு நான் எழுதி வெளியான “”ஜூகிபா” என்ற சிறுகதையில் இருந்து எடுத்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை ஆணையர், புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்றார்.



Oct 10, 2010

எந்திரன்! உயர்நீதிமன்றம் தடை! தமிழகஅரசு பதில்



திமுக ஆட்சியில் எல்லாமே இப்படித்தான்!  நீதி துறை ஓரளவிற்கு நியாயமாக இருப்பதால்தான் கொஞ்சமாவது மக்கள் ஆறுதல் அடையமுடிகிறது.

 
தமிழக அரசின் பதில்! ஒரு வார்த்தை விளையாட்டு என்பதை தவிர வேறொன்றும் இல்லை. முரசொலி கட்டுரையில், ஒரு பெண்ணை உயர் பதவியில் அமர வைத்து அழகு பார்க்க முதல்வர் விரும்பியதை சிலரால் பொறுக்க முடியவில்லை என்றுள்ளது. பணித்திறன், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒருமாநில டி.ஜி.பி. பெண் என்ற முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்  என்றால்  அப்போ பணிமூப்பு, அனுபவம்பணித்திறன் என்பதெல்லாம் தேவையில்லையா.  இப்படியா இடத்திற்கு தகுந்தாற்போல் மாறி மாறி பேசும் ஒரு முதல்வர்  தமிழகத்திக்கு தேவையா என்று தான் கருத வேண்டியுள்ளது....

பணித்திறன், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் மாநில டி.ஜி.பி., தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் தேர்வு நியமனம் என்பதால், பணி மூப்பு அடிப்படையில் மட்டும் செய்யப்படுவதில்லை."என்பது தமிழக அரசின் வாதம். அவர் தன்னை விட மூத்த அதிகாரிகளை விட சிறந்தவர் என்பதற்கான ஆதாரம் எதுவும் நியமன குறிப்பில் இடம் பெறவில்லை. திரு நடராஜ், திரு விஜயகுமார் ஆகியோர் பணித்திறன், அனுபவம், பணி மூப்பு அடிப்படையில் தகுதியானவர்களா? இல்லையா? என்பதை தமிழக மக்களே  அறிவார்கள் எனும்போது இது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தெரியவில்லையா ?
லத்திகா சரண் பொறுப்பேற்றது முதல்  காவல் துறையில் "தமிழகமக்களுக்கு" பாதுகாப்பு கருதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது நாடறிந்த உண்மை. கன்னி மேரி அஞ்சுகம் விவகாரம், ஆள் கடத்தல் சம்பவங்கள், கட்டபஞ்சாயத்து தாதாக்களின் அட்டுழியம்,பல்கலை துணை வேந்தருக்கு அடி உதை, ரேசன் அரிசி கடத்தல், கொள்ளை சம்பவங்கள்,சட்டக்கல்லூரிபிரச்னை, மணல் கொள்ளை, ஈரோடு ராஜாவின்  காட்டுதர்பார்  என பல சம்பவங்களை கூறலாம். கை கட்டி வாய் பொத்தி சேவை செய்ய ஒருவர் தேவை என்பதால்தான் அந்த பதவிக்கு லத்திகா சரண் நியமிக்கப்பட்டார். அந்த வகையில் அவரது நியமனம் முற்றிலும் நியாயமானதே.

திமுக அரசு திரும்ப திரும்ப உயர் அதிகாரிகள் விஷயத்தில் மூக்குடைபட்டுள்ளது. ஏற்கனவே உமாசங்கர். தற்போது நடராஜ் விவகாரம். இந்த தீர்ப்பு ஆட்சியாளர்களுக்கு ஒரு பாடம். இதற்கும்  முதல்வர் என்ன சொல்வார் தெரியுமா? நீதிபதிகள் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா என்பார். இதன் மூலம் தமிழகத்தில் பதவி உயர்வு எப்படி கொடுக்கபடுகிறது என்பதை அறியலாம். போலீஸ் துறையை தன் வசம் வைத்துள்ள திரு மு,க.விற்கு இதைவிட கேவலம் ஏதுமில்லை. வேண்டியவர்க்கு பதவி என்பது தி மு க வின் வழிமுறை. எது நடந்தாலும் கருணாநிதி பதவியை விடபோவதில்லை.இனியாவது தமிழகஅரசு தங்களுக்கு சாதகமானவர்களை பணியில் நியமிக்காமல் அரசு விதிகளின்படி நடக்குமா. பதவி நியமனத்தில் அரசியல் குறுக்கீடு இருந்தால் லத்திகாசரண் என்ன லத்தியேகூட D G P ஆகும்!.  ஏனென்றால் நடப்பது தமிழகஅரசு எந்திரத்தை இயக்கும் எந்திரன்(கருணாநிதி) ஆட்சி.. அப்பாடா தலைப்பு வந்துவிட்டது.