தன்னம்பிக்கையின் பெயர் திம்மராயப்பன்
கிருஷ்ணகிரி - ஓசூர் சாலையில் இருக்கும் சூளகிரியில் இருந்து ஆந்திர எல்லையை நோக்கி வடக்கே 15 கிலோமீட்டர் சென்றால் வருகிறது எஸ்.திம்மசந்திரம் என்றொரு குக்கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழை விவசாயி திம்மராயப்பா. 40 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இவருக்கு பிறவியிலேயே இரண்டு கைகளும் கிடையாது. ஆனாலும், தாழ்வு மனப்பான்மையை தன் நிழலருகில்கூட நெருங்கவிடாத அபூர்வப் பிறவி அவர். ஆரோக்கியமான உடலைக்கொண்ட ஒரு விவசாயி என்னென்ன வேலைகளைச் செய்வாரோ, அத்தனை வேலைகளையும் ஒருபடி கூடுதலான நேர்த்தியுடன் செய்கிறார்!
நாம் அந்தக் கிராமத்துக்குச் சென்றபோது அவர்களது 12 ஆண்டுகால மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சாட்சியாக மூன்று ஆண் குழந்தைகள் வீட்டருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
''திம்மராயப்பா உண்மையாகவே ஒரு படிக்காத மேதைதான். தன் உடம்புக் குறையை நினைச்சு மருகி வீட்டுல முடங்கிடாம, வாழ்க்கையை தன்வசப்படுத்திக்கிட்டாரு. அதுக்கப்புறம் ராயப்பன் ஒரு யோகஜாதகன் ஆகிட்டாரு. தன் கால்களையே கைகளாக்கி, விவசாய வேலைகள் எல்லாத்தையும் அசத்தலா செய்வாரு. நிலத்துல களையெடுக்கவும் பாத்தி கட்டவும் தனக்காகவே ஸ்பெஷல் கொத்து ஒண்ணு செஞ்சு வெச்சிருக்காரு. அதேமாதிரி, குடத்தின் கழுத்துப் பகுதியில ஒரு கயித்தைக் கட்டி, அதை பல்லுல கடிச்சுக்கிட்டே
Tweet | |||||
No comments:
Post a Comment