Jul 13, 2010

தமிழ் எனக்கு பண்பாட்டைகற்றுக் கொடுத்துள்ளது,கருணாநிதி.

சென்னை: ஜூலை 12,2010,எங்கெங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை, தமிழ் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது, அதனால், வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் பங்கேற்கும் விழாவில், எதையாவது எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள்,'' என, ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் நடந்த நாடக விழாவில், முதல்வர் கருணாநிதி பேசினார்.


விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது:எனக்கு வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் புதியவர்கள். இந்த மேடையில் தான் அவர்களை நேரில் பார்க்கிறேன்.  இத்தனை நாட்கள் இதைக் கேட்காமல் விட்டோமே என்ற எண்ணத்தை அவர்களின் பேச்சு ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் தமிழ்ப் பற்று, எதை பற்றி சொன்னாலும், இறுதியில் முன் இருப்பது தமிழ்தான், தமிழர்தான் என்ற உணர்வு. அந்த உணர்வுதான் நம்மை இங்கே இணைத்துள்ளது இந்த விழாவில், கருணாநிதி என்ன பேசுவார் என்ற எண்ணத்துடன் வெளியில் காத்திருப்பவர்கள் ஏமாந்து போவார்கள். எங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை நமக்கு தமிழ் கற்றுக் கொடுத்துள்ளது.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

கலைஞரின்தமிழ்பண்பாடுசிலகேள்விகள்???


காமராஜரை கேவலமா பேச தமிழா  சொல்லி குடுத்துச்சு 
அந்த பண்பாட்டை கற்றுக்கொடுத்ததும் தமிழ்தானே?... ?

ஹிந்து என்றால் திருடன் என்று பேசிய  தமிழ் பண்பாடு  எங்கே கற்றது...
 

  M.G.R பற்றி மலையாளி என்று கூப்பிடத் தூண்டியது? இவரது தமிழ் பண்பாடு.அந்த பண்பாட்டை கற்றுக்கொடுத்ததும் தமிழ்தானே?...
 


 உ வே சுவாமிநாத ஐயர் மற்றும் பாரதியின் தமிழ்த்தொண்டினைப் பற்றி பேசாத இவரது தமிழ் பண்பாடு
 

  
தமிழ் பண்பாடு பற்றிபேசும் இவர் பார்பனர்களைப் பற்றியும்,
இந்து மதத்தைப் பற்றியும் எவ்வளவு தரக்குறைவாகப் பேசியிருப்பார்?
 


 செல்வி ஜெயலலிதாவைப் பற்றி அசிங்கமாக எழுதியது அசிங்கமாக பேசியது எல்லாம் தமிழ் பண்பாடா?
.


கல்யாண வீட்டில் அரசியல் பேசும்போது தமிழ் இவருக்கு பண்பாட்டை கத்துதரவில்லையா?
  


தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தபொழுது தமிழர்கள் சோத்தால் அடித்த பிண்டங்கள் எனபேசியது எல்லாம் தமிழ் பண்பாடா?
 
 

வயதுக்கு பொருத்தமிலாத விமர்சனங்கள், பழிவாங்கும் குணம் எல்லாம் தமிழ் பண்பாடா?
 

  மக்களை சோம்பேறிகளாக ஆக்கும் இலவச பணம் மற்றும் பொருள் விநியோகம், எல்லாம் தமிழ் பண்பாடா?

அரசு கஜானாவை காலிஆகிவிட்டு கடன்  வாங்கும் குணம் எல்லாம் தமிழ் பண்பாடா? 

வயதானாலும் பதவி ஆசையை விடாத குணம், இதெல்லாம் தமிழ் பண்பாடா?.
.கலைஞரே ! தமிழ் எனக்கு பண்பாட்டை கற்றுக் கொடுத்துள்ளது  அப்படினு சொல்லி தமிழை கேவலப்டுத்தாதீர்கள்.

No comments: