Jul 19, 2010

பெட்ரோல் விலை லிட்டர் அசல்16.50.. வரி 38.50

சமிபத்தில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி மக்களின் வயத்தெரிச்சலை கட்டிக்கொண்டது மத்தியஅரசு .பெட்ரோலிய பொருட்களின் விலையை எப்போது ஏற்றினாலும் சர்வதேச சந்தையில் விலை ஏறி  விட்டது என்பது தான் வழக்கமான பதில் .ONGC, மூலம் நம் நாட்டிலேயே  25%சதம் சுயமாக கிடைக்கிறது .மீதிதேவையான 75 % மட்டுமே சர்வேதேச சந்தையில் இறக்குமதி செய்கிறோம் . அப்படிஇறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் விலை16.50 ரூபாய் மட்டுமே


ஆனால் மத்தியஅரசு வரியாக லிட்டருக்கு11.80 ரூபாயும்,மத்திய கலால்வரியாக9.75 ரூபாயும் ஆகமொத்தம் ரூபாய் 21.55வரியாக மத்தியஅரசு வசூலிக்கிறது. மாநிலஅரசு விற்பனை வரியாக8.00ரூபாயும், வாட் செஸ் வரியாக4.00 ரூபாயும் ஆகமொத்தம்12.00 ரூபாயும் வரியாக சேர்த்து பெட்ரோல் லிட்டருக்கு50.05ரூபாய் ஆகிறது. சமிபத்தில் மேலும் 3.00ரூபாய் அதிகரித்து வரியுடன் 55.00ரூபாயில் விற்கிறது . இதில் வேடிக்கை என்னவென்றால் நம் தமிழக அரசின் விற்பனைவரி மட்டும்{30%} சதவிதம் வசூலிக்க படுகிறது.30%விற்பனைவரி என்பது மிக மிக அதிகம்.


இதில் வேடிக்கை என்னவென்றால் நம் அண்டை நாடுகளில் பெட்ரோல் விலை லிட்டர் பாக்கிஸ்தான்26.00 . வங்கதேசம் 22.00. நேப்பாளம் 34.00.பர்மா 30.00. ஆப்கனிஸ்தான்36.00.  கத்தார் 30.00.  ஆனால்இந்தியாவில் 55.00ரூபாய்.


இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்து நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களின் பிழைப்பில் மிக பெரிய சங்கடத்தையும் சுமையும் உருவாகியுள்ளது . கசக்கிபிழியும்இந்த விலையேற்றம் பணவீக்கத்தை அதிகரிக்குமே தவிர குறைக்காது . எனவே மத்தியஅரசு கலால் வரியை குறைக்கவேண்டும் .  மாநிலஅரசுவிற்பனை வரியை குறைக்கவேண்டும் .

1 comment:

lcnathan said...

eazhai sol ambalam earaathu! intha kootrukkall ellam karunnanithiyin kaathukalil earaathu!!"""maanaada,mayilaada""""paarththu rasippavarukku, petrol vilai earrinaal eanna,irrangkinaal eanna!!!!???